Saturday, 28 June 2025
அது என்ன 'பெராட்டா ரொட்டி'?
Friday, 20 June 2025
எனது முதல் ஆங்கிலப் புத்தகம் (45)
எனது முதல் ஆங்கிலப் புத்தகம் இது தான். அந்தக் காலத்திய பதிப்பு இப்படித்தான் இருந்தது.
அப்போது பள்ளியில் பரிட்சை முடிந்த நேரம். சிரம்பானில் ?பிளாஸா" தியேட்டர் ஒன்று இருந்தது. அங்கு எப்போதும் ஏதாவது ஆங்கிலப்படங்கள் ஓடிக் கொண்டிருக்கும். எல்லாம் பழைய படங்களாகவே இருக்கும். கட்டணமும் குறைவாக இருக்கும். அந்தத் தியேட்டரின் வெளியே ஒரு சிறிய புத்தகக்கடை. அனைத்தும் ஆங்கிலப் புத்தகங்களாகத்தான் விற்பனையில் இருக்கும்.
அங்கு வாங்கப்பட்டது தான் இந்த எனது முதல் ஆங்கிலப் புத்தகம் Dale Caenegie எழுதிய How to Win Friends and Influence People. அதன் பின்னர் பல ஆங்கிலப் புத்தகங்கள் எல்லாம் டேல் கார்னெகி எழுதியவை. அப்போது சிரம்பானில் ஆங்கிலப் புத்தகக்கடைகள் ஏதும் இருந்ததாகத் தெரியவில்லை. இதை விட்டால் திமியாங் 'கத்தே' தியேட்டரில் ஒரு சிறிய புதகக்கட்டை. சிரம்பானில் ஒரே தமிழ் புத்தகக்கடை என்றால் . அன்றும் இன்றும், என்றும் அது பவுல் ஸ்திரீட்டில் அமைந்துள்ள "ரெங்கசாமி புத்தக நிலையம்" தான். அங்கு தான் எனது அனைத்துத் தமிழ் புத்தகங்களையும் வாங்கினேன்.
இதுவரை நான் வாங்கிய புத்தகங்கள் சுமார் ஆயிரம் இருக்கலாம். ஓர் நூல்நிலையத்திற்குப் பல புத்தகங்கள் போய்விட்டன.. இப்போது என்னிடம் இருப்பவை எல்லாம் சுய முன்னேற்றம் (self-improvement) புத்தகங்கள் மட்டுமே.. அந்தப் புத்தகங்கள் என்னை ஈர்த்தது போல வேறு புத்தகங்கள் என்னை ஈர்க்கவில்லை!
ஒரு மனிதனின் உயர்வுக்குப் புத்தகங்கள் பெரும் பங்காற்றுகின்றன. வாழ்க்கையில் எந்த நேரத்திலும் புத்தகங்கள் கைகொடுக்கும்.
அறிவோம்: "யானை படைகண்டு சேனை பல வென்று" என்று கவியரசு கண்ணதாசனின் பாடலைக் கேட்டிருப்போம். உலகிலேயே யானை படை வைத்திருந்தவர் சோழப்பேரரசர் ராஜராஜ சோழன் மட்டும் தான். வேறு எந்த அரசரும் யானை படை வைத்திருந்ததாக வரலாறு இல்லை.
Tuesday, 17 June 2025
நான் வாங்கிய முதல் புத்தகம் (44)
Friday, 13 June 2025
முதல் பல் பிடுங்கிய அனுபவம்! (43)
Thursday, 5 June 2025
எனது முதல் மூக்குக் கண்ணாடி (42)
Sunday, 1 June 2025
வானொலி ஒலிபரப்புகள் (41)
Tuesday, 27 May 2025
பேனா நண்பர்கள் (40)
பெரும்பாலும் வெளிநாட்டுக்காரர்கள் தான். உள்ளூர் நண்பர் ஒருவரைப்பற்றி சொல்லுகிறேன். ஒரு முஸ்லிம் இளைஞர். தமிழர். நன்றாகத்தான் எழுதி வந்தார். தனது போட்டோவை அனுப்பிவைக்கிறேன் என்று சொல்லி இந்து சமய மாரியம்மன் படத்தை அனுப்பிவைத்தார்! அத்தோடு உறவை முறித்துக் கொண்டார். பின்நாள்களில் இவர் கோலாலம்பூர் தமிழ் வானொலியில் பணி புரிந்திருக்கிறார், அவர் பெயர், வாழந்த தோட்டம் அனைத்தும் இப்போதும் அத்துப்படி!
ஜெர்மனியில் இருந்து ஓர் இளைஞர். நீண்ட நாள் எழுதிவந்தோம். அவர் இராணுவப் பயிற்சிக்குப் போய்விட்டார்.. சுவீடன் நாட்டிலிருந்து ஒரு பெண். நீண்ட நாள் ஏழுதிவந்தார். ஒரு நாள் விபத்தில் அவர் இறந்து போனதாக செய்தி வந்தது. எகிப்து நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் நன்றாகவே எழுதிவந்தார். ஒரு முறை நான் அவரிடம் நீங்கள் யூதப் பெண்ணா அல்லது அரபுப் பெண்ணா என்று கேட்டிருந்தேன்.கொதித்துப் போனாள் அவள்! நீ எப்படி என்னை யூதப்பெண்ணா என்று கேட்கலாம் என்று வெடித்துச் சிதறடித்தாள் என்னை! எனக்கு அந்த ஊர் அரசியல் எல்லாம் தெரியாது! அத்தோடு முறிந்தது.
