Tuesday, 4 February 2025
வா தமிழா உணவகம்!
Monday, 3 February 2025
நுழைவு தேர்வில் தளர்ச்சி!
நாட்டில் தாதியர் பற்றாக்குறை மிக மோசாமான சூழலை அடைந்திருப்பதால் இரண்டு ஆண்டுகளுக்கு (2025-2026+ -ம் ஆண்டுகளில் கல்வியில் சில தளர்வுகளை அரசாங்கம் அறிவித்திருக்கிறது.
Sunday, 2 February 2025
சம்பளம் உயருகிறது!
Saturday, 1 February 2025
பாராட்டுகிறோம்!
பிரதமர் அன்வார் அவர்கள் பல நாடுகளுக்குச் சென்று அங்குள்ள முதலீட்டார்களைச் சந்தித்து அவர்களை ஈர்த்து முதலீடுகளை நாட்டுக்குக் கொண்டுவருவது பாராட்டுக்குரியது என்பதில் ஐயமில்லை. ஒப்பந்தம் போட்டுவிட்டால் அனைத்தும் வந்துவிடும் என்று பொருளல்ல. ஒரு சில வரலாம் ஒரு சில வராமல் போகலாம். வந்தால் நல்லது வராவிட்டால் கைநழுவி போய்விட்டது! அவ்வளவுதான்!
Friday, 31 January 2025
கண்பார்வை பறி போகிறதா?
இதனை நாம் அதிர்ச்சியான செய்தியாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனோ தானோ என்று மேம்போக்காக படித்துவிட்டு துடைத்துவிட்டுப் போகிற செய்தி அல்ல.
நம் நாட்டில் பத்து குழந்தைகளுக்கு ஒரு குழந்தை கண்பார்வை பிரச்சனையால் அவதியுறுகிறது என்று குழந்தைநல கண் மருத்துவர் ஒருவர் பெற்றோர்களை எச்சரித்திருக்கிறார்.
பெற்றோர்கள் இதனைக் கேட்டு சும்மா கடந்து போய்விட முடியாது. ஒரு காலத்தில் இது போன்ற கண்பார்வை பிரச்சனையைப் பெரும்பாலோர் அறிந்திருக்கவில்லை. அதனால் ஏதோ வெவ்வேறு பெயரில் ஒரு கருத்தைச் சொல்லி வந்தோம். மருத்துவர்கள் பரம்பரை நோய் என்றார்கள் நாமும் ஏற்றுக் கொண்டோம்.
ஆனால் இன்றைய நிலை வேறு. கைப்பேசிகள் மிக மிக ஆபத்தானவை. யாருமே நமக்குச் சொல்ல வேண்டியதில்லை. நமக்கே தெரியும். ஆபத்து எனத் தெரிந்தும் அதனைத்தான் குழந்தைகளின் கையில் கொடுக்கிறோம். ஒரு சில பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளைப் பற்றி பெருமைப்படுவார்கள். அது தெரியும், இது தெரியும் என்கிற பெருமை. கடைசியில் கண்பார்வை தெரியுமா என்று யோசிப்பதில்லை. பார்வை பெற நீங்கள் செலவு செய்யத் தயார் ஆனால் கண், பார்வைத்தர தயாரா என்றெல்லாம் கவனத்தில் எடுத்து கொள்வதில்லை.
பெற்றோர்களே இன்றைய நவீன உலகில் மிகவும் தரமான கண்டுபிடிப்பு கைப்பேசிகள் தான். நினைத்தால் உலகில் எந்தப்பகுதிகளுக்கும் பேசலாம். செய்திகளை உடனே தெரிந்து கொள்ளலாம். ஆனால் அது வேறொரு வகையில் நஞ்சாகவும் மாறும் அபாயத்தைக் கொண்டிருக்கிறது அதில் ஒன்று கண் பறிபோவது. அதுவும் இளசுகள் கண் பார்வையை இழந்தால்? வருங்காலம் என்பது அவர்கள் தானே.
ஆனால் என்ன தான் எச்சரிக்கை விடுத்தாலும், நீங்கள் சரியான் முடிவை எடுக்காவிட்டால், என்ன சொல்லியும் எந்தப் பயனும் இல்லை. இப்போது மென்மையாகத்தான் எச்சரிக்க விடுக்கப்பட்டிருக்கிறது. பெற்றோர்கள் தான் பொறுப்பை எடுத்துக்கொள்ள வேண்டும்.
Thursday, 30 January 2025
யார் வீட்டு பணம்?
Wednesday, 29 January 2025
சும்மா தமாஷ் பண்ணாதீங்க!
Tuesday, 28 January 2025
கேஜே சொன்னது சரிதான்!
முன்னாள் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் சரியானநேரத்தில் சரியான கருத்தைக் கூறியிருக்கிறார். மற்ற முன்னாள் அமைச்சர்களோ அல்லது இந்நாள் அமைச்சர்களோ இதனைக் கூறியதில்லை. அவர்கள் அறியவும் இல்லை. ஆனால் பிரதமர் அன்வார் அறிந்திருக்கிறார்.
