Monday 4 July 2016

கேள்வி-பதில் (22)



கேள்வி

அம்னோவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் துணைப்பிரதமர் டான்ஸ்ரீ முகைதின் யாசின் பக்கத்தான் ஹராப்பன் கூட்டணியில் இணைவார் என்று கிசுகிசுக்கப்படுகிறதே! சரியாக வருமா?

பதில்

பொதுவாக அரசாங்கப் பதவியில் நீண்ட நாள் இருந்துவிட்டு தீடீரெனத் தூக்கி எறியப்பட்டவர்கள் மீண்டும் தலைத் தூக்குவது சிரமம். முன்னாள் துணைப்பிரதமர் அன்வாரோடு முகைதீனை ஒப்பிட முடியாது. அன்வார் நாடறிந்த நல்ல பேச்சாளர். இஸ்லாமிய இயக்கங்களோடு இணைந்து பணியாற்றியவர். அவருடைய செல்வாக்கு வேறு. முகைதீனோ ஜோகூர் மாநில அளவிலேயே பெயர் பெற்றவர். அதுவும் மேல்மட்டத் தலைவர். கீழ் மட்டத்தில் அவரின் செல்வாக்குப் பெரிதாக ஒன்றும் பேசப்படவில்லை!

முகைதீன் பக்காத்தானில் இணைவதால் மட்டும் எதுவும் தலைகீழாக மாறிவிடப்போவதில்லை! அவரின் இலக்கு பிரதமர் பதவி. அதனை யாரும் தூக்கிக் கொடுத்தால் தான் உண்டு! அதற்கு அவர் உழைக்கத் தயாராக இல்லை!

எனினும் அவர் இன்னும் ஒரு முடிவுக்கும் வரவில்லை.ஓய்வு பெறுவது, பக்காத்தானில் இணைவது அல்லது புதிய கட்சி தொடங்குவது. ஏதோ ஒன்றை அவர் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறார். புதிய கட்சி என்பது அவ்வளவு எளிதல்ல. அது அசாதாரணமான வேலை! அவர் தொடங்கமாட்டார்! வேறு  கட்சிகளில் இணைவது எளிது. ஆனால் பத்தோடு பதினொன்று என்னும் நிலை! பிரமாதமாக சொல்லுவதற்கு ஒன்றுமில்லை! அவர் ஓய்வைத்தான் தேர்ந்தெடுப்பார். ஒய்வுக்குப் பின்னர் ஏதாவது வெளிநாட்டுப் பதவிகளில் குறி வைப்பார்! அதற்குள் பிரச்சனைகள் சரி செய்யப்பட்டுவிடும்!

அரசியலிலிருந்து ஒதுக்கப்பட்டவர்கள் மீண்டும் அரசியல் பதவிகளுக்கு வருவது அப்படி ஒன்றும் எளிதான காரியம் அல்ல. அதுவும் முகைதீன் அம்னோ அரசியல்வாதிகளையே அதிகம் நம்புபவர்! எல்லாம் மேல்மட்ட அரசியல்வாதிகள்! இந்தியர்களையும் சீனர்களையும் கண்டு கொள்ளாதவர்!

அரசியல் ரீதியில் அவருடைய எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்று சொல்லுவதற்கில்லை!


No comments:

Post a Comment