எது எப்படியிருந்தாலும் அந்த நண்பர்கள் எல்லாம் எனக்குப் பிடித்தவர்களாகவே இருந்தனர்.
அறிவோம்: மனிதன் ஏழையாக இருக்கலாம் கோழையாக இருக்கக் கூடாது என்று சொன்னவர் துன் வீ.தி. சம்பந்தன். ஆனால் இன்றைய நிலையில் ஏழையும் வேண்டாம், கோழையும் வேண்டாம் கல்வியை மட்டும் விடவேண்டாம். கல்வி தான் ஒருவனை வீரனாக்கும்
Monday, 26 May 2025
பூ போட்ட சட்டைகள்! (39)
பூ போட்ட சட்டகளை அணிவது எங்கிருந்து வந்த கலாச்சாரம் என்பது தெரியவில்லை. நான் நினைப்பது 'ஹாவாய்" தீவின் கலாச்சாரமாக இருக்கலாம். ஆனால் அது அன்றைய ஹிப்பிகளால் பிரபலப்படுத்தப்பட்ட ஒரு கலாச்சாரம் என்பதாக சில குறிப்புகள் கூறுகின்றன.
பூ போட்ட சட்டைகளை அணிந்த அந்த ஆரம்பகாலத்தில் - அணிபவர்களை நோக்கி வெவ்வேறு வகையில் வசைகள் பாடப்பட்டன. அகராதி, அடியாள், கேங்ஸ்டர்..... .இப்படியாக பலப்பல ஏச்சும் பேச்சும்! என்னைப் பொறுத்தவரை அது பெண்கள் அணியும் சட்டை என்பதாகவே மனதில் பட்டது. நான் அணிவதில்லை.
எனது நண்பர் இராமன் என்பவர் எதுபற்றியும் கவலைபடாத மனிதர். எனக்குத் தெரிந்து அவர் தான் முதன் முதலாக இது போன்ற சட்டைகளை, செனவாங் தோட்டத்தில், அணிய ஆரம்பித்தவர். ஓரிரு ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த சட்டைகள் சூடு பிடிக்க ஆரம்பித்தன.
அதன் பின்னர் தான் பாத்தேக் பிரபலப்படுத்தப்பட்டது. அதன் விற்பனையை அதிகரிக்க வாரம் ஒரு முறை பாத்தேக் அணியுங்கள் என்று பிரச்சாரங்கள் தீவிரப்படுத்தப்பட்டன.
ஒன்றை நினவுபடுத்துகிறேன். ஆரம்பகாலத்தில் இதன் விற்பனையில் நமது இளைஞர்களின் பங்கு அதிகம் என்பதில் சந்தேகம் வேண்டாம். நாம் தான் வழக்கம் போல இதன் முன்னோடி!
அறிவோம்: தமிழர்கள் எப்போது மேற்சட்டைகள் போட ஆரம்பித்தார்கள்? இன்றைய சட்டைகள் போன்று இல்லாது அவ்வப்போதைய நாகரிகத்திற்கு ஏற்றவாறு அவர்களும் அணிந்திருக்கிறார்கள். எழுத்தாளர் கல்கியின் 'பொன்னியின் செல்வனில்' இதனைப் பார்க்கலாம். அப்படிப் பார்த்தால் நீண்டகாலம் என்று சொல்லுவதைத் தவிர வேறு வார்த்தை இல்லை!
Sunday, 25 May 2025
கட்டம் போட்ட சட்டை! (38)
கட்டம் போட்ட சட்டை கதாநாயகர்கள் என்று தாராளமாகச் சொல்லலாம். அந்த அளவுக்கு இந்த கட்டம் போட்ட சட்டைகள் இந்திய இளைஞர்களிடையே ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன.
அது ஏதோ ஒரு காலகட்டம். ஆண்டு ஞாபகத்திற்கு வரவில்லை. தமிழ் திரைப்படம் ஒன்றில் கதாநாயகனா அல்லது வில்லனா அதுவும் ஞாபக்த்தில் இல்லை. ஏதோ ஒரு படத்தில் கட்டம் போட்ட சட்டையைப் போட்டுக் கொண்டு அமர்க்களமாக வருவார் ஒரு நடிகர். அந்த நடிகர் யார் என்று என்னால் சொல்ல முடியவில்லை. அந்த அளவுக்கு அந்த ஸ்டைல் இளைஞரிடைய தீவிரமாக பற்றிக்கொண்டது! நான் கூட சிகப்பு நிற கட்டம் போட்ட சட்டை வைத்திருந்தாக ஞாபகம்.
வீட்டில் நிலைமை எப்படியிருந்தாலும் நாட்டில் ஏற்படும் மாற்றங்கள் எல்லாத் தரப்பினரையும் பாதிக்கத்தான் செய்யும். யாரும் விதிவிலக்கல்ல. அது தோட்டம் பட்டணம் என்று பார்ப்பதில்லை.
அறிவோம்: பி.கே.ஆர். கட்சியின் உதவித் தலைவராக தேர்ந்தெடுக்க்ப்பட்ட டத்தோஸ்ரீ ரமணன் வாழ்த்த நினைத்தாலும் இவரும் மற்றவர்களைப் போல "பேசாமடந்தை" தானே? வாய் திறக்க முடியாதவர் போற்றி! போற்றி!
Saturday, 24 May 2025
சங்கிலியோடு பணப்பையை ......! (37)
Friday, 23 May 2025
ஐம்பது காசுக்கு முடிவெட்டினோம்! (36)
முன்பு காலத்தில் முடிவெட்ட ஐம்பது காசு என்பது என்ன அதிசயமா என்று கேள்வி எழலாம்.
அப்படி எல்லாம் சொல்ல இயலாது. நான் முடி வெட்டிக்கொள்ள ஆரம்பித்த காலத்தில் ஐம்பது காசுக்கு வெட்டியதாக ஞாபகமில்லை. நான் வெட்டுவது பெரும்பாலும் முடிவெட்டும் நிலையங்களாக இருந்ததினால் அங்கே ஐம்பது காசுக்கு வேலையில்லை. ஒரு வேளை குழந்தைகளுக்கு இருந்திருக்கலாம்.
ஆனால் எங்கள் பள்ளியில் ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தார்கள். பள்ளியிலேயே ஒருவர் கடை திறந்தார். அங்கே முடி வெட்டினால் ஐம்பது காசு திட்டத்தைக் கொண்டு வந்தார். அது மாணவர்களுக்கு வரப்பிரசாதமாகவே அமைந்தது. அவரது கடையில் எப்போதும் கூட்டமாகவே இருக்கும். பள்ளி மாணவர்களுக்கு முடி வெட்டுவது ஒரே மாதிரி தான். வித விதமாக இருக்க வாய்ப்பில்லை.
ஒருவர் தான் முடி வெட்டுவார். இப்போது நினைத்துப் பார்க்கும் போது வியப்பைத் தருகிறது. அந்தப் பெரியவர் முயற்சி எடுத்து பள்ளியோடு பேச்சுவார்த்தை நடத்தி கடை போட்டாரே அதனைப் பாராட்டத்தான் வேண்டும். இப்போது அது போன்ற முயற்சிகள் வங்காள தேசிகளிடம் கைமாறி விட்டதோ என்று தோன்றுகிறது. வேலையே தெரியாமல் தொழில் செய்கிறார்கள்! கேட்டால் அது "அவர்கள் சாமர்த்தியம்" என்கிறார்கள்!
அறிவோம்: பொதுவாக எண்களை, அதாவது 0 1 2 3 4 5 6 7 8 9 என்னும் எண்களை அரபு எண்கள் என்கிறோம். அது எங்கள் நாட்டு எண்கள் இல்லை என்று அரபு நாடுகள் சொல்லிவிட்டன. அது இந்து நாட்டிலிருந்து வந்த எண்கள் என்று சொல்கின்றன. இந்து நாடு என்றால் இந்தியா. அது தமிழர்கள் பயன்படுத்திய எண்கள் என்று இன்றுவரை தமிழ் நாடு அரசு வெளிப்படையாகச் சொல்லவில்லை. திராவிடர்கள் தமிழ் நாட்டை ஆண்டால் இது தான் நடக்கும்!
Thursday, 22 May 2025
காலணிகளுக்கு இ;லாடம் (35)
இலாடங்கள் என்னும் போது நமக்குத் தெரிந்தது எல்லாம் குதிரைக்கு இலாடம் அடிப்பது தான். இப்போது மாடுகளுக்கும் அடிக்கப்படுகிறது என்பதும் தெரிய வருகிறது.
Sunday, 11 May 2025
ஐந்தடிஜோசியக்காரன்! (34)
அந்தக் காலகட்டத்தில் ஐந்தடி ஜோசியர்கள் அதிகம். அடிக்கடி தோட்டப்புறங்களுக்குப் படையெடுப்பார்கள். காரணம் ஏமாறும் தமிழர் கூட்டம் தோட்டங்களில் தான் இருந்தார்கள்!
Wednesday, 7 May 2025
தலையாட்டி அண்ணன்! (33)
இது ஒரு வருத்தத்திற்கு உரிய சம்பவம். எனது நோக்கம் எல்லாம் நமது தமிழ் மக்கள் எப்படியெல்லாம் என்னவென்றே தெரியாத வியாதிகளை எல்லாம் அனுபவித்திருக்கிறார்கள் என்பதை வெளிச்சத்திற்குக் கொண்டுவருவது தான்.
Sunday, 4 May 2025
பாட்டி வைத்தியம் (32)
பாட்டி வைத்தியம் என்பது நம் அனைவருக்கும் தெரிந்தது தான். ஆனால் என்ன செய்ய? இப்போது படித்தவர்கள் அதிகமாகி விட்டதால் அதன் மௌசு, இளசுகளிடையே குறைந்துவிட்டது. ஆனாலும் இன்னும் பாட்டி வைத்தியம் உயிர்ப்புடன் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. மங்கிப்போய் விடவில்லை என்பது ஆறுதல்.
இது என் தாயார் சொன்னது. நான் பதினெட்டு மாதக் குழந்தையாக இருந்த போது ஏற்பட்ட ஒரு வியாதி. உடல் முற்றிலுமாக செயல் இழந்துவிட்டது. படுத்த படுக்கை தான். போர்ட்டிக்சன். மருத்துவனைக்குக் கொண்டு சென்ற போது டாக்டர் "ஊகூம், இவன்பிழைக்க மாட்டான்" என்று கைவிரித்து விட்டாராம்.
அப்போது பக்கத்து வீட்டு பாட்டி ஒருவர் காட்டுக்குச் சென்று அங்கிருந்து இலைதழைகளைக் கொண்டுவந்து அவைகளைக் கொதித்தண்ணீரில் அவித்து பின்னர் அந்தத் தண்ணீரால் உடல் முழுவதும் நீவி விட்டாராம். பல மாதங்கள் படுத்தே கிடந்தே நான் ஒரு சில மணி நேரங்களில் எழுந்து உட்கார்ந்து விட்டேனாம்! என் தாயார் சொன்ன இலைதழைகளில் கத்தாழை (Aloe Vera) யும் ஒன்று. இன்றும் நாம் இந்தக் கற்றாழையை ஏதோ ஒரு வகையில் பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கிறோம்.