கைரி கூறியது:"மலாய்க்காரர் அல்லாதோரின் வலிகளுக்கு நிவாரணம் அளித்தால் NEP கொள்கை மீதான அவர்களின் அதிருப்தி தணியும்."
ஆமாம் அதைத்தான் காலங்காலமாக நாம் கூறி வருகிறோம். மலாய்க்காரர்களுக்கு எத்தனை சலுகைகள் வேண்டுமானாலும் கிடைக்கட்டும். ஆனால் எங்களுக்குக் கிடைக்க வேண்டிய சலுகைகளை எங்களிடமிருந்து பறிப்பதைத்தான் நாங்கள் அதிருப்தி அடைகிறோம். எங்கள் மாணவர்கள் இரவும் பகலும் படித்து அனைத்துப் பாடங்களிலும் "ஏ" வாங்கிய பின்னரும் அவர்களின் உயர்கல்விக்குத் தடையாக இருந்தால் அவர்கள் என்ன தான் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?
இந்தியர்களைப் பொறுத்தவரை கல்வியும், பொருளாதாரமும் எட்டாக்கனிகள் தாம். இரண்டுமே எட்டாத நிலை என்றால் அதற்கு அரசாங்கமே தான் தடை போடுகிறது. அப்படியென்றால் நீங்கள் படிக்கவும் வேண்டாம் பொருளாதாரமும் பவேண்டாம் என்று தானே சொல்ல வருகிறீர்கள்?
ஒரு சாதாரண ஏழை இந்தியன் சாலை ஓரங்களில் சிறு சிறு கடைகள் கூட போட முடிவதில்லை. நன்றாகக் கடை நடக்கும் நாள்களில் நகராண்மைக் கழகம் அனைத்தையும் உடைத்துவிட்டுப் போய்விடுகிறது. ஒரு சில மாதங்கள் கழித்துப் பார்த்தால் அங்கு மலாய் நண்பர்களின் கடைகள் நடக்கின்றன. இதனை என்னவேன்று சொல்லுவது?
இந்தியர்களின் கல்விக்கும் தடை, அவர்கள் செய்யும் சிறு சிறு தொழிலுக்கும் தடை அவர்கள் வேலைகளையும் வெளிநாட்டவர்கள் பறித்துக் கொண்டனர் அங்கும் தடை - அப்படியென்றால் இந்தியர்களின் வளர்ச்சிக்கு யார் தடையாக இருக்கிறார்கள்? அரசாங்கம் பல வழிகளில் இந்தியர்களின் முன்னேற்றத்தைத் தடுக்கிறது என்பது மட்டும் தெரிகிறது.
கைரி சொல்லுவது போல் நமது இனத்தவர்களுக்குக் கிடைக்க வேண்டியவை, கொடுக்க வேண்டியவைகளைக் கொடுத்தால் பிரச்சனைகள் குறையும். இல்லாவிட்டால் இந்தியர்கள் பொங்கிக் கொண்டு தான் இருப்பார்கள். அதுவே ஒரு நாள் வெடிக்கத்தான் செய்யும்.
Monday, 27 January 2025
சீன புத்தாண்டு
சீனர்களின் புத்தாண்டு வந்துவிட்டது.
ஏதோ இரண்டு நாள் விடுமுறை என்று மட்டும் நினைத்துவிட்டு "அவ்வளவு தான் சீனர் புத்தாண்டு' என்று முடித்துக்கொண்டு விடாதீர்கள். சீனர்களும் மற்ற இனத்தவர்களைப் போல குடியேறிவர்கள் தான். ஏறக்குறைய எல்லாருமே ஒரே காலகட்டம்.
ஆனாலும் அவர்களின் வளர்ச்சி என்பது பூதாகாரகரமான வளர்ச்சி. ஆனால் நாம் வளரவேயில்லை. நாட்டின் அடிமட்ட வளர்ச்சியில் இருக்கிறோம். நாம் வளரக்கூடாது என்று யாரும் சொல்லவில்லை. யாரும் தடையாக இல்லை.
பொருளாதாரத்தில் முன்னேற அவர்களுக்கு யாரும் சொல்லிக் கொடுக்கவில்லை. முன்னேற வேண்டும் என்னும் துடிப்பு அவர்களிடம் இருந்தது. நம்மிடம் அது இல்லை. மிக மிக அண்மையில் தான் நாம் வளர வேண்டும் என்கிற எண்ணமே நமக்கு வந்திருக்கிறது.
சீனர்களில் பெரும்பாலானவர்கள் வியாபாரத்துறையைச் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். போட்டி பொறாமை என்பதை அவர்களிடம் பார்க்க முடியவில்லை. புதிதாக ஒரு சீனன் வியாபாரத்திற்கு வந்தால் அவன் அந்தப் புதியவனை ஏற்றுக்கொள்கிறான். நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நீண்ட நாள்களாக அவர்கள் வியாபாரத்தில் இருப்பதால் அப்படியொரு பக்குவத்திற்கு அவர்கள் வந்துவிட்டார்கள். நம்மால் முடியவில்லை. நாளடைவில் நமக்கும் வந்துவிடும்.
