Saturday 13 May 2023

மித்ராவின் உதவிகரம்!

"அக்கா நாசிலெமாக்" என்றாலே சமீப காலங்களில் மிகவும் புகழ்வாய்ந்த ஒரு கடையாக மாறிவிட்டது!  தெருக்கடை தான் என்றாலும் மக்களின் நெருக்கமான ஒரு கடை  என்று அக்கா பெயர் வாங்கிவிட்டார்.

அக்கா  அனைத்து மலேசியர்களின் மனங்கவர்ந்தவராகி விட்டார். நாசி லெமாக் என்பது மலாய்க்கரர்களின் பாரம்பரிய உணவு. இந்தியர்களுக்குச் சம்பந்தமில்லாத ஒர் உணவு.  அதில் பெயர் வாங்குவது  சாதாரண விஷயம் அல்ல. 

இப்போது மித்ரா எனப்படும் -   இந்தியர்களின் வியாபார வளர்ச்சிக்காக - அமைக்கப்பட்ட அரசாங்க அமைப்பு - அக்கா எனப்படும் சங்கீதாவுக்குச் சில உதவிகளைச் செய்திருப்பது பாராட்டுக்குரியது. இதற்கு முன்னும் அவர்கள் பலருக்கு உதவிகள் செய்திருக்கலாம். ஆனால் நாம் அறிந்ததோ இது ஒன்று தான்.

இன்று பலருக்கு மித்ரா போன்ற அமைப்புகளிலிருந்து உதவிகள் தேவைப்படுகின்றன. பெரும்பாலும் தங்களது வியாரங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல இயலாதவர்கள் பலர் இருக்கின்றனர்.  காரணம் எல்லாமே பணம் தான். வங்கிகளும் இந்தியர்கள் என்றால் கடன் கொடுக்காததற்குப் பல காரணங்கள் சொல்லுகின்றன.

நமக்கு மட்டும்  அல்ல மலாய்க்காரர்களுக்கும் அதே நிலை தான். ஆனால் மலாய்க்காரகள் தப்பித்துக் கொண்டனர். கடன்  உதவி செய்ய அவர்களுக்கு ஏகப்பட்ட அரசாங்க அமைப்புகள் இருக்கின்றன. நமக்கு விளங்காத, புரியாத அரசாங்க அமைப்புகள் பல அவர்களுக்குத் தொழில் செய்ய உதவிகரம் நீட்டுகின்றன.  நமக்கும் அரசாங்கம் மித்ரா என்னும் அமைப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.  ஆனாலும் அரசியல்வாதிகளின் அடாவடித்தனத்தால்  இந்தியர்கள் யாரும் பயன் பெற முடியாமல் போயிற்று! இது நமது கதை.

இப்போது ஏதோ கொஞ்சம் வெளிச்சம் தெரிகிறது.  நல்லது நடக்கும் என்று   தெரிகிறது. இங்கும் அரசியல்வாதிகள் தான் கோலோச்சுகிறார்கள்! அரசியல்வாதிகளை நம்புவது கஷ்டம் தான்.    கடவுளுக்கு அவர்கள் பயப்படுவதில்லை.   பிரதமருக்கு மட்டும் தான் அவர்கள் பயப்படுவார்கள்!  ஈன ஜென்மங்கள்!

எது எப்படியிருந்தாலும்  மித்ரா மீது நமபிக்கை கொள்வோம்.  இந்த முறை ஏதாவது நல்லது நடக்கும் என்று நம்புவோம். 

தெரு ஓரங்களில் கடைகளை  வைத்துக் கொண்டு பல பெண்கள் கஷ்டத்தில் தான் ஜீவனம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.   பண வசதி இருந்தால் இன்னும் சிறப்பாகவே  செயல்படுவார்கள்.  அவர்களிடம் மிகவும் கெடுபிடியாக நடந்து கொண்டால் யாருக்கும் எந்த உதவியும் கிடைக்காமல் போய்விடும். அதற்கான வழிவகைகளைத் தான் மித்ரா கண்டறிய வேண்டும்.  எளிமையான முறையில் கொடுக்கல் வாங்கும் இருக்க வேண்டும்.

சங்கீதா அக்காவுக்கு உதவிகள் கிடைத்ததில் நமக்கு மகிழ்ச்சியே. இன்னும் பலர் உதவிகள் கிடைக்க வரிசையில் நிற்கின்றனர். இந்த முறை மித்ரா இந்தியர்களுக்கு ஏமாற்றத்தை தராமல் எதிர்பார்க்கும்  மனமாற்றத்தை தரும் எனறே நாங்கள் நம்புகிறோம்.

சங்கீதா தொழிலில் சிறந்து விளங்க மனமாற வாழ்த்துகிறோம்; பாராட்டுகிறோம்!                                                                                                                    

No comments:

Post a Comment