சரி அதென்ன பாட்டி வைத்தியம்? இது தமிழரிடையே பாரம்பரியமாக வருவது. உலகின் மூத்த குடி என்னும் பெருமை உள்ள மக்களான நமக்கு எந்தவொரு மருத்துவமும் அறியாமலா வாழ்ந்து வந்தோம்? அதன் பயன்பாட்டைக் குறைத்துக் கொண்டோம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
அறிவோம்: வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் - வாசல் தோறும் வேதனை இருக்கும் - வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை - எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும் - ஏழை மனதை மாளிகை ஆக்கி இரவும் பகலும் காவியம் பாடு - நாளைப் பொழுதை இறைவனுக்கு அளித்து - நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு - உனக்கும் கீழே உள்ளவர் கோடி - நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு
கவிஞர் கண்ணதான்
Thursday, 1 May 2025
நாக்குப்பூச்சி! (31)
இன்றைய தலைமுறையினருக்கு நாக்குப்பூச்சி என்றால் என்னவென்று தெரிய வாய்ப்பில்லை!
Sunday, 27 April 2025
உத்தாம் சிங் பஸ், கணேசன் பஸ் (30)
பேரூந்தில் எனது முதல் பயணம் என்றால் அது "உத்தாம் சிங்" பேரூந்து தான்.
Wednesday, 23 April 2025
அடுப்புக்கரி, தேங்காய் எண்ணைய் (29)
தமிழ் நாட்டில் பல துலக்க வேப்பங்குச்சியைப் பயன்படுத்துவார்களாம். இப்போது அல்ல. அந்தக் காலத்தில். ஒரு வேளை கிராமப்புறங்களில் இப்போதும் இருக்கலாம்.
ஆரம்பகால தோட்டப்பாட்டாளிகளாக இங்கு வந்த தமிழர்கள் இந்த அடுப்புக்கரியை பல்துலக்க எங்கிருந்து கற்றுக் கொண்டார்கள்? அதுவும் வெள்ளைக்காரனின் கைவரிசையாக இருக்குமோ? அல்லது அவனும் அடுப்புக்கரியில் தான் பல்துலக்கினானோ?!
எப்படியோ நான் நீண்ட காலம் அடுப்புக்கரியில் தான் பல் துலக்கினேன். அதாவது அடுப்பில் கரி இருக்கும்வரை! ஒரு வேளை நானே வேலைக்குப் போக ஆரம்பித்தபின்னர் நான் மாற்றிக்கொண்டேன் என நினைக்கிறேன்.
இதே கதைதான் தலைக்குத் தேங்காய் எண்ணெய் வைப்பதும். அதில் ஓர் அசௌகரியம் உண்டு. எண்ணைய் முகத்தில் வழியும். அதனால் நான் இடைநிலைப்பள்ளியில் படிக்கும் போது Hair Cream - க்கு மாற்றிக் கொண்டேன். நான் நீண்ட காலம் பயன்படுத்திய ஒரே கிரீம் என்றால் அது Bryl Cream மட்டும் தான். நான் அவ்வளவு எளிதில் எதனையும் மாற்றிக்கொள்ள மாட்டேன்.
அந்த காலகட்டத்தில் எல்லாமே வெள்ளைக்கரர் தேசதிலிருந்து தான் வெளிநாட்டுப் பொருள்கள் வரும். அதனால் விற்பனையில் அவர்கள் பொருள்கள் தான் முதன்மையான இடம் பெரும். ஆனால் மக்களுக்கு வாங்கும் சக்தி இருந்ததா என்பது தெரியவில்லை.
அறிவோம்: பொருளாதாரத்தில் நாம் பின்னடைந்த சமுதாயம் என்று பெயர் எடுத்துவிட்டோம். சீனர்கள் தொழில் செய்ய ஆரம்பிக்கும் முன்னரே நாம் தான் தொழிலில் முன்னணியில் இருந்தவர்கள். இப்போதும் வாய்ப்புகள் குறைந்துவிட்டதாக நான் நினைக்கவில்லை. வாய்ப்புகள் பரந்து கிடக்கின்றன. இப்போது தான் வாய்ப்புகளைப் பயன்படுத்துவதில் தீவிரம் காட்டுகிறோம். வாழ்க! வளர்க!
Saturday, 19 April 2025
"தேம்பா" சிகிரெட் (28)
இயல்பாகவே நான் சிகிரெட் பிடிக்கும் பழக்கம் இல்லாதவன். ஏதோ எப்போதோ ஒன்று இரண்டு இருக்கலாம்/ அதுவும் கூட ஏதாவது விருந்துகளாக இருக்கும்.
Wednesday, 16 April 2025
தோட்டம் விட்டு தோட்டம் மாற (27)
பொதுவாவே தோட்டம்விட்டு இன்னொரு தோட்டம் மாறிப் போவது என்றால் இப்போது போல வாகன வசதிகள் இல்லாத காலம் அது. அப்படி ஒன்றும் பெரிய அளவில் சாமான்கள் இருக்கப்போவதில்லை.. என்றாலும் குறைந்தபட்சம் துணிமணிகள் வைப்பதற்கு ஒரு பெரிய டிரங் (Trunk}பெட்டியாவது இருக்கும். பொக்கிஷங்களை வைக்கும் பெட்டி அது தான்!
Saturday, 12 April 2025
என் நண்பன் சந்திரன் (26)

Wednesday, 9 April 2025
என் ஆங்கில ஆசிரியர் (25)
எனது பள்ளி நாட்களில் நான் நினைவில் வைத்துக்கொள்வது போல எந்த ஓர் ஆசிரியரும் அமையவ்வில்லை. அதற்குக் காரணம் வாய்த்த ஆசிரியர்கள் எல்லாம் பெரும்பாலும் சீனர்கள் என்பதாகக் கூட இருக்கலாம். ஆங்கிலம் பேச முடியவில்லையே என்கிற காரணமாகவும் நானே ஒதுங்கி இருக்கலாம். ஆங்கிலம் எப்படி நம்மை ஒதுக்கி விடுகிறது பார்த்தீர்களா?
Sunday, 6 April 2025
நான் வாங்கிய முதல் ஆங்கில இதழ் (24)
Monday, 31 March 2025
அடையாளக்கார்டுகள் எப்படி?! (23)
Sunday, 23 March 2025
என்ன தான் குறிக்கோள்? (22)
நான் படிக்கும் போதே, நான் பெரிய ஆளாக வரவேண்டும் என்று என் தந்தையார் கனவு கண்டார். அவர் படிக்காதவர். அப்படி என்ன பெரிய ஆள்? அது அவருக்கே தெரியாது! அவருடைய உலகம் எல்லாம் தோட்டம் மட்டும் தான். அவருக்குத் தெரிந்த ஆள் தோட்டங்களில் வேலை செய்யும் கிராணிமார்கள் தான் பெரிய ஆள். அதனால் தான் நான் என் தாயாருக்கு உதவி செய்யக் கூட அவர் அனுமதிப்பதில்லை. அப்படிப் போனால் தோட்டத்தில் பால்மரம் சீவுகின்ற ஆர்வம் வந்துவிடும் என்று நினைத்தவர் அவர்.
ஆனால் நான் என்றுமே அப்படி நினைத்ததில்லை. எனக்கு அலுவலக வேலை தான் இலக்கு. அதற்கு ஆங்கிலம் அவசியத் தேவை என்பதை நான் அறிந்திருந்தேன். அதனால் கல்வியில் நான் அதிகம் முக்கியத்துவம் கொடுத்தது ஆங்கில மொழிக்குத்தான்.நான் தோட்டத்தில் வேலை செய்தாலும் அது அலுவலகம் மட்டுமே தவிர வேறு வேலைகளில் ஈடுபாடு இல்லை.
எனக்குக் கேரள மலையாளிகள் மீது மதிப்பும் மரியாதையும் உண்டு. ஒரே பிரச்சனை. கொஞ்ச தலைக்கனம் அதிகம்! அரைகுறை ஆங்கில அறிவை வைத்துக்கொண்டு பெரிய அளவில் அவர்கள் முன்னேறி விட்டார்கள் என்றால் அந்தத் துணிச்சலை நாம் பாராட்ட வேண்டும். அவர்களிடம் இருந்த ஒற்றுமையினால் அவர்கள் முன்னேறினார்கள் என்று கூறலாம்.
அவர்களுடன் நான் முதல் பதின்மூன்று அண்டுகள் வேலை செய்திருக்கிறேன். அது எளிதான காரியம் அல்ல! என் நண்பர் ஒருவர் சொன்னார்: "நீ அவர்களுக்குக் கிழே இருந்தால் உன்னைப் பிழிந்து எடுத்து விடுவார்கள்! அவர்கள் உனக்குக் கீழே இருந்தால் தாங்குத் தாங்கு என்று தாங்குவார்கள்!" உண்மை தான். அவர்களின் குணம் அப்படித்தான்!
எனக்கு அரசாங்க வேலையும் கிடைத்தது. மலாக்காவில் ஒரு வங்கியிலும் வேலை கிடைத்தது. என் தாயார் 'ரொம்ப தூரம்" என்று சொல்லி அனுமதிக்கவில்லை. அதனால் தோட்ட அலுவலகத்திலேயே ஒட்டிக்கொண்டேன்!
:
அறிவோம்:போனால் வராது என்பது நேரத்திற்கு மட்டுமே பொருந்தும். இதோ இந்த வினாடி இக்கட்டுரையைப் படிக்கிறீர்கள். ஓர் ஐந்து வினாடிகள் ஆகியிருக்கும். போன இந்த வினாடிகள் மீண்டும் கிடைத்துவிடுமா? போனது போனது தான்! அதனால் தான் வினாடி, நிமிடம் பார்த்து வேலைகளைச் செய்யுங்கள் என்கிறார்கள் வாழ்க்கையில் முன்னேறியவர்கள். நேரத்தைக் கவனிக்கவில்லை என்றால் குப்பைத்தொட்டி தான் நமக்கு அடைக்கலம்!
Thursday, 20 March 2025
இது தான் 'என்' தோட்டம்! (21)
Monday, 17 March 2025
சினிமா தியேட்டர்கள் என்ன ஆயின?(20)
Thursday, 13 March 2025
காணாமற் போன பள்ளிகள்! (19)
சீக்கியர்களின் கோயிலானா, குருத்துவாரா, சிரம்பான் (2024)
சிரம்பான் பட்டணத்தில் நுழையும் போதே பள்ளிக்கூடங்களாகவே இருக்கும்.