துறைக்கு நாம் புதியவர்களாக இருப்பதால் சில பல குறைகள் நம்மிடம் உண்டு. ஆரம்பம் அப்படித்தான் இருக்கும். காலப்போக்கில் சரியாகிவிடும். நம்மிடம் இருக்கும் இந்த கசப்புகளை ஒதுக்கிவிட்டு நாம் சீனர்களின் வியாபார உத்திகள், திறமைகள், கொடுக்கல் வாங்கல் போன்றவைகளை அறிந்து புரிந்து கொள்வது நமது முன்னேற்றத்திற்கு நலம் பயக்கும்.
தொழில் செய்வது எப்படி? என்று உலகத்தைச் சுற்ற வேண்டாம். நம் பக்கத்தில் இருக்கும் சீனர்களைப் பார்த்தாலே போதும். வந்து விடும்! நமக்கு அவர்கள் ஒரு படிப்பினை!
Sunday, 26 January 2025
உயர்கல்வி மறுக்கப்படுவதா?
Saturday, 25 January 2025
குடியைத் தவிர்ப்போமே!
குடித்துவிட்டு கார்களை ஓட்டாதீர்கள் என்று சொல்லுவதற்குக் கூட இப்போது பயப்பட வேண்டியுள்ளது.
காரணம் குடிக்கவே வேண்டாம் என்று சொல்லுகின்ற நிலைமையில் தான் நாம் இருக்கிறோம். அப்படி இருக்கும் போது அது என்ன "குடித்து விட்டு" " இப்போது நமது இளைஞர்கள் லாரி ஓட்டுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். லாரி, பேருந்துகள், வாடகைக் கார்கள் - இதெல்லாம் ஓட்டுவதை நாம் குறைசொல்லவில்லை.
ஆனால் இங்கிருந்து தான் அதிக குடிகாரர்கள் உருவாகிறார்களோ என்கிற ஆதங்கம் நமக்கு உண்டு. அதுவும் குறிப்பாக லாரி ஓட்டுகிறார்களே இவர்கள் குடியின் பிடியில் அதிகம் ஈர்க்கப்படுகிறார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
அவர்களை மட்டும் சொல்லவில்லை இப்போதைய இளைஞர் பட்டாளமே அப்படித்தான் இருக்கின்றது என நம்ப வேண்டியிருக்கிறது. இதோ எனக்குக் கிடைத்த ஒரு செய்தி. சமீபத்தில் முன்னாள் பள்ளி மாணவர் கூட்டம் ஒன்று நடந்தது. கலந்து கொண்டவர்களில் ஒரு சிலர் வங்கியில் வேலை செய்கின்றனர். ஒரு சிலர் லாரி ஓட்டுநர்கள். பெண்கள் அனைவருமே ஆசிரியைகளாக பணியாற்றுகின்றனர். இந்த ஆண்கள் மட்டும் கூட்டத்திற்குக் கலந்து கொள்ள எப்போது காரில் கால் வைத்தார்களோ அப்போதே குடி, குடி என்று கும்மாளம் போட ஆரம்பித்து விட்டனர்!. கூட்டத்திலும் அதே பல்லவி. கடைசியில் பெண்களே அவர்களுக்குப் புத்தி சொல்ல வேண்டிய நிலைமை. நல்ல வேளை எல்லாமே கட்டுப்பாட்டுக்கள் இருந்தன.
இது தான் நமது இளைஞர்கலின் இன்றைய நிலைமை. படித்தவன், படிக்காதவன் என்கிற பாகுபாடு இல்லை. குடிப்பதில் தான் அவர்களுக்குச் சுகம் கிடைக்கிறது என்றால் என்ன சொல்ல? அனைவரும் குடும்பஸ்தர்கள் தான். ஆனால் அறிவில்லையே! பிள்ளைகளின் கல்வி, அவர்களின் எதிர்காலம், குடும்பம் இது பற்றியெல்லாம் அவர்கள் நினைப்பதில்லையே.
நாம் குடிகாரச் சமூகம் என்கிற அடையாளத்தை விட்டுவிட யாரும் தயாராக இல்லையே. அந்தக்காலம் எப்படியோ. ஆனால் இந்தக் காலத்தில் அப்படி இருக்க முடியுமா? அப்படியென்றால் வருங்காலம் எப்படி இருக்கும்? என்ன செய்ய? தலையைச் சுற்றுகிறது!
நல்லது நடக்கும் என்னும் நம்பிக்கையுண்டு. நல்லதே நடக்கட்டும்!
Friday, 24 January 2025
எது உண்மை?
Thursday, 23 January 2025
பாஸ் கட்சியுடன் கூட்டா?
மலேசிய அரசியலில் என்னன்ன மாற்றங்கள் வரும் என்பதை நம்மால் யூகிக்க முடியவில்லை.
