Monday 13 November 2023

ஞாபகம் வருதே!

 

ஓரு பழைய ஞாபகம்.  நான் வேலை செய்கின்ற காலத்தில் "ரமேஷ் சந்தர்" என்கிற பெயர் மிகவும் பரிச்சயம்.

நான் தோட்ட அலுவலகத்தில்  பணிபுரிந்த போது  புள்ளியல் துறையிலிருந்து  தொடர்ச்சியாக  மாதம் மாதம் அறிக்கைகள் வந்து கொண்டிருக்கும்.  ஒன்று நாங்கம் அனுப்ப வேண்டி வரும். அல்லது அங்கிருந்து  ஏதாவது வரும்.  ஆக, ஏதாவது தொடர்பு இருந்து கொண்டே இருக்கும்.

அப்போதெல்லாம் அதன் தலைவராக இருந்தவர்  ரமேஷ் சந்தர். வருகின்ற அனைத்து அறிக்கைகளிலும் அவருடைய கையெழுத்து போடப்பட்டிருக்கும். அதைப் பார்க்கும் போது கொஞ்சம் பெருமையாகத்தான் இருக்கும். நம் ஆள் பெரிய பதவியில் இருக்கிறாரே  என்னும்  பெருமை இருக்கும்.  அவர் ஓர் வட இந்தியராக இருக்க வேண்டும்  என்கிற எண்ணம்  இருந்தது. எப்படியோ சக இந்தியர். பெருமை தான்!

இன்னொருவரும் உண்டு. அவருடைய பெயரை ஞாபகத்திற்குக் கொண்டுவர முடியவில்லை.  வருமான வரித்துறையில் முதன்மைப் பதவியில் இருந்தவர்.அவர் தமிழராகத்தான் இருக்க வேண்டும். 

இருவருமே பெருமைக்குரியவர்கள்.  தகுதியின் அடிப்படையில் இருந்தவர்கள்.  அவர்களுக்குப் பின்னர்  யாரும் அப்படியொரு பதவிக்கு வந்ததாகத் தெரியவில்லை.

நினைத்துப் பார்க்கிறேன்! அவ்வளவு தான்!

No comments:

Post a Comment