Wednesday 3 March 2021

யாருக்குத்தான் பயப்படுவது!

 யாருக்குத்தான் பயப்படுவது என்பதில்  கூட ஒரு விவஸ்தை இல்லாமல் போய்விட்டது!

அடிதடி கும்பல், இரகசிய கும்பல், குண்டர் கும்பல் இப்படி  எததனையோ கும்பல்களைப் பற்றி நாம் கேள்விப் பட்டிருக்கிறோம். அவர்கள் கத்தியால் குத்திக் கொண்டார்கள்,  வாளால் வெட்டிக் கொண்டார்கள், துப்பாக்கியால் சுட்டுக் கொண்டார்கள என்று பல! இன்னும் குண்டர் கும்பல் தாக்கல்,  குண்டர் கும்பல்களிடையே கைகலப்பு இப்படியாக ஒரு வகைச் செய்திகள்!

பொது மக்களுக்கு இது போன்ற செய்திகள் எல்லாம் நடுக்கத்தைக் கொண்டு வரும்!

ஆனால் இப்போது நாட்டில் புது வகையான செய்தி ஒன்று பரவிக் கொண்டிருக்கிறது. ஜொகூர் மாநில காவல்துறைத் தலைவர்  டத்தோ  அயூப் கான் மைதீன் பிச்சை கூறியிருப்பதைப் பார்க்கும் போது "யாரைத்தான் நம்புவதோ ஏழை நெஞ்சம்!" என்று பாட வேண்டும் போல் தோன்றுகிறது!

டான் ஸ்ரீ, டத்தோ ஸ்ரீ  என்று நம்பப்படும்  நபர்களிடம்  எச்சரிக்கையாய் இருங்கள் என்று பொது மக்களை அறிவுறுத்திருக்கிறார் டத்தோ அயூப் கான்! இவர்கள் போலீஸாரையே மிரட்டுகிற அளவுக்குச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்களாம்! எல்லாம் நேரம் தான்!

ஆனால் இந்த நபர்களின் டான் ஸ்ரீ, டத்தோ ஸ்ரீ விருதுகள் மலேசிய அரசாங்காத்துடையது அல்ல என்கிறார் காவல்துறைத் தலைவர்.  சில ஆண்டுகளுக்கு முன்னர் சபா மாநிலத்தைச் சொந்தம் கொண்டாடிய சுலு சுல்தான் என்பவர் இது போன்ற விருதுகளைக் கொடுப்பதாக செய்திகள் வெளியாயின.  பட்டங்கள் பெற இங்கு பணமே பிரதானம்!ஆக, அது இன்னும் தொடர்கிறது என்றே தெரிகிறது.

ஆனால் நமக்குத் தெரிந்தது எல்லாம் இந்த, உள்ளுரா வெளியுரா,  என்பதை எப்படி அறிந்து கொள்ளுவது? இதற்குக் காவல்துறை தான்  ஒரு முடிவை எடுக்க வேண்டும். அரசாங்கத்தால் ஏற்கப்படாத, குறிப்பாக டான்ஸ்ரீ, டத்தோஸ்ரீ வீருதுகளைப் பயன்படுத்துபவர்களைக் கண்காணிக்க வேண்டும். இவர்கள் மக்களை ஏமாற்றுபவர்கள் என்று தெரிந்தவுடன் அவர்கள் மேல் நடவடிக்க எடுக்க வேண்டும்.

இந்த வித்தியாசங்கள் எல்லாம் பொது மக்களுக்குத் தெரிய நியாயம் இல்லை. இப்படியெல்லாம் மக்களைப் பயமுறுத்திக் கொண்டிருந்தால் யாருக்குத்தான் பயப்படுவது! ஒரு பக்கம் பட்டமே இல்லாமல் பட்டாக்கத்தியை வைத்துக் கொண்டு  பயமுறுத்துகிறான்! இன்னொரு பக்கம் பட்டம் பதவிகளை வைத்துக் கொண்டு பயமுறுத்துகிறான்!

என்னவோ நடவடிக்கை எடுத்தால் சரி!

No comments:

Post a Comment