இதற்கெல்லாம் ஒரே காரணம் தான். சென்ற தேர்தலில் பிரதமர் அன்வார் இப்ராகிம் இந்தியர்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் பயங்கர பல்டி அடித்தது தான்! அவர் செய்த தில்லுமல்லுகளை நம்மால் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை என்பது உண்மை தான். கல்வி, பொருளாதாரம் என்று வரும்போது அவர் நம்மை புறந்தள்ளி விட்டார். சுருக்கமாகச் சொன்னால் இந்தியர்களின் முன்னேற்றத்தை அவர் விரும்பவில்லை. பழங்குடியினரோடு நம்மையும் சேர்ப்பதில் தான் அவர் மும்முரம் காட்டுகிறார்.
ஆனால் அதற்காக பெரிகாத்தான் கூட்டணியில் கைக்கோர்ப்பது சரியான முடிவுதானா? முகைதீன் இந்தியர்கலுக்குச் சார்பாக இருக்கப்போவதில்லை என்பது தெரியும். பாஸ் கட்சியோ மதத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் கட்சி அவர்கள் ஏறக்குறைய ஆப்கானிஸ்தான் சார்பு உள்ளவர்கள். இதை வைத்துப் பார்க்கும் போது அவர்களோடு எப்படிக் கூட்டணி வைக்க முடியும்?
உரிமை கட்சிக்கு நாம் சொல்ல வருவதெல்லாம் இன்னும் கொஞ்சம் நாள் பேச்சுவார்த்தைகளைத் தள்ளி வையுங்கள் என்பது தான். பிரதமர் அன்வாருக்கு இன்னும் கொஞ்ச நேரம் கொடுங்கள். அவரும் மாற வேண்டிய நிலை வரலாம். இப்படியே அவர் போய்க் கொண்டிருப்பார் என்று சொல்வதற்கில்லை.
நம்முடைய எண்ணமெல்லாம் யார் பதவிக்கு வந்தாலும் இப்போது அன்வார் என்ன செய்கிறாரோ அதைத்தான் அவர்களும் செய்யப்போகிறார்கள் என்பது தான். நம்முடைய அரசியல்வாதிகளிடம் இனப்பற்றோ, மொழிபற்றோ என்பது இல்லை. அவர்கள் சமுகத்தைத் தான் பார்க்கிறார்கள். தமிழர்களை அலட்சியம் செய்கிறார்கள்.
அன்வார் சரியான ஆள் இல்லைதான் ஆனால் அந்தப் பக்கமும அப்படி ஒன்றும் சரியான ஆள் இல்லையே!
Wednesday, 22 January 2025
இலட்சம் ரூபாய் சம்பளம் வாங்கியவர்கள்
தமிழ் திரையுலகில் முதன் முதலாக இலட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகர் யார் என்கிற பேச்சு அவ்வப்போது நம்மிடையே எழுவது வழக்கம். அவர் நடிகர் அல்ல நடிகை கே.பி.சுந்தராம்பாள். அவர் நடித்த "பக்த நந்தனார்" என்கிற படத்துக்கு ஒரு இலட்சம் ரூபாய் சம்பளம் வாங்கினாராம். ஒரு சுவாராஸ்யமான செய்தி. அப்போதெல்லாம் திரைப்படங்கள் எடுக்க கையில் 30,000 ரூபாய் இருந்தால் போதுமாம். அப்படி ஒரு காலகட்டத்தில் தான் அவர் ஒரு இலட்சம் ரூபாய் சம்பளம் வாங்கியிருக்கிறார். படமும் செம ஓட்டமாம்..
அடுத்து நகைச்சுவை நடிகர் ஜே.பி.சந்திரபாபு . தனது நகைச்சுவை நடிப்பால் தமிழ் திரையுலைகை ஒரு கலக்குக் கலக்கியவர். அவர் நடித்த "சகோதரி" என்கிற திரைப்படத்திற்கு ஒரு இலட்சம் ரூபாய் வாங்கியவர். அதற்கான காரணம் படம் ஆரம்பத்தில் தயாரான போது தயாரிப்பாளருக்குப் படம் திருப்தி அளிக்கவில்லையாம். அதனால் அப்போது நகைச்சுவையில் பிரபலமாக இருந்த சந்திரபாபுவை அணுகி அவருக்கென்று தனியாக நகைச்சுவை காட்சிகளை அமைத்து படத்தை வெற்றிபெறச் செய்தாராம் தயாரிப்பாளர். அந்த நகைச்சுவைக் காட்சிகளை அமைத்தவரே சந்திரபாபு தானாம்! அதற்கான சம்பளம் அவருக்கு ஒரு இலட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டதாம்.