நான் படித்த செயின்போல் பள்ளி அதற்கு மேல் குருத்துவாராவில் பஞ்சாப் மொழி பள்ளிக்கூடம், ஜாவா லேன் தமிழ்ப்பள்ளிக்கூடம் இந்தப் பக்கம் கிறிஸ்துவ கன்னியர்களால் நடத்தப்பட்ட கான்வெண்ட் ஆங்கிலப்பள்ளி, தமிழ்ப்பள்ளி, கொஞசம் தள்ளிப்போனால் விவேகானந்தா தமிழ்ப்பள்ளி, இன்னும் கொஞ்சம் தள்ளி ஆங்கிலோ சைனீஸ் ஆங்கிலப்பள்ளி (ACS) - இப்படி பள்ளிகளாகவே இருந்தன.
இன்றைய நிலை என்ன? நான் படித்த பள்ளியை இடித்துவிட்டு Wisma Punca Mas என்கிற மாபெரும் கட்டிடத்தைக்கட்டி இப்போது அது பாழடைந்து கிடக்கிறது! குருத்துவாராவில் பஞ்சாப் பள்ளிக்கூடம் போதுமான ஆதரவு இல்லாமல் அப்போதே மூடப்பட்டு விட்டது. கான்வென் பள்ளி இப்போது மரண குளமாக மாறிவிட்டது! விவேகானந்தா தமிழ்ப்பள்ளி இலங்கைத் தமிழர்களின் வெறுப்புக்கு ஆளாகி அவர்கள் கல்யாண மண்டபமாக மாற்றி விட்டனர்! இங்கு மட்டும அல்ல மலேசியாவில் அவர்கள் நடத்திய அனைத்துத் தமிழ்ப்பள்ளிகளையும் மூடிவிட்டனர்! என்ன வெறுப்போ?
சிரம்பான் பட்டணத்திற்குள் நுழையும் போதே KGV பள்ளிக்கூடமும் ரயில்வே ஸ்டேஷனும் தவிர்க்க முடியாதவை. அன்றைய ரயில்வே ஸ்டேஷனில் மணிக்கூண்டும் இருக்கும். சிரம்பான் பட்டணத்தில் நேரத்தைப் பார்க்க அது ஒன்று தான் அடையாளம். காலை நேரத்தில் பள்ளிக்கூடம் போவதற்கு முன் நேரம் பார்ப்பதைத் தவிர்க்க முடியாது. அப்போது கைக்கடிகாரம் எந்த மாணவனிடமும் இருப்பதற்கான வாய்ப்பில்லை. இப்போது மணிக்கூண்டு இருந்ததற்கான அடையாளமே இல்லை. காரணம் கைக்கடிகாரம் கட்டாத கைகளே இப்போது இல்லை!
அறிவோம்: "உன்னால் முடியாது என்று சொல்வதை வேறுயாரோ ஒருவர் செய்து கொண்டுதான் இருக்கிறார். உன்னால் முடியாது என்றால் வேறு யாராலும் முடியாது. வேறு யாராலும் முடியாது என்றால் உன்னால் மட்டுமே முடியும்."
பேராசிரியை பர்வீன் சுல்தானா
Monday, 10 March 2025
Satu Makan Dua Mahu! (18)
Friday, 7 March 2025
முதன் முதல் பயன்படுத்திய பேனா! (17)
பள்ளியில் நாங்கள் பேனாக்களைப் பயன்படுத்த ஆரம்பித்த போது மையைப் பேனாக்களில் தொட்டுத்தொட்டு எழுத வேண்டும். இது தான் ஆரம்பம். அடுத்த கட்டம் தான் மை நிரப்பிய பேனாக்கள். (Fountain Pen) இதில் ஒரு சிக்கல் என்னவென்றால் எப்படியாவது சட்டையில் மை கொட்டிவிடும்.
அதன் பின்னர் பலவித பேனாக்கள். அப்போது பேனாக்களில் நமது பெயரைப் பொறிப்பது ஓர் அற்ப சந்தோஷம். அதாவது நான் பைலட் (Pilot) பேனா வைத்திருந்தேன். உடனே என்னுடைய பெயரை அதில் பொறிப்பது! அப்போதைய மாணவரிடேயே இருந்த வழக்கம். எவனும் திருடப்போவதில்லை. என்ன செய்ய, கூட்டத்தோடு கோவிந்தா! அவ்வளவு தான்! சீனர்களின் வியாபார யுக்தியே யுக்தி!
பெரும்பாலும் முதலாம் படிவம் வந்துவிட்டாலே சாதாரண புத்தகப் பைகளைப் (தோளில் தொங்கும்) பயன்படுத்த முடியாது. புத்தகங்கள் அதிகரிக்கும் போது இந்த வகையான ரோத்தான் பைகள்தான் தேவைப்படும். எல்லா மாணவர்களும் இந்தப்பைகளைப் பயன்படுத்தித் தான் புத்தகங்களைக் கொண்டு போக வேண்டும். நீங்கள் இடைநிலைப்பள்ளிகளில் பயில்கிறீர்கள் என்பதற்கு இது தான் அடையாளம்! நீண்ட சிலுவார் அணிவதும் இப்போது தான். மழை காலத்திற்கெல்லாம் புத்தகங்கள் நனையாமல் பார்த்துக் கொள்வது நமது பொறுப்பு.
அறிவோம்: உலகை மாற்ற நீங்கள் பயன்படுத்தக் கூடிய மிக சக்தி வாய்ந்த ஆயுதம் கல்வி.
