Friday 27 October 2017

கேள்வி - பதில் (62)


கேள்வி

ரஜினியும் சரி, கமல்ஹாசனும் சரி அரசியலுக்கு வருவது பற்றி இன்னும் உறுதியாக ஒன்றும் சொல்லவில்லையே! இது நடக்குமா?

பதில்

போகிற போக்கைப் பார்த்தால் இவர்கள் இருவருமே அரசியலுக்கு வருவார்கள் என்று தோன்றவில்லை! ரஜினி அரசியலுக்கு வருவதில் உறுதியாகத்தான் இருந்தார்.  இடையே கமல் புகுந்து குழப்பத்தை ஏற்படுத்தி விட்டார் என்று தான் சொல்லத் தோன்றுகிறது. இப்போது அவரும் இல்லை, இவரும் இல்லை என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது.

ஆனால் எதனையும் உறுதியாகச் சொல்லுவதற்கில்லை. ஒரு வேளை,  கமல் இப்படித்தான் செய்வார் என்பதை ரஜினி முன் கூட்டியே அறிந்திருக்கலாம். அரசியல் என்பது சாதாரண விஷயம் அல்ல. கமலுக்கு அரசியலில் ஒரு தெளிவு இல்லை. முன்னுக்குப் பின் முரணாகப் பேசிக் கொண்டிருக்கிறார்! அதற்கு ரஜினியே பராவாயில்லை என்று சொல்லலாம். அவர் எதிலுமே வாய்த் திறக்க மாட்டேன் என்று சொல்லுகிறார்கள்.  தேவை இல்லை! இப்போது கமல் வாய் திறந்தார். என்ன ஆயிற்று? எதுவும் ஆகவில்லை! ரஜினி அமைதியாக என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை கவனித்துக் கொண்டிருக்கிறார்.  தக்கவர்களிடம் ஆலோசனைக் கேட்டு உன்னிப்பாக அனைத்தையும் அசை போட்டுக் கொண்டிருக்கிறார். அரசியலுக்கு வர  தன்னைத்  தயார் செய்து கொண்டிருக்கிறார் என்று சொல்லலாம். 

இந்த நிலையில் கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் சொன்ன கருத்தும் யோசிக்க வேண்டி உள்ளது. கமல்-ரஜினி ஒன்று சேர்ந்தாலும் 10 விழுக்காடு வாக்குகளைத்தான் பெற முடியும் என்று கூறியிருக்கிறார். சரியாக இருக்கலாம்.  காரணம் இவர்கள் அரசியலுக்கு வருவதற்கான எந்த அடிப்படை வேலையும் செய்யவில்லை. எல்லாரும் எம்.ஜி.ஆர். ரைச் சுட்டிக் காட்டுகிறார்கள். அவர் தீடீரென அரசியலுக்குள் புகவில்லை. அவர் வருவதற்கு முன் அவருடைய திரைப்படங்களில்  "மக்களைக் காப்பாற்ற வந்த மகாத்மா" வாக  தன்னைக் காட்டிக் கொண்டார்!  ஜெயலலிதா எம்.ஜி.ஆரின் நிழல். அதனால், அதனால் மட்டுமே, அவர் இவ்வளவு நாள் நிலைத்து நின்றார்.       மற்றபடி ஜெயலலிதா வெறும் சுழியம்!   

ரஜினிக்கும், கமலுக்கு அரசியலுக்கு வர எந்தப் பின்னணியும் இல்லை. திரைப்படங்களில் கூட அப்படி அவர்கள் காட்டிக்கொள்ள  வில்லை! 

கமல் அரசியலுக்கு வர மாட்டார் என்று உறுதியானால் ரஜினி மீண்டும்,  நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லலாம். அவர் முன்  கூட்டியே சொன்னது போல் ஜனவரி மாதம் அவருடைய ரசிகர் மன்றத்தைக் கூட்டலாம்.     

அரசியலில் எதுவும் நடக்கும். யாரும் போட்டியிடலாம். வெற்றி என்பது மக்கள் கையில்! அவர்கள் தான் எஜமானர்கள்!

பொறுத்திருப்போம்!                                                                                                                                                                                                                                                                 


No comments:

Post a Comment