குறிப்பு: இந்த விவரங்களைச் சொன்னவர் சித்ரா லட்சுமணன். இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் இப்படி பன்முகம் கொண்ட ஒரு கலைஞர். நீண்டகாலமாக தமிழ் திரையுலகில் இருப்பவர். சினிமா உலகைப்பற்றி முற்றும் அறிந்தவர். எண்பது ஆண்டுகள் தமிழ் சினிமா என்பது பற்றி புத்தகம் போட்டவர். ஆக, அவர் கொடுத்த ஆதாரங்களின் படி இந்தச் செய்திகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன.
Tuesday, 21 January 2025
பேராசிரியர் வி.என்.பார்த்திபன்
கல்வி கற்பதற்கு என்ன தான் எல்லை? எல்லாவற்றுக்கும் எல்லைகள் உண்டு. ஆனால் கல்விக்கு ஏது எல்லை என்று நிருபித்தவர் மேலே காணப்படும் பேராசிரியர் பார்த்திபன்.
எல்லையே இல்லை என்பதைத்தான் அவரின் கல்வியின் மீதான தாகத்தைப் பார்க்கிறோம். அவரின் வயது 56. கடந்த 30 ஆண்டுகளாக அவர் படித்துப் பெற்ற பட்டங்களின் எண்ணிக்கை 145. உலகளவின் வேறு யாரும் இத்தனை பட்டங்களைப் பெற்றிருப்பார்களா? தெரியவில்லை!
அவரின் குடும்பப் பின்னணியைப் பார்த்தால் அப்படி ஒன்றும் பெரிதாகச் சொல்வதற்கில்லை. சாதாரண குடும்பப் பின்னணி தான். தெருவிளக்கில் படித்தவர் தான். நம்மைப் போலவே கணிதம் என்றால் பிடிக்காத பாடம் தான். ஆனால் அதனையெல்லாம் புறந்ததள்ளிவிட்டு கருமமே கண்ணயிருந்து அவர் சாதனைகளைப் புரிந்திருக்கிறார்.
இத்தனை பட்டங்கள் பெற்றிருந்தாலும் இப்போது அவர் அடுத்த பட்டம் பெறுவதற்கான வேலைகளை ஆரம்பித்துவிட்டார். அவர் மனைவியும் ஒன்பது பட்டங்களைப் பெற்றவர் என்கிறார்கள். நல்லவேளை அத்தோடு நிறுத்திக் கொண்டார். குடும்பப் பொறுப்பு என்று ஒன்று இருக்கிறது அல்லவா?
நமது மாணவர்களை நினைத்துப் பாருங்கள். அல்லது எந்த மாணவராக இருந்தால் என்ன? நினைத்துப் பாருங்கள். ஒரு பட்டம் பெறுவதற்கே நாக்குத் தள்ளிப் போகிறது என்கிறார்கள்! மிக மிக ஆர்வமுள்ளவர்கள் இரண்டோ, மூன்றோ இருக்கலாமே தவிர அதற்கு மேல் வாய்ப்பில்லை.
கல்வி என்பது அறிவு வளர்ச்சிக்குத் தான். பேராசிரியர் தனது அறிவாற்றல் பல துறைகளில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். அதனைச் செயல்படுத்துகிறார். இன்னும் எத்தனை துறைகளில் அவர் பட்டம் பெறப்போகிறார் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
பேராசிரியர் பார்த்திபன் அவர்களின் கனவுகள் அனைத்தும் நிறைவேற இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
Monday, 20 January 2025
MIED Care
Sunday, 19 January 2025
நிரந்தர தீர்வு தேவை!
ஆனால் கெடா மாநிலம் அதற்கு விதிவிலக்கு. அந்த மாநிலம் மட்டும் ஒரு நிரந்தர தீர்வைக் கொடுக்கவில்லை. ஒவ்வொரு ஆண்டும் கேட்டுத்தான் பெற வேண்டியுள்ளது. ஏதோ ஒரு வகையில் அன்று ம.இ. கா. செய்த தவறு. இன்றுவரை அதற்கு ஒரு நிரந்தர தீர்வைக்காண முடியவில்லை.
கெடா மாநிலம் பாஸ் கட்சியின் ஆட்சியில் உள்ள மாநிலம். பாஸ் கட்சியைப் பற்றி நமக்குத் தெரியும். அது எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் இன்று பாஸ் கட்சியில் இந்தியர் பிரிவு என்று ஒன்று இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அவர்கள் சார்பில் ஓரு செனட்டர் கூட இருந்ததார். இப்போது தெரியவில்லை. ஆனால் இந்தியர் பிரிவு இருப்பது நமக்குத் தெரியும்.
ஒரு காலகட்டத்தில் மாநிலம் தேசிய முன்னணியின் கீழ் தான் இருந்தது. அப்போதும் அதற்கு விடிவு பிறக்கவில்லை. இப்போது பாஸ் கட்சியினர். நிச்சயமாக அவர்கள் ம.இ.கா.வின் குரலுக்குச் செவிசாய்க்கப் போவதில்லை. அதனால் நாம் சொல்ல வருவதெல்லாம் பாஸ் கட்சியின் இந்தியப் பிரிவினர் இதனை ஏன் கையில் எடுத்துப் பேசக்கூடாது என்பது தான். அவர்கள் குரல் ஒருவேளை எடுபட வாய்ப்புண்டு. அவர்களுக்கும் நேரம் வரும். வளைந்து கொடுத்துத்தான் ஆக வேண்டும்.
