Tuesday 1 June 2021

கவிஞர் வைரமுத்து திரும்ப ஒப்படைத்தார்!

 கேரள மாநிலத்தின்  ஓ என் வி இலக்கிய விருதுக்கு ஓ என் வி  கலாச்சாரக் கழகம் கவிப்பேரரசு வைரமுத்துவைத்  தேர்வு  செய்திருந்திருந்தது.

ஆனால் இந்தத் தேர்வு சரியானதல்ல என்பதாக நடிகை பார்வதி தனது டுவிட்டர் பக்கத்தில் தனது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தார். பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒருவருக்கு இந்த விருதை கொடுப்பது மிக அவமானத்திற்குரியது என்று குறிப்பிட்டிருந்தார்.

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் திரைப்பட பாடகி சின்மயி, "மீட்டூ" இயக்கம் தமிழ் நாட்டில் உச்ச கட்டத்தில் இருந்த போது  வைரமுத்துவினால் தான் பாலியில் சீண்டலுக்கு ஆளானதாக குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் வைரமுத்து அந்தக் குற்றச் சாட்டை மறுத்து விட்டார். அதன் பின்னர் அந்தப் பிரச்சனை முடிந்து விட்டதாகவே நினைத்திருந்தோம். காரணம் சின்மயி, வைரமுத்துவின் மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதனால்.

இப்போது இலக்கிய விருது கொடுக்கப்படுகின்ற போது மீண்டும் இந்த பிரச்சனை எழுப்பப்பட்டிருக்கிறது. இது சரியா தவறா என்பது பற்றி நாம் கேள்வி எழுப்பப் போவதில்லை. இதில் யார் சொல்லுவது சரி, யார் சொல்லுவது பொய் என்பது அவர்களுக்குத்தான் தெரியும். நமக்குத் தெரிய நியாயமில்லை. நமக்குத் தெரிந்ததெல்லாம் வைரமுத்து நாடு போற்றும் கவிஞர். தமிழர்களால் கொண்டாடப்படும் கவிஞர். இப்படி ஒரு குற்றச்சாட்டு என்னும் போது நமக்குக் கோபம் வரத்தான் செய்யும். ஆனால் உண்மை என்ன, யாருக்குத் தெரியும்?

ஒரு விஷயம் நமக்குப் புரிகிறது. இந்தக் குற்றச்சாட்டு இனி எல்லாக் காலங்களிலும் கவிஞர் வைரமுத்துவின் மீது வைக்கப்படும். தமிழகத்தை தவிர்த்து பிற மாநிலங்களிலிருந்து எந்த ஒரு விருதினையும் அவர் பெற முடியாது. பிராமண சமூகம் வருங்காலங்களில் இந்த குற்றச்சாட்டை  மீண்டும் மீண்டும் கையில் எடுக்கும்! வைரமுத்துவிற்கு எதிராகவே நிற்கும்!

தாய் தமிழகத்தில் மட்டும் தான் அவருக்கு உரிய மரியாதைகள் கிடைக்கும். இங்கும் பா.ஜ.க. ஆதரவு அரசாங்கம் என்றால் அதுவும் கைவிட்டுப் போகும்!

நாடு போற்றும் நல்லவர்களின் பெயரைக் கெடுக்க நாலு பேர் இருந்து கொண்டு தான் இருப்பார்கள்.  அவர்கள் எச்சரிக்கையாகத்தான் இருக்க வேண்டும்.

கவிப்பேரரசு வைரமுத்து தனது வழங்கப்பட்ட விருதினை மீண்டும் ஓ என் வீ  கழகத்திடம் ஒப்படைத்து விட்டதாக கூறப்படுகின்றது.

No comments:

Post a Comment