காசநோய் (TB) எத்துணைக் கொடூரமான நோய் என்பது அதனை அனுபவித்தவர்களுக்குத் தெரியும்.
ஒரு காலத்தில் அந்த நோய் 'கட்டுப்பாட்டுக்குள்' என்று சொல்ல முடியாது அது முற்றிலுமாக நாட்டிலிருந்து ஒழிக்கப்பட்ட நோய். அதன் பின் அந்த நோயைப் பற்றியான செய்திகள் ஏதும் இல்லை என்பதே அந்த நோய் இனி இல்லை என்று நாம் ஒரு முடிவுக்கு வந்திருந்தோம்.
ஆனால் அந்த மகிழ்ச்சி நீண்ட நாள் நீடிக்கவில்லை.1990 களில் வங்காளதேசிகளின் படையெடுப்பு நிகழ்ந்தது! அந்த நாட்டில் உள்ள அத்தனை நொயாளிகளும் நாட்டிற்குள் புகுந்தனர். மீண்டும் பல நோய்கள். அதில் காசநோய் தவிர்க்க முடியாதது. அதுவும் உள்ளே புகுந்துவிட்டது! அப்போது பாதிக்கப்பட்டவர்களில் எனது நண்பனும் ஒருவன். அந்த நண்பன் இப்போதும் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறான்!
அந்த காலகட்டத்தில் காசநோய்க்கான காரணகர்த்தாவாக சொல்லப்பட்டவர்கள் வங்காளதேசிகள். அவர்களை நாட்டுக்குள்ளே அனுமதித்தவர்கள் அதாவது சரியான மருத்துவ பரிசோதனை இன்றி இங்கு வேலை செய்ய அனுமதி கொடுத்தவர்கள் நமது மலேசிய தூதரகம்!
வங்காளதேசிகள் எப்படி நாட்டை ஆக்கிரமித்தோர்களோ அதே போல அவர்களின் 'இலவச காசநோயும்' நம்முடனே ஒட்டிக்கொண்டது. இப்போது நாம் சண்டைப் போட்டுக் கொண்டிருக்கிறோம்!
ஒரு சில இடங்களில் இந்த நோய் பரவலாகிக் கொண்டு வருகிறது என்பது உண்மைதான் என்றாலும் ஆனால் அது கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக சுகாதார அமைச்சு கூறுகிறது. அமைச்சு அதனைக் கண்காணித்து வருவதாகக் கூறி வருகிறது. அமைச்சிடம் புள்ளிவிபரங்கள் இருக்கின்றன. அவர்கள் சொல்லுவதை நாம் நம்புவதைத் தவிர வேறு வழியில்லை. அவர்கள் தவறான தகவல்கள் கொடுக்க நியாயமில்லை. அவர்கள் நோக்கமெல்லாம் தேவையில்லாமல் பயப்படாதீர்கள் என்பது மட்டும் தான்.
நம்முடைய கடமையெல்லாம் நோய் வராமல் இருக்க, அதனைத் தடுக்க, என்ன செய்யவேண்டுமென்று அதனைத் தெரிந்து கொண்டு அதன்படி நடப்பது தான் நம்முடைய வேலை. இல்லையா? தேவையற்று பயப்பட வேண்டாம். காசநோய் ஒரு தொற்றுநோய். அது எப்படி வேண்டுமானாலும் பரவலாம். அதனைத் தடுப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டுமோ அதனை மட்டும் செய்வோம்.
காசநோய் கட்டுப்பாட்டில் என்கிறது சுகாதார அமைச்சு. நம்புவோம்! நலமாக வாழவோம்!
No comments:
Post a Comment