அதனால் நாம் சொல்ல வருவதெல்லாம் பாஸ் கட்சியின் இந்தியப் பிரிவினர் இந்தப் பிரச்சனையை மேலிடத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பது தான். அந்தப் புண்ணியத்தை நீங்கள் தேடிக் கொள்ளுங்களேன். நீங்களும் இந்திய சமுதாயத்தின் ஓர் அங்கம் தானே? அதனை ஏன் ம.இ.கா. தான் செய்ய வேண்டும் என்று நீங்களும் நினைக்கிறீர்கள்? யார் செய்தாலும் அது இந்திய சமுதாயத்திற்குத் தானே?
பாஸ் கட்சியின் இந்தியர் பிரிவினருக்காக இந்த வேண்டுகோள். பார்ப்போம!
Saturday, 18 January 2025
மித்ராவின் லாரி ஓட்டுனர் பயிற்சி
Friday, 17 January 2025
டயர்கள் கழன்று கொள்வதா?
சமீபகாலமாக தொடர்ச்சியாக இந்தச் செய்திகளைப் படிக்கிறோம். லாரிகளின் டயர்கள் கழன்று போகின்றன, அதனால் விபத்துகளும் ஏற்படுகின்றன.
Thursday, 16 January 2025
நாட்டுக்குப் பெருமையா?
Wednesday, 15 January 2025
பாதுகாப்பு இல்லையா?
Tuesday, 14 January 2025
Monday, 13 January 2025
தோல்வியிலும் வெற்றியுண்டு!
Sunday, 12 January 2025
சட்டவிரோத வியாபாரிகள்!
வெளிநாட்டினர் நம் நாட்டில் நிரந்தரமாகக் தங்கிவிடுவதும் இங்கு வியாபாரம் செய்வதும் பொது மக்களுக்குத் தெரிந்திருக்கிறது.
Saturday, 11 January 2025
மதுபானத்திற்கு இடமில்லை!
சமீபத்தில் கல்வி அமைச்சு சீனப்பள்ளிகளுக்கு ஒரு தடை உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது.
Friday, 10 January 2025
ஒரு நடிகனின் முதல் வெற்றி!
தல, தல தான்!
Thursday, 9 January 2025
உங்கள் பொழைப்ப பாருங்கப்பா!
Wednesday, 8 January 2025
SPM எழுதும் மாணவர்களுக்கு
எஸ்.பி.எம். எழுதும் மாணவர்களுக்கு நமது வாழ்த்துகள். உங்களிடமிருந்து தான் நாளைய மருத்துவர்கள், மருத்துவ நிபுணர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள், பொறியாளர்கள், பெரும் பணக்காரர்கள், அரசாங்க உயர் அதிகாரிகள் - அனைத்துத் தரப்பினரும் உங்களிடமிருந்து தான் உருவாக வேண்டும்.
Tuesday, 7 January 2025
நமது இலக்கு கல்விதான்!
Monday, 6 January 2025
கல்விதான் நமது ஆயுதம்!
கல்வி தான் நமது ஆயுதம். வறுமையைப் போக்க, வாழ்க்கை தரத்தை உயர்த்த, பொருளாதாரத்தைப் பெருக்கிக்கொள்ள ஒரே வழி கல்வி மட்டும் தான்.
ஏழைகள் ஏழைகளாகவே இருக்க வேண்டும் என்று நம்மை யாரும் முத்திரைக் குத்தவில்லை. நமக்கு நாமே முத்திரைக்குத்திக் கொண்டோம். நம்மை உயர்த்திக் கொள்ள அப்போதும் வழிகள் இருந்தன இப்போதும் இருக்கின்றன.
அன்று தோட்டப்புறங்களில் இருந்த தமிழ்ப்பள்ளிகள் நாம் உயர்வதற்கான வழிவகைகளைக் காட்டின. அன்றே நாம் பயன்படுத்தியிருந்தால் நமது சமுதாயம் ஒரு நடுநிலையான வாழ்க்கைத்தரத்தை அடைந்திருக்கும். அப்போது கல்வியையே உதாசீனம் செய்தோம். அன்று செய்த அதே தவற்றை இன்றும் செய்கிறோம். இன்னும் நம்மிடம் கல்வியின் மூக்கியத்துவம் உணரப்படவில்லை.
மலாய் சமுகத்தைப் பார்த்தாவது நாம் திருந்திருக்க வேண்டும். நமக்கும் அந்த விழிப்புணர்வு இல்லை நமது தலைவர்களுக்கும் அந்த கல்வி அவசியம் என்கிற புரிதலும் இல்லை. ஏன் நமது தலைவர்களும் அரைகுறை படிப்பாளிகளாகத்தான் இருந்திருக்கின்றனர். அவர்கள் நம்மை வழிநடத்துவதற்குத் தகுதி இல்லாதவர்கள் என்பதைத்தான் அவர்கள் காட்டியிருக்கின்றனர்.
