Wednesday 11 October 2017

சமயப் போதகர் கைது...!


சமயப் போதகர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஜொகூர் சுல்தானை விமர்சனம் செய்ததற்காக  அவர் மீது  இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.  சலவை மையம் ஒன்று "முஸ்லிம்களுக்கு மட்டும்" என்று அறிவிப்புச் செய்ததற்கு ஜொகூர் சுல்தான் கண்டனம் தெரிவித்திருந்தார். சுல்தான் செய்த கண்டனத்திற்கு எதிராக தனது கருத்தைக் கூறிய  சமயப்போதகரும், ஜாக்கிம் அதிகாரியுமான  ஷாமிஹான் மாட்ஜின் மீது காவல்துறை அவர் மீது நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

ஷாமிஹான் மாட்ஜின் அப்படி என்ன கருத்தைக் கூறினார்?


 "சீன இனத்தவர்கள் மிகவும் அசுத்தமானவர்கள். காலைக் கடன்களை முடித்த பின்னர் சுத்தமாகக் கழுவமாட்டார்கள். நாய்களைக் கட்டிப் பிடிப்பார்கள். மது அருந்தவார்கள். பன்றி இறைச்சியை உண்பார்கள்" என்னும் அவருடைய வலைத்தள காணொளி ஒன்று பரவலாக பகிரப்பட்டு வருகின்றது. அத்தோடு சுல்தானின் செயலையும் அவர் விமர்சித்துள்ளார். 

இந்த நேரத்தில் இன்னொரு செய்தியையும் நாம் கவனத்தில் கொண்டு வருகிறோம். மகன் ஒருவர்  இறந்த போன தனது தந்தையின் உடல் இஸ்லாமிய மையத்துக் கொல்லையில்  அடக்கம் செய்ததை எதிர்த்து, நெகிரி செம்பிலான் ஜாக்கிம் மீது வழக்குத் தொடுக்க விருப்பதாக அறிவித்திருக்கிறார். தனது தந்தை ஓர் இந்து என்று ஜாக்கிம் அதிகாரிகளிடம் சொல்லியும் அவர்கள்  அதனைச் சட்டை செய்யாமல் அவருடைய பெயரை வைத்து அவரைத் தாங்களாகவே முஸ்லிமாக மாற்றி மையத்துக் கொல்லையில் அடக்கம் செய்து விட்டதாக அவர் கூறியிருக்கிறார்.  ஓர் மனிதர் இறந்த பின்னரும் கூட  ஜாக்கிம்  நிம்மதியாக இருக்கவிடுவதில்லை என்பதற்கு இதுவும் ஒரு சான்று. அவர் இந்துவா, இஸ்லாமியரா என்று, இன்றுள்ள தொழில் நுட்ப வளர்ச்சியில்,  தெரிந்து கொள்ளுவதற்கு ஒரு சில நிமிடங்களே போதும். அதனைப் பயன்படுத்த தெரியவில்லை என்றால் மற்ற மதத்தினர் மீது பிரச்சனைகளை உருவாக்க வேண்டாம் என்பதே நமது வேண்டுகோள்.

மற்ற சமயத்தினரை சீண்டிப் பார்ப்பதே ஜாக்கிமிக்குக் கொடுக்கப்பட்ட வேலையாகத் தோன்றுகிறது! மாநிலங்களின் இஸ்லாமியத் தலைவர்கள் என்றால் அது சுல்தான்கள் மட்டுமே. ஜொகூர் சுல்தானைப் போல மற்ற மாநிலங்களின் சுல்தான்களும் நாட்டின் ஒற்றுமைக்காக நியாங்களைப் பேச முன் வர வேண்டும், இதுவே நாம் இங்கு வைக்கும்  வேண்டுகோள்!

No comments:

Post a Comment