Datuk Sri Nur Halizah and A.R.Rahman
நமது பிரபல இசையமைப்பாளர் , இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவருடைய கலைநிகழ்ச்சி நடந்து முடிந்தது.
வெற்றிகரமாக நடந்ததாகத்தான் சொல்ல வேண்டும் சுமார் 60,000 மேற்பட்ட கூட்டம் என்றால் அது வெற்றிகரமான ஓர் இசை நிகழ்ச்சி தானே!
நமது தமிழ் இரசிகர்களின் குறைபாடு என்றால் இந்த இசை நிகழ்ச்சியில் குறைந்த அளவே தமிழ்ப்பாடல்கள் பாடப்பட்டன என்பது தான். மற்றபடி அவர்கள் அதிகம் குறை சொல்லவில்லை. அதிகமாக தமிழ்ப்பாடல்களைத்தான் பாடுவேன் என்று அவர் சொன்னாலும் கடைசி நேரத்தில் ஏற்பாட்டாளர்கள் பின்வாங்கிவிட்டார்கள்! காரணம் இரசிகர்களில் பலர் பிற இனத்தவர்கள் என்பதால் நாமும் பெருந்தன்மையோடு விட்டுவிடுவோம்!
ஆனால் ஒரே ஒரு பெண்மணி மட்டும் அதிக உரிமை எடுத்துக் கொண்டு அவதூறுகளை அள்ளி வீசியிருக்கிறார்! இன்ஸ்டாகிராமில் செல்வாக்குப் பெற்ற ஒரு நபரான Fatinamyralee தனது கருத்துகளைக் கூறவில்லை; அனலை கக்கியிருக்கிறார். "நான் இந்தி பாடல்களைக் கேட்க வந்தேன் ஆனால் கிலிங் பாடலைப்பாடி எனக்குத் தலைவலியை ஏற்படுத்திவிட்டார்கள்" என்பதாக அவர் கூறியதாகச் சொல்லப்படுகிறது.
அவர் ஏன் இந்த அளவுக்கு வெறுப்புணர்வைக் கொண்டிருக்க வேண்டும் என்பது புரியவில்லை. அவர் என்ன தமிழ்ப்பாடல்களைக் கேட்காதவரா? மலேசியாவில் எங்கோ ஓரிடத்தில் தமிழ்ப்பாடல்கள் ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றன. அதிசயம் ஒன்றுமில்லை.
அவர் தமிழ்ப்பாடல்களே, அதுவும் மலேசியாவில் இருந்து கொண்டு, கேட்காதவர் என்று சொல்லிவிட முடியாது. தமிழ்ப்பாடல்களைப் பாடுபவர்களை அவர் இப்படி கீழ்த்தரமாக பேச வேண்டிய அவசியமில்லை.
பாடல்கள் என்றாலே இனிமை; காதுகளுக்கு சுகம். அந்த எந்த மொழிப்பாடல்களாக இருந்தாலும் சரி எல்லாமே ஏதோ ஒரு வகையில் நம்மைக் கவரத்தான் செய்கின்றன. பாடல்களை ரசிக்கத் தெரியாதவர்கள் கலை நிகழ்ச்சிகள் நடக்கும் இடத்திற்கு அடி எடுத்து வைக்கக் கூடாது!
என்ன செய்வது? அவருக்குக் கொஞ்ச வாய் ஜாஸ்தி! அவ்வளவு தான்!
No comments:
Post a Comment