ஆனாலும் குற்றங்களை மற்றவர்கள் மீது திணிப்பதை விடுத்து நம்முடைய குற்றங்களை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். நாம் முன்னேற நமது முயற்சி தான் தேவையே தவிர உலகில் உள்ள ஜீவராசிகள் அனைத்தும் ஓடிவந்து நமக்கு உதவும் என்கிற எதிர்பாப்ர்ப்புகளை விட்டு ஒழிக்க வேண்டும். நமக்கு அக்கறை என்றால் நாம் தான் அக்கறை காட்ட வேண்டும்.
கல்வி என்றால் சாதாரணமாக நினைக்க வேண்டாம். அது முன்னேற்றத்தைக் கொண்டுவரும். கல்வி கற்ற சமுதாயம் தலைநிமிர்ந்து நிற்கும். கற்றவனுக்கு சேல்லுகின்ற இடமெல்லாம் சிறப்பு கல்வி கற்றவன் மரியாதைக்குரியவன் ஆகிறான்.
கல்வியே நமது முன்னேற்றத்திற்கான ஆயுதம். .
Sunday, 5 January 2025
நமது பங்கு என்ன?
ஒற்றுமைக்குக் காக்கைகளைச் சொல்வார்கள். பறவைகளில் அறிவுள்ள பறவை காக்கைகள் தான் என்றும் சொல்லப்படுகிறது.
அந்த இரண்டு குணங்களும் நமக்குத் தேவை என்பதுதான் காக்கைகளின் கதை சொல்லுகிறது.
அறிவு என்றால் இன்றைய நிலையில் நம்மைப் பொறுத்தவரை கல்வி தான் அந்த அறிவு வளர்ச்சியைக் கொடுக்கும். மற்றவைகள் எல்லாம் பின் தள்ளப்படும். அதனால் தான் நாம் கல்விக்கு முக்கியத்துவம் வழங்குகிறோம்.
தனிமனிதனாக, கல்வி என்று வரும்போது, நமது பங்கு என்ன என்பது தான் நமது கேள்வி. ஒவ்வொரு பெற்றோரும் தங்களது பிள்ளைகளுக்கு நல்ல கல்வியைக் கொடுத்தாலே போதும். நமது சமுதாயம் கல்வி கற்ற சமுதாயமாக மாறிவிடும். ஏழை சமுதாயம் என்று சொல்லிக் கொண்டிருப்பதைவிட அடுத்தகட்ட நகர்வுக்கு நமது பங்கு என்ன என்று சிந்திக்க வேண்டும். அதற்குக் கல்வி ஒன்று தான் வழி. வேறு எதுவும் எடுபடாது.
இந்த செய்தியே நமது மக்களுக்கு இன்னும் சென்று சேரவில்லை என்பதுதான் மிகவும் வேதனைக்குரியது. ஒரு காலகட்டத்தில் தோட்டப்புற பள்ளிகளில் படித்தவர்கள் பலர் ஆசிரியர்களாக மாறிவிட்டார்கள். அத்தோடு கொஞ்சம் ஆங்கிலத்தைச் சேர்த்துப் படித்தவர்கள் இன்னும் உயர்ந்த நிலைக்கு வந்துவிட்டார்கள். ஏன் கல்வி என்பதற்கு இந்த மாற்றங்களே போதும். கல்வியைக் கொடுத்துவிட்டால் அப்புறம் ஏழை என்கிற அடைமொழி தேவை இல்லை.
இதில் நமது பங்கு என்னவெனில் நாம் ஒவ்வொருமே பிள்ளைகளுக்கு வழிகாட்டிகளாக இருக்க வேண்டும். பெற்றோர்கள் படிக்காதவர்களாக இருக்கலாம். பிள்ளைகள் பள்ளி போக ஆரம்பித்ததுமே அவர்களை நன்கு ஊக்குவிக்கவேண்டும். டாக்டராக வேண்டும், வழக்கறிஞராக வேண்டும் என்று என்ன தெரியுமோ அதனைச் சொல்லி அவர்களுக்கு ஊக்கத்தைக் கொடுக்க வேண்டும். இளமையில் சொல்லப்படுவது அப்படியே மனதில் பதிந்துவிடும். அதன் பொருள் என்னவென்று புரியாவிட்டாலும் அவர்களாகவே புரிந்து கொள்ளும் நேரம்வரும்.
