Sunday 7 March 2021

இது சரியான தருணமா?

 குடிநுழுவுத்துறை ஓரிரு நாள்களுக்கு முன்னர் புடு அடுக்குமாடி குடியிருப்பில் மேற்கொண்ட அதிரடி சோதனையில் சுமார் 205 வெளி நாட்டினர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

இது செய்தி. இதில் ஏதும்  தவறு இருப்பதாகத் தெரியவில்லை. குடிநுழுவுத்துறை தனது கடமையைச் செய்கிறது. அவர்களது கடமையுணர்ச்சியை நாம்  பாராட்டுகிறோம்.

ஆனால் நமக்குள்  ஒரு கேள்வி எழுகிறது.  சோதனை செய்வதற்கு இது சரியான தருணமா என்கிற கேள்வி.

கோவிட்-19  தொற்று அப்படி ஒன்றும் குறைந்ததாகத் தெரியவில்லை. தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதிப்புகளை சுகாதாரத் துறை பதிவு செய்கிறது.

இந்த நேரத்தில் இந்த சோதனையின் நோக்கம் என்ன?  அதன்  பின்னணியில் அரசியல் இருக்கிறதா என்கிற சந்தேகம் எழுகிறது!

வெளி நாட்டுத் தொழிலாளர்கள்  இன்னும் சட்டத்தை மீறி நாட்டில் தங்கியிருப்பவர்கள்  இவர்களில் பலர் கோவிட்-19 தடுப்பூசி கட்டுப்பாட்டுக்கள்  வரவில்லை. சமீபத்தில் அந்நிய நாட்டவர்கள் கோவிட்-19 தொற்றின் பரிசோதனையின் போது சுமார் 49 பேர் தொற்று பரவியிருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டிருக்கின்றன. பரிசோதிக்கப்பட்டோர் சுமார் 7,000 பேருக்கு மேற்பட்டோர். இது சட்டப்படி வேலை செய்கின்றவர்களின் நிலை.  சட்டத்தை மீறி தங்கியிருப்பவர்  நிலை என்ன? அவர்கள் பரிசோதனைக்காக வரப் போவதில்லை.

இப்படி இது போன்ற அதிரடி சோதனைகள் செய்யும் போக்கு நீடித்தால் அவர்கள் தங்கள் இருப்பிடத்திலிருந்து வெளி வரப்போவதில்லை! அவர்களில் எத்தனை பேர் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தெரியப் போவதுமில்லை!

நாம் சொல்ல வருவதெல்லாம் இது போன்ற அதிரடி சோதனைகளினால்  மலேசியர்கள் தான் பாதிக்காப்படுகிறார்கள் என்பது தான். நோயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாது.  ஒரு பக்கம் தடுப்பூசி. இன்னொரு பக்கம் நோய் பரவுதல்!

நம்முடைய சந்தேகம் எல்லாம் தொற்று திட்டம் போட்டு பரப்பப்படுகிறதோ என்பது தான். அப்படி இல்லையென்றால் மிக்க மகிழ்ச்சி! இல்லையேல் அடுத்த பொதுத் தேர்தல் வரை இப்படியே போய்க் கொண்டிருக்க வேண்டி வருமோ என்கிற கவலை தான்!

காரணம் அரசியல்வாதிகள் அப்படி ஒன்றும் உத்தமர்கள் இல்லையே!

No comments:

Post a Comment