Monday 6 February 2023

இவர்கள் தான் பில்லியனர்கள்!

 

                                மலேசிய நாட்டின் பில்லியனர்கள்

மேலே உள்ளவர்கள் தான் நமது மலேசிய நாட்டின் பில்லியனர்கள். இந்தப் படத்தில் கடைசியாக உள்ளவர் தான் டான்ஸ்ரீ ஆனந்தகிருஷ்ணன். இவர் தான் நமது நாட்டின் ஐந்தாவது பெரிய பணக்காரர். அவர் தமிழர் என்பதால் நாமும் கொஞ்சம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

இவர்கள் தான் மலேசியாவின் பில்லியனர்கள். இன்னும் இருக்கின்றனர். தேவைப்பட்டால்  பின்னர் பார்ப்போம்.

இங்கு ஏன் இந்த கட்டுரை என்றால் சமீபத்தில் நடந்த சில குளறுபடிகள். இணைய இதழ் "வணக்கம் மலேசியா" வுக்கு அளித்த ஒரு பேட்டியில் பத்துமலை கோவில் தலைவர் டான்ஸ்ரீ நடராஜா சொன்ன ஒரு கருத்தை வைரலாக்கி விட்டனர் பயனாளர்கள்! அவர் அப்படி என்ன சொன்னார்"

"நான் பில்லியனரும் இல்லை! வசதி குன்றியவனும் இல்லை! ஏழையும் இல்லை! பெரும் பணக்காரனும் இல்லை!"

இப்படித்தான் அவர் அந்தப் பேட்டியில்  அவர் கூறியிருக்கிறார்.  கொச்சையாக எதனையும் அவர் சொல்லவில்லை.

ஆனால் ஒன்றை நாம் கவனிக்க வேண்டும்.   நேர்காணல் செய்தவர் தைப்பூசம் சம்பந்தமான கேள்விகளைத் தான் கேட்டார். அவர் சரியான கேள்விகளைத் தான் கேட்டார். ஆனால்  டான்ஸ்ரீ ஏதோ அடக்கி வைத்திருந்த அனைத்தையும் புலம்பி தீர்த்து விட்டார் என்று தான் நினைக்க வேண்டியுள்ளது!

வேண்டாம்! அது பற்றி பேச வேண்டாம்! அது விவகாரமாகி விடும்!

ஓர் ஆலயத்திற்கு அதுவும் மலேசியாவின் தாய் கோயில் என்று சொல்லப்படும் ஓர் ஆலயத்திற்கு அது மட்டும் அல்லாமல் பத்து, பதினைந்து இலட்சம் தைப்பூசம் அன்று பகதர்கள் கூடும் ஓர் ஆலயத்திற்கு  ஒரு தலைவராக இருப்பது என்பது சாதாரண காரியம் அல்ல. அதுவும் 33 ஆண்டுகாலம் தலைவராக  தொடர்ந்து இருப்பதும் சாதாரண விடயம் அல்ல. 

இப்படி நீண்டகாலம் ஒரு கோயிலுக்குத் தலவராக ஐருந்தால் நிச்சயமாக எல்லா கல்லடிகளும் பட்டுத்தான் ஆக வேண்டும். அதற்கு டான்ஸ்ரீ நடராஜாவும் விலக்கல்ல. கடவுள் சக்தி தான் அவரை இப்படி நீண்டகாலம் தலைவராக வைத்திருக்கிறது என நாம் நம்புகிறோம். கோயிலில் தலைமை தாங்குபவர்கள், பணியாளர்கள் - இப்படி யாரை எடுத்துக் கொண்டாலும் ஒன்றைப் புரிந்து வைத்திருக்கின்றனர். "கோவில் சொத்து குல நாசம்" என்பதை அவர்கள் தான் அதிகமாகவே புரிந்து வைத்திருக்கின்றனர்.

தனால் அவர்களை நாம் நாம்புவோம்! கோயில் காசில் யாரும் பில்லியனர் ஆகிவிட முடியாது!  தொழிலதிபர்கள் தான் பில்லியனர்கள்!

நல்லதையே நினைப்போம்!

No comments:

Post a Comment