Saturday 5 June 2021

டேங்கர் லாரி ஓட்டும் கேரளப் பெண்!

         


ஒரு காலக் கட்டத்தில் பெண்கள் சைக்கிள் ஓட்டுவதைக் கண்டு அதிசயத்திருக்கிறேன். அதன் பின்னர் மோட்டார் சைக்கிள் ஓட்டுவதைக் கண்டு அதிசயத்திருக்கிறேன்.  அப்புறம் கார், டெக்சி, பஸ் இப்படி ஓட்டியதையெல்லாம் கண்டாயிற்று. விமானம் ஓட்டும் பெண்களையும் பார்த்தாயிற்று.

இப்போது ஒரு பெண், பெட்ரோல் டேங்கர் லோரி ஓட்டுகிறார் என்பதைக் கேட்டு மலைத்துப் போனேன். 

டேவிஸ் டெலிசியா என்பது அவரது பெயர். கேரளத்துப் பெண். திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்தவர். வயது 22. வணிகத் துறையில் முதுகலை இறுதியாண்டில்  பயின்று வருகிறார்.

என்ன தான் படித்துப் பட்டம் பெற்றாலும் தன்னுடைய ஈர்ப்பு என்பது  டேங்கர் லோரிகள் மீதுதான் என்கிறார் டெலிசியா! 

"அதனால் அந்தத்  துறையிலேயே எனது கவனத்தை செலுத்த விரும்புகிறேன். அரசாங்கத்தில் டேங்கர் ஓட்டும் பணியில்  நான் தொடர்ந்து பணியாற்றுவேன்!"

மூன்று ஆண்டு காலமாக  இந்த பெட்ரோல்  டேங்கர் ஓட்டும் பணியில் அவர் ஈடுபட்டிருக்கிறார். பொதுவாக பெட்ரோல் டேங்கர்களைப் போலிஸார் நிறுத்தி சோதிப்பதில்லை. அதனால் இது நாள் வரை ஒரு பெண்,  டேங்கர் ஓட்டுகிறார் என்று யாரும் கண்டு பிடிக்கவில்லை. அதுவும் ஒரு நாளைக்கு ஏறைக்குறைய, போகவர,   300 கிலோமீட்டர் பயணம் செய்கிறார்.சமீபத்தில் தான் ஒரு பெண் டேங்கர் ஓட்டுவதைப் போலிஸார் கண்டு பிடித்த பின்னர் தான் அவர் வெளிச்சத்திற்கு வந்தார்.  அவரிடம் டேங்கர் ஓட்டுவதற்கான உரிமம் உண்டு மற்றும் தேவையான பத்திரங்களும் பக்காவாக வைத்திருந்தார். எந்த குறையும் இல்லை. கேரளாவிலேயே டேங்கர் ஓட்ட உரிமம் வைத்திருக்கும் ஒரே பெண் இவர் தான் என்று சொல்லப்படுகிறது.

நாம் பெரிய பெரிய படிப்புகளைப் படித்திருக்கலாம். அது நாம் விரும்பும் படிப்பாக இருக்கலாம் விரும்பாத படிப்பாகவும் இருக்கலாம். ஆனால் நாம் எந்த துறையைத் தெர்ந்தெடுக்கிறோமோ அந்தத் துறையில் தான் நம்மால் வாழ்க்கையில் உயர முடியும் என்பதை மறக்க வேண்டாம்.

இப்போது அவர் டேங்கர் லோரி ஓட்டுனர் என்கிற அடையாளத்தைக் கொண்டிருந்தாலும் அந்த துறையிலேயே அவர் உச்சத்தை தொட முடியும். யார் கண்டார்? நாளை அவர் 20 டேங்கர்களுக்குச் சொந்தக்காரர் ஆகலாம். இது நடக்காது என்று சொல்ல முடியுமா? பேருந்துகள் மீது காதல் கொண்ட ஒருவர் இப்போது 50 க்கு மேற்பட்ட பேருந்துகளுக்குச் சொந்தக்காரர்.

நாம் விரும்புவதை செய்யும் போது நம்மால் எளிதாக வாழ்க்கையில் உயர முடியும். விரும்பியதைச் செய்யுங்கள். அதுவே உங்களை உயர்த்தம்!



No comments:

Post a Comment