நெல்சன் மண்டேலா
Thursday, 6 March 2025
கண்டதைக் கற்பவன் பண்டிதன் ஆவான்! (16)
தமிழிலே இப்படி ஒரு அனுபவமொழி உண்டு. கண் கண்டதைப் படிப்பவன் பண்டிதன் ஆவான் என்று சொல்லுவார்கள்.
அப்படி என்றால் புரிந்து கொள்ளுங்கள். எனது நாட்டம் துப்பறியும் கதைகள், சினிமா இதழ்கள், தமிழ் நேசன், தமிழ் முரசு, தமிழ் மலர், புதிது புதிதாக வரும் மாத இதழ்கள், ஆனந்த விகடன், குமுதம்,கல்கண்டு என்று அனைத்தையும் படிப்பேன். தமிழ் முரசு நாளிதழில் வெளியான இராதா மணாளனின் "பாண்டியன் திருமேனி" தொடர், குமுதம் வார இதழிலில் வெளியான சாண்டியனின் "கடல் புறா:", இந்தியன் மூவிஸ் நியுஸ் மாத இதழில் வெளியான, தமிழ்வாணனின் "மணிமொழி என்னை மறந்துவிடு" -உள்ளூர் வார மாத இதழ்கள். இப்படி பரவலான வாசிப்பு ஏற்பட்டுவிட்டது.
இப்படி நான் படித்த பத்திரிக்கைகளில் நானே காசு போட்டு வாங்கிய பத்திரிக்கை என்றால் அது தமிழ்வாணனின் வார இதழான கல்கண்டு மட்டுமே! அதன் விலை அப்போது 15 காசு என்று நினைக்கிறேன். எனது பட்ஜெட்டில் அதற்குமேல் இடமில்லை! சினிமா இதழ்களை இதுவரை நான் காசு போட்டு வாங்கியதில்லை. அது போலத்தான் துப்பறியும் கதைகளும்!
தமிழ் நேசன் நாளிதழை பத்து வயதில் படிக்க ஆரம்பித்து சுமார் ஐம்பது வருடங்கள் மேல் படித்திருக்கிறேன். தமிழ் வாணனின் "கல்கண்டு" வார இதழை பதினாறு வயதில் படிக்க ஆரம்பித்து சுமார் முப்பது ஆண்டுகள் தொடர்ந்து படித்திருக்கிறேன்.
இப்படியெல்லாம் நான் படித்தாலும் பள்ளி பாடங்களை நான் மறக்கவில்லை. அப்போது அஞ்சலில் படிக்கும் வசதிகள் இருந்தன. அப்போது சிங்கப்பூரில் இருந்த Stamford College மிகவும் பிரபலம். அங்கிருந்து நான் பல பாடங்களை எடுத்திருக்கிறேன். என்ன பயன்? ஓர் ஆசிரியரின் துணை இல்லாமல் படிப்பது அனைத்தும் வீண்! ஆங்கிலம் எனக்கு முக்கியத் தேவையாக இருந்ததால் அதன் தொடர்பில் நிறைய அஞ்சல் வழி மூலம் கற்றுக் கொண்டேன்.
எனக்கு வெளிநாடுகளில் பேனா நண்பர்கள் அதிகம். நிறைய கடிதங்கள் எழுதியிருக்கிறேன். ஒரே காரணம் தான். ஆங்கிலத்தை தவறவிடக் கூடாது என்பது தான்.
அறிவோம்: அறிஞர் அண்ணாவுக்கு அறுவை சிகிச்சை நடந்த நேரம். அடுத்த நாள் அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது அண்ணா நூல் ஒன்றினைப் படித்துக் கொண்டிருந்தார். அண்ணா மருத்தவரை அழைத்து தான் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை முடித்த பின்னர், அறுவை சிகிச்சையை ஒத்திப்போடச் சொன்னாராம். அதன் பின்னர் தான் அறுவை சிகிச்சை நடந்ததாம்.
Tuesday, 4 March 2025
செனவாங் தோட்டம் (15)
மூனாங் கட்டையில் நடந்த ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுவது அவசியம். வானொலியில் நேயர் விருப்பம் என்பது அந்தக் காலகட்டத்திலும் இருக்கத்தான் செய்தது. எனது நண்பரின் தந்தையார் எம்.கே.தியாகராஜபாகவதரின் தீவிர இரசிகர். அவர் பாகதவர் பாடிய "பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர்" பாடலை கேட்க ஆசை. அவர் ஓரு கடுதாசியை எடுத்துக்கொண்டு, வீடு வீடாகச் சென்று "இந்தப் பாடல் உங்களுக்கு விருப்பமா?" என்று கேட்டுக் கொண்டு வந்தார்! பாவம் அப்பாவி மனிதர்! பின்னர் அவர் எத்தனை நேயர்கள் கேட்டார்கள் என்கிற பட்டியலை அனுப்பி வைத்ததாக அவரின் மகன் என்னிடம் சொன்னார்! அப்போது எங்களிடம் வானோலி பெட்டி இல்லை. அதனால் அவரின் ஆசை நிறைவேறியதா என்பது தெரியவில்லை.
ஏறக்குறைய எனதுபதினைந்தாவது வயதில் எனது குடும்பம் செனவாங் தோட்டத்திற்கு மாறியது. எல்லாம் எனது கல்வியின் பொருட்டு தான். இது பள்ளி போக வசதியான இடம். எனது வயது ஒத்த நண்பர்களும் இருந்தனர்.
இது ஒரு வேறொரு உலகம். கல்விக்கு யாரும் பயன்படவில்லை. சினிமா பத்திரிக்கைகள், துப்பறியும் கதைகள் - இவைகள் தான் முதலிடம். அத்தனை சினிமா இத்ழ்களையும், துப்பறியும் கதைகளையும் படித்திருக்கிறேன். அத்தோடு திராவிட இதழ்கள். கவனச் சிதறல்கள் அதிகம்.
என் வகுப்பில் படிக்கும் மாணவர்கள் யாரும் இல்லை. கல்வியில் எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனாலும் இந்த தோட்டாமே என் கண்ணைத் திறந்தது என்று சொல்லலாம். கொஞ்சம் பொது அறிவு கிடைத்தது. என்னிடம் எனது கம்போங் எது என்று கேட்டால் அது செனவாங் தோட்டம் என்று தான் சொல்லுவேன். அது தான் இன்றளவும் வேரூன்றி விட்டது.
அறிவோம்: நமது உடம்பில் உடைக்கமுடியாத எலும்பு எதுவென்று தெரியுமா? எது எதுவோ ஞாபகத்திற்கு வரும். ஆனால் அந்த எலும்பு மட்டும் ஞாபகத்திற்கு வராது. அது தான் நமது தாடை எலும்பு. நமது உடலில் உடைக்க முடியாத மிக உறுதியான எலும்புகளில் அதுவும் ஒன்று என்று சொல்லப்படுகிறது.
Thursday, 27 February 2025
செயின் போல் பள்ளி (14)
நான் சிரம்பானில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் எனது பெற்றோர்கள் சிரம்பான் அருகே அள்ள தேர்ட் மைல் எஸ்டேட் (அதாவது தமிழில் மூனாங்கட்டை என்பார்கள்) அங்கே மாறி வந்தார்கள்.
Wednesday, 26 February 2025
நீண்ட பயணம் ஆரம்பம்!
கல்வியில் எனது நீண்ட பயணம் என்றால் அது சிரம்பானில் உள்ள செயிண்ட் போல் பள்ளி தான். முதல் ஆறு ஆண்டுகள் காலை நேரம் பின்னர் மூன்று ஆண்டுகள் மாலை நேரப்பள்ளி. காலை நேரப்பள்ளியில் திறமையற்ற என்னைப்போன்ற மாணவர்களை மாலை நேரத்தில் தள்ளி விட்டார்கள்.
ஒன்றை நான் சொல்லியாக வேண்டும். நான் திறமையற்ற மாணவன் என்று சொல்லிவிட முடியாது. எந்த ஒரு வழிகாட்டியும் இல்லை. கடைசிவரையிலும் இல்லை. ஏதோ பள்ளிக்குப் போனோம் வந்தோம். என்னத்தையோ படித்தோம். அவ்வளவு தான். ஆசிரியர்களிடம் கேட்க தைரியம் இல்லை. ஆங்கிலம் வராது. ஆசிரியர்கள் அனைவருமே சீனர்கள்.
உண்மையில் மாலை நேரப்பள்ளி ஒரு வராப்பிரசாதம் என்று தான் சொல்ல வேண்டும். காலை நேரத்தில் சிலோனீஸ் மாணவர்கள் மற்றும் மலையாள மாணவர்கள் - இவர்கள் எல்லாம் நம்மைப் பார்த்தாலே ஆகாது. என்னுடைய சூழலில் உள்ள மாணவர்கள் யாரும் இல்லை. அதனால் சீன மாணவர்கள் தான் நண்பர்கள். அவர்களும் என்னைபோன்ற புத்திசாலிகள்!
மாலை நேரப்பள்ளியில் இந்திய மாணவர்கள், மலாய் மாணவர்கள், சீன மாணவர்கள் எல்லாம் ஒரு கலப்பு. . அப்போது தான் பேசக்கூடிய தைரியமே வந்தது. நாலு பேரோடு பேசுகின்ற துணிவும் வந்தது. ஆனால் பரிதாபம். கல்விக்கு அது உதவவில்லை. எப்படியோ சீனியர் கேம்ப்ரிட்ஜ் பரிட்சை எழுதும் அளவுக்குப் போய்விட்டேன். வெற்றி பெறவில்லை.
நான் செண்டாயான் தோட்டத்தில் தான் எனது கல்வியை ஆரம்பித்தேன். ஆனால் ஆச்சரியம் என்னைத்தவிர வேறு மாணவர்கள் யாரும் என்னோடு படித்ததில்லை. நான் அங்கிருந்த மூன்று ஆண்டுகளில் நான் ஒருவனாகத்தான் தனி ஆளாக போய் வந்துகொண்டிருந்தேன். இதை ஏன் சொல்லுகிறேன் என்றால் சேர்ந்து படிக்க உதவியாக இருந்திருக்கும் அல்லவா?
அறிவோம்: அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாளிகை எப்போது தனது வண்ணத்தை மாற்றியது? 1814 - ம்- ஆண்டு இங்கிலாந்துக்கும் அமரிக்காவுக்கும் கடும் போர் நடந்தது. அந்த நேரத்தில் அமரிக்க அதிபரின் மாளிகை - பல வண்ணங்களோடு இருந்த மாளிகையை - நெருப்பு வைத்து எரித்தனர் இங்கிலாந்து படையினர். எரித்த பாகங்களை மறைக்க வெள்ளையடித்து மறைத்தனர் அமெரிக்கர்கள். ஆக, இன்றுவரை, வெள்ளையடித்த மாளிகை, வெள்ளை மாளிகை (White House) யாகவே தொடர்கிறது.
வரலாற்று ஆசிரியர் மன்னர் மன்னன்
Tuesday, 25 February 2025
இரண்டு ஆண்டுகளே படித்தேன் (12)
