மேடும் பள்ளமும் இருப்பதுதான் தொழில்
தொழில் என்றால் என்ன? வேலை செய்தால், மாதம் முடிந்ததும் சம்பளம். தொழில் செய்தால் ஒரு நாள் இருக்கும், ஒரு நாள் இருக்காது. அது தான் தொழில்.எதுவும் சீராக நடைமுறையில் இருக்காது. ஆனால் ஒவ்வொரு நாளும் இவ்வளவு தான் என்கிற ஒரு மதிப்பீடு நமக்கு இருக்கும். அது வந்தாலே நமக்கு ஒரு திருப்தி வந்துவிடும்.
ஆனால் தொழிலில் எந்த நேரத்தில் எது வெடிக்கும் என்பதை நம்மால் ஊகிக்க முடியாது.
இப்போது, இந்த கோவிட்-19 தொற்று காலத்தில், நாம் அணியும் முகக்கவசம் பற்றி எந்தக் காலத்திலாவது யோசித்திருப்போமா? அது பற்றி கவலைப் பட்டிருப்போமா? ஏன், அப்படி ஒரு தொழிலாவது இருக்கிறது என்றாவது நினைத்துப் பார்த்திருப்போமா? ஏதோ டாக்டர்கள் பயன்படுத்துகிறார்கள், சோதனைக் கூடங்களில் பயன்படுத்துகிறார்கள் - அவ்வளவு தான் நமக்குத் தெரியும். தெரிந்திருந்தால் கூட அதை ஒரு எத்தனை நுட்பமான தொழில் என்பதாகக் கூட நமது மண்டையில் ஏறியிருக்காது!
ஆனால் இப்போது இந்த தொற்று நோயின் காலக்கட்டத்தில் அதே முகக்கவசத்தின் நிலை என்ன தெரியுமா? முகக்கவசம் தயாரிக்கும் நிறுவனங்கள் தான் இன்று உலகில் மிகப்பெரிய பணக்காரர்கள். முன்பு ஆடி அசைந்து போய்க் கொண்டிருந்த அந்த தொழிலின் இன்றைய நிலை யாருமே எதிர்பார்க்கவில்லை. உலக பணக்காரர்கள் வரிசையில் அவர்கள் இன்று உயர்ந்திருக்கிறார்கள்! இன்னும் அவர்களின் முகக்கவச தயாரிப்பு நின்றபாடில்லை! தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இப்போதைக்கு நிற்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை! இன்று தயாரிப்பில் அவை தான் உலகில் மிக மிக வேகமாக வளர்ந்து வரும் நிறுவனங்கள்.
எல்லாத் தொழில்களும் அப்படித்தான். எந்த முன்னேற்றத்தையும் கண்டிராத ஒரு தொழில் எந்த முன்னறிவுப்பும் இன்றி நம்மைத் திணறடிக்கும்! மீண்டும் ஒரு சான்று. நம் நாட்டில் பள்ளிகளில் இயங்களை வகுப்புகள் என்றதும் என்ன ஆயிற்று? இதனை யாரும் எதிர்பார்க்கவில்லை. தூங்கிக் கிடந்த கணினி நிறுவனங்கள் விழித்துக் கொண்டன. நீங்களே பார்த்திருப்பீர்கள். பெற்றோர்கள் கணினிகளை வாங்க என்ன பாடுபட்டார்கள் என்று. இப்போதும் அந்த அலை ஓயவில்லை! புதிதாகவும் கணினி நிறுவனங்கள் ஆங்காங்கே திறக்கப்படுகின்றன.
தொழில் என்றால் இப்படித்தான். ஏற்றம் இறக்கம் என்பதெல்லாம் சாதாரணம்! ஒரு தொழிலில் ஈடுபட்டிருக்கும் போது தீடீரென ஏதாவது ஒரு சுனாமி வரும்! சமயங்களில் நல்லதாகவும் இருக்கும்! கெடுதலாகவும் இருக்கும்!
இப்படியெல்லாம் நடக்கும் என்பது தான் தொழில். பொறுமை பொன்னை அள்ளித்தரும்! சந்தேகமில்லை!
No comments:
Post a Comment