கல்வி என்று வரும்போது பெற்றோர்கள் தான் முதல் வழிகாட்டி. அதற்கு அவர்கள் படித்தவர்களாக இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. அவர்கள் மட்டும் அல்ல. நமது சமுதாயத்தில் உள்ள அனைவரின் பொறுப்புமாகும். மாணவர்கள் நன்கு படிக்கும்படி ஊக்குவிப்புத் தரவேண்டும். மேற்படிப்புப்பெற வழிகாட்ட வேண்டும். நமது சமுதாயத்தில் கீழ்மட்ட அளவில் தலைவர்கள் அல்லது பொறுப்பில் உள்ளவர்கள் பலர் இருக்கின்றனர். தக்கவர்களிடம் கொண்டுபோய் ஆலோசனைக் கேட்கலாம். வழிகள் நிறையவே இருக்கின்றன. தேவையெல்லாம் நாம் மனம் வைக்க வேண்டும். நமது சமுதாயம் முன்னேற வேண்டும் என்கிற பற்று இருக்க வேண்டும்.
சமுதாய முன்னேற்றம் என்பது நமது அனைவரின் கூட்டு முயற்சி. அதில் நமது பங்கும் உண்டு. கல்வி கற்ற சமுதாயம் என்றால் நமக்கும் அதில் பெருமை தான்.
Saturday, 4 January 2025
கோவில்களின் பங்கு போற்றத்தக்கது!
Friday, 3 January 2025
இயக்கங்கள் முன்வர வேண்டும்!
மலேசியாவில் தமிழர் அல்லது இந்திய இயக்கங்கள் எத்தனை இருக்கும் என்று கேட்டால் என்னிடம் பதிலில்லை.
சும்மா தோராயமாகக் கேட்டால் சுமார் ஆயிரம் இயக்கங்கள் இருக்கலாம். இவர்கள் நினைத்தால் நமது மக்களிடையே மாபெரும் மாற்றங்களைக் கொண்டுவர முடியும். நாம் கல்வியைப்பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். கல்வியின் முக்கியத்துவத்தை நமது தமிழர் சமுதாயம் இன்னும் உணரவில்லை என்பதைப் புரிந்து வைத்து வைத்திருக்கிறோம்.
இந்த நேரத்தில் நமது இயக்கங்களின் பங்கு மிகவும் தேவையான ஒரு காலகட்டத்தில் இருக்கின்றோம். நம் மக்களிடையே உள்ள பிரச்சனை என்னவென்றால் பொருளாதார சிக்கல்தான். அதனால் தான் நமது குழந்தைகள் எஸ்.பி.எம். தேர்வுக்குப் பின்னர் வேலைக்குப் போய் விடுகின்றனர். இன்றைய நிலையில் எஸ்.பி.எம். தேர்வில் பெரிய வெற்றி பெற்றால் கூட அதன் மூலம் நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்னும் நம்பிக்கையுமில்லை.
இன்றைய தேவை எல்லாம் உயர்கல்வி இல்லாமல் எந்த வேலை வாய்ப்பும் இல்லை என்பது தான் உண்மை. நமது இயக்கங்கள் நம் மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும். இயக்கங்களில் உள்ளவர்கள் எல்லாம் ஏதோ ஒரு வகையில் விழிப்புணர்வு உள்ளவர்களாகத்தான் இருக்கிறார்கள். மாணவர்களுக்குச் சரியான வழிகாட்டுதல்கள் தேவை. வழிகாட்டுதல்கள் இல்லாததால் தான் இன்று பலரால் உயர்கல்வி கற்க முடியவில்லை.
மாணவர்களுக்குப் பெற்றோர்களின் வழிகாட்டுதலும் இல்லை. வழிகாட்ட ஆளுமில்லை. பலர் வெளி உலகம் தெரியாதவர்களாக இருக்கிறார்கள். யாரோ சொன்னார் என்று சொல்வதைக் கேட்டு கடைசியில் கல்விக்கடன் என்கிற பெயரில் கடன்காரர்களாக வெளியே வருகிறார்கள். கல்விக்கடன் இல்லாமலேயே உயர்கல்வி படிக்க வழிகள் பல உண்டு. அதனைத் தெரிந்து கொள்ள அரசாங்க இணையதளங்களை வலம் வந்தாலே போதும்.
அதற்குத்தான் நமது இயக்கங்கள் மாணவர்களுக்கு வழிகாட்டிகளாக இருந்து அவர்களுக்குச் சரியான பாதையைக்காட்ட வேண்டும். இணையதளங்களில் பலர் வழிகாட்டுகிறார்கள். மாணவர்கள் அதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரே ஒரு ஆலோசனை. எக்காரணத்தைக் கொண்டும் முதலில் பணத்தைக் கொண்டு கொட்டாதீர்கள். ஒரு முறைக்கு நூறு முறை படித்துப் புரிந்து கொள்ளுங்கள். அதைவிட சரியான வழிகாட்டுதல்களை நாடுங்கள். குறிப்பாக ஆசிரியர்கள் நம்பத்தக்கவர்கள். அரசாங்க இணையதளங்கள். அதுவே போதும்.
இயக்கங்கள் சில பொறுப்புக்களையாவது எடுத்துகொள்வது மாணவர்களுக்கு வழிகாட்டுவது சிறப்பான சேவை. நல்லதே நடக்கட்டும்.