Monday, 4 July 2016
அவர்கள் ஐ.எஸ்.தீவிரவாதிகளே!
பூச்சோங் I.O.I. மொவிடாவில், தாக்குதல் நடத்தியவர்கள் ஐ.எஸ்.தீவிரவாதிகளே என்று (I.G.P.) காவல்துறைத் தலைவர் காலிட் அபு பக்கர் உறுதிப் படுத்தியிருக்கிறார்.
நம் நாட்டில் நடைப்பெற்ற முதல் தீவிரவாதிகளின் தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் நடந்த இது போன்ற சம்பவங்கள் அனைத்தும் தொழிற்போட்டி, பொறாமை என்று காவல்துறையினர் சொல்லி வந்தனர். அது உண்மையாகவும் இருக்கலாம். அதனால் தான் அதனை நாம் ஒரு பெரிய விஷயமாகக் கருதவில்லை.
ஆனால் இந்தச் சம்பவத்தை நாம் அப்படி ஒதுக்கிவிட முடியாது. முதலில் சிறிய அளவில் - ஒரு சோதனை முறையில் - நடத்தப்பட்டிருக்கலாம். இந்தச் சம்பவத்தில் எட்டுப் பேர் காயமடைந்திருக்கின்றனர். பெரிய பாதிப்பு இல்லையென்றாலும் அந்தச் சம்பவத்தில் காயமடைந்த ஓர் இந்தியத் தம்பதியினருக்கு அது ஒரு சாதாரண விஷயமல்ல. அதில் காயமடைந்த ஜெயசீலன் பெரிய பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றார். இனி அந்தக் குடும்பத்தின் நிலைமை?
பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும். அது வளர்க்கப்பட எந்தக் காரணத்தைக் கொண்டும் அனுமதிக்கக் கூடாது. மதவாதிகள் - குறிப்பாக இஸ்லாமிய மதவாதிகள் - இதனை ஆதரிப்பதை எக்காரணத்தைக் கொண்டும் காவல்துறையினர் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.
மலேசியா எல்லாக் காலங்களிலும் அமைதி மிகுந்த நாடு. பயங்கரவாதம் என்பதெல்லாம் இங்கு எந்தக் காலத்திலும் எடுபட்டதில்லை. ஆனால் காலம் மாறிவிட்டது. மூவினம் கொண்ட நாடு என்பது போய் இப்போது வங்காள தேசிகள், பாக்கிஸ்தானியர், நேப்பாளியர், வியாட்னாமியர், கம்போடியர் என்று பல தேசத்தினர் இங்கு வாழ்கின்றனர். இதிலும் குறிப்பாக வங்காள தேசத்தவரும் பாக்கிஸ்தானியரும் தீவிராதப் பின்னணி உள்ள நாடுகளிலிருந்து வந்தவர்கள்! அதனால் எதுவும் நடக்கலாம்! தீவிரவாதிகளிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டு இவர்கள் எந்தத் தாக்குதளையும் செய்யக் கூடியவர்கள்!
தீவிரவாதிகள் வெறும் கேளிக்கை மையங்களைத்தான் குறி வைப்பார்கள் என்று சொல்ல முடியாது. இஸ்லாம் அல்லாத வழிப்பாட்டுத் தலங்கள், சீனர், இந்தியர் கூடிகின்ற இடங்கள் ஆகியவையும் அவர்களின் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படலாம்!
நமது நாட்டின் அமைதிக்காகப் பிரார்த்திப்போம்! வாழ்க மலேசியா!
Labels:
நடப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment