Sunday, 10 July 2016

கேள்வி-பதில் (24)


கேள்வி

திருவாருர் பொதுக்கூட்டத்தில் நன்றி தெரிவித்து பேசிய கலைஞர் கருணாநிதி, தமிழக ஆட்சியில் திராவிடர்கள் பங்கு பெற கூடாது  என்பதற்காகவே ஜெயலலிதாவைத் தேர்ந்தெடுத்தார்கள் என்ற குற்றச்சாட்டை முன் வைத்தாரே, அது சரியா?

பதில்

சரியில்லை! ஜெயலலிதாவும் திராவிடர் தான்! ஆனால் அவர் திருவாருரில் திராவிடர் என்று குறிப்பிட்டுச் சொல்லுவதைப் பார்க்கும் போது அங்கு தெலுங்கு மக்கள் அதிகம் இருக்கலாம் என்றே தோன்றுகிறது.

ஆனாலும் கலைஞர் இது போன்ற குற்றச்சாட்டை சுமத்துவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. 50 ஆண்டுகளாக பதவியில் இருந்தவர்; இருப்பவர்.  இது போன்ற குற்றச்சாட்டின் அவசியம் என்ன என்பது நமக்குப் புரியவில்லை!

தமிழர்கள் அவரைத் தமிழராகத் தான் ஏற்றுக் கொண்டார்களே தவிர அவரை ஒரு தெலுங்கர் என்று நினைத்ததும்  இல்லை. ஆனால் அவர் தன்னைத் தமிழராக நினைக்கவில்லை. அவருடைய நடவடிக்கைகளைப் பார்க்கின்ற போது அவர் தன்னை ஒரு தெலுங்கர் என்று நினைத்தே செயல்பட்டு வந்திருக்கிறார். வாழ வைத்த தமிழ் நாட்டுக்கு அவர் செய்த துரோகங்கள் எண்ணிலடங்கா!

இலங்கைத் தமிழர்கள் இன்று நாடோடிகளாய் இங்கும் அங்கும் அலைந்து கொண்டும் நாடற்றவர்களாய் வாழ்ந்து கொண்டும் இருப்பதற்கு அவரே முழுமுதற் காரணம்.தமிழர்கள் கொத்துக் கொத்தாய் மடிகிறார்களே என்கிற அக்கறை அவரிடம் இருக்கவில்லை.


தமிழன் தன் சொந்த நாட்டிலேயே அந்நியனாய் வாழ்கின்ற ஒரு நிலையை ஏற்படுத்தியவர் அவர். தனது தாய் மொழியை மறக்க வைத்து தமிழனை ஆங்கில மோகத்திற்கு அடிமையாக்கியவர் அவர். தமிழ் நாட்டில் தமிழ் இல்லாத ஒரு சூழலை ஏற்படுத்தியவர் அவர். தமிழகத்தின்  அத்தனை வளங்களையும் சூறையாடி தனது குடும்பத்திற்குக் கோடி கோடியாய் சொத்து சேர்த்தவர் அவர். தமிழக விவசாயிகளைக் கொன்று போட்டவர் அவர்.

பொதுவாக சொல்ல வேண்டுமானால் ஒரு முதலைமைச்சர் செய்ய வேண்டிய எந்தப் பணிகளையும் அவர் செய்யவில்லை. அவர் குடும்பத்திற்குச் செய்த அளவுக்கு தமிழ் நாட்டுத் தமிழனுக்கு அவர் செய்யவில்லை. தமிழ் மொழியை வைத்தே தமிழ் நாட்டில் அரசியல் விளையாட்டு விளையாடியவர். கடைசியில் தமிழையே அழித்தவர்.

இன்று ஜெயலலிதா, கருணாநிