Dato' Sivaraj Chandran
பிரதமர் அன்வார் இப்ராகிம் அமைச்சரவையில் மேலும் ஓர் இந்தியர் நியமிக்கப்படுவார் என்பதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன.
பாடாங் செராய் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட தயார் நிலையில் இருந்த ம.இ.கா.வின் டத்தோ சிவராஜ் சந்திரன் ஒரு சில தினங்களுக்கு முன்னர் போட்டியிடுவதிலிருந்து விலகிக் கொண்டார்.
இப்போதைய, பிரதமர் அன்வார் இப்ராகிமின் ஒற்றுமை அரசாங்கத்தில் தேசிய முன்னணி கூட்டணி முக்கிய பங்கு வகிக்கின்றது. தேசிய முன்னணி கூட்டணியில் ம.இ.கா. வும் பங்காளிக்கட்சியாக அங்கம் வகிப்பதால் இந்த நாடாளுமன்ற போட்டியிலிருந்து விலகுவது எதிர்பார்க்கப்பட்டது தான்.
"நான் மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே இந்தத் தொகுதியில் எனது வேலைகளை ஆரம்பித்து விட்டேன். அப்படியிருக்க என்னை போட்டியிலிருந்து விலகச் சொல்லுவது நியாயமல்ல!" என்று அவர் ஏற்கனவே முரண்டு பிடித்தாலும் பின்னர் ஒற்றுமை அரசாங்கத்தின் புரிந்துணர்வுக்கு ஏற்ப அவர் போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்து விட்டார். இப்போது இங்கு நம்பிக்கைக் கூட்டணிக்கும் பெரிக்காத்தான் கூட்டணிக்கும் நேரடி போட்டி ஏற்பட்டிருக்கிறது.
சிவராஜின் விலகலுக்குப் பின்னால் ஒரு சில மறைமுக புரிந்துணர்வும் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படும் என்றும் பேசப்படுகின்றது. வெகு விரைவில் அவர் செனட்டர் ஆக்கப்பட்டு அமைச்சர் ஆகும் சூழல் ஏற்படும் என்று எதிர்பாரக்கப்படுகின்றது.
நம்பிக்கைக் கூட்டணி, பாடாங் செராயில், வெற்றி பெற்றால் இது சாத்தியமாகலாம். சாத்தியமாக வேண்டும் என்பதே நமது நம்பிக்கை. பெரிக்காத்தனையும் முகைதீனையும் வளர விடுவது நாட்டுக்கு நல்லதல்ல. கொள்ளையர்களை வளரவிடுவதற்குச் சமம்! அதுவும் முகைதீன் சொல்லவே வேண்டாம்! அவருடைய குறுகிய கால ஆட்சியில் நாட்டையே கொள்ளையடித்தவர்!
அமைச்சரவையில் ஒரே இந்தியர் தானா? என்கிற கேள்வி பல தரப்பினரிடமிருந்தும் எழுப்பப்படுகின்ற ஒரு கேள்வி. அதற்குத் தக்க விடை கிடைக்கும் என்பதை நம்பலாம்.
நல்லதே நடக்கும் என நம்புவோமோ!
No comments:
Post a Comment