Wednesday 2 June 2021

ஏன் ஏஜி ஆக முடிவதில்லை?

நமது நாட்டில் சட்டத்துறைத் தலைவராக மலாய்க்காரர் அல்லாதவர் வர இயலாதா என்கிற ஒரு கேள்வி நம்மிடம் எப்போதும் உண்டு.

வர இயலாது என்றால் அதற்கான காரணம் என்னவாக இருக்கும்?  இது போன்ற பெரிய பதவிகளுக்கு மலாய்க்காரர் மட்டுமே வர முடியும் என்பதாக சொல்லுவது எதனால்?

மலாய்க்காரர் அல்லாதவர் வர இயலாது என்று எந்த அரசியல் சட்டமும் கூறவில்லை.  அப்படி கூறுவதாக இருந்தால் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தில் டாமி தாமஸ் சட்டத்துறைத் தலைவராக பிரதமர் டாக்டர் மகாதிர் அவரை நியமித்திருக்க மாட்டார்.

சட்டத்தில் எந்தப் பிரச்சனையும் எழவில்லை. இதனை எதிர்ப்பவர் யார் என்று பார்க்க வேண்டும்.  மலாய் அரசியல்வாதிகள் தான் மலாய்க்காரர் அல்லாதவர் அந்தப் பதவிக்கு வருவதை விரும்புவதில்லை. அதிலும் குறிப்பாக அம்னோ கட்சியைச் சேர்ந்த மலாய் அரசியல்வாதிகள். பக்காத்தான் ஹராப்பான் கட்சியைச் சேர்ந்த மலாய் அரசியல்வாதிகளால் எந்தப் பிரச்சனையும் எழவில்லை. எந்த எதிர்ப்புக் குரலும் கொடுக்கவில்லை. அதனால் தான் அந்த கட்சி ஆட்சியில் இருக்கும் வரை டாமி தாமஸ் ஸால் பதவியில் நீடிக்க முடிந்தது.

கடந்த காலங்களில் அம்னோ அரசியல்வாதிகள் பதவி வகித்த காலங்களைப் பின் நோக்கிப் பார்த்தால் நாட்டிற்கு அவர்களால் ஏற்படுத்தப்பட்ட சேதங்கள் ஏராளம்! ஏராளம்! அனைத்தும் ஊழல்! அனைத்திலும் ஊழல்! ஊழல் இல்லாத அம்னோ அரசியல்வாதிகள் இல்லையென்றே சொல்லலாம்! அந்த அளவுக்கு ஊழலின் ஆதிக்கம் நீக்கமற நிறைந்திருந்தது! இந்த ஊழல் அரசியல்வாதிகளுக்குப் பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தான் சட்டத்துறைத் தலைவர் மலாய்க்காரராக இருக்க வேண்டும் என்று அலறிக் கொண்டிருப்பவர்கள்! அதனால் தான் அம்னோ அரசியல்வாதிகள் ஊழல் என்று அடிபடும் போதெல்லாம் சட்டத்துறைத் தலைவர்களின் பெயரும் அடிபடுகிறது!

மற்றபடி அரசியல்வாதிகளுக்கு இனப்பற்று, மொழிப்பற்று,சமயப்பற்று என்பதெல்லாம் வெறும் வெளி வேஷம் என்பதை நினைவில் வைத்துக் கொண்டால் போதும்.

வருங்காலங்களில் மீண்டும் டாமி தாமஸ் போன்ற சட்ட அறிஞர்கள் சட்டத்துறைத் தலைவராக வர வாய்ப்பு உண்டா? நிச்சயம் உண்டு. நமபலாம்!

No comments:

Post a Comment