Sunday 6 June 2021

சீனாவின் பயமுறுத்தலா?

 

சீன விமானங்கள் மலேசிய எல்லைக்குள் தனது பயிற்சிகளை மேற்கொள்வது என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது என்பதை அரசாங்கம் தெளிவு படுத்த வேண்டும்.

இது நாள் வரை சீன விமானங்கள் இப்படி ஒரு பயிற்சியை மேற்கொள்ளவில்லை என்பதை நமது அரசாங்கம் உறுதிபடுத்துகிறது. ஆனால் சீனாவோ இது வழக்கமான பயிற்சி தான் என்று மார் தட்டுகிறது.

சீனா என்றாலே நம்பகத்தன்மை  இல்லாத ஒரு நாடு என்று உலகமே அறியும். இப்போது பணத்தைக் கொட்டி பல நாடுகளைக் கபளீகரம் செய்கின்ற ஒரு போக்கைக் கடைப்பிடித்துக் கொண்டிருக்கிறது.

ஸ்ரீலங்கா அதற்கு உதாரணம். இந்த நாடு இப்போது சீனாவின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறது என்பது நாளுக்கு நாள் செய்திகள் வெளியாகின்றன. ஏன்? அங்கு பயன்பாட்டில் உள்ள தமிழ் மொழியை அழித்துவிட்டு சீன மொழியை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது! சீன மொழிக்கும் ஸ்ரீலங்காவுக்கும் என்ன சம்பந்தம் என்று நாம் கேட்டாலும் அதைக் கேட்க ஸ்ரீலங்காவுக்குத் திராணி இல்லை!

நமது மாண்புமிகு முன்னாள் பிரதமர் நஜிப் தொடர்ந்து பதவியில் இருந்திருந்தால் இந்நேரம் மலேசியாவின் பல பகுதிகள் சீனாவின் கட்டுப்பாட்டில் வந்திருக்கும்! டாக்டர் மகாதிரின் முயற்சியால் அது பாதியில் அறுந்து போனது!

அதற்காக சீன தனது முயற்சியை விட்டுவிடும் என்று நம்புவதற்கில்லை. இப்போது இருக்கின்ற அரசாங்கம் கூட அவர்களுக்குச் சாதகமாகத்தான் நடந்து கொள்ளும் என்று நம்ப இடமிருக்கிறது. குறுகிய காலத்தில் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அமைச்சரவையில் இருக்கிறார்கள். எதுவும் நடக்கலாம்!

சீன விமானங்கள் மலேசிய எல்லைக்குள் அத்து மீறுகிறது என்றால் அதனைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. அதனை எங்கு எடுத்துச் செல்ல வேண்டுமோ அங்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

நமது நாடு இந்த அத்து மீறலைக் கண்டிக்கிறதோ இல்லையோ  அமெரிக்கா இதனைக் கண்டித்திருக்கிறது. அப்படியென்றால் நாம் பேசாமடந்தையாக இருந்து விட முடியாது. அல்லது "பார்க்கலாம்!" என்று தள்ளி விட முடியாது.

அடுத்த பொதுத் தேர்தலை தள்ளிப்போட கொரோனாவைப் பயன்படுத்துவது போல இந்த விமான அத்துமீறலைப் பயன்படுத்த கொரோனாவை பயன்படுத்த முடியாது!

எதிர்கட்சியான பக்காத்தா ஹராப்பான் சொல்லுவதைப் போல  இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

No comments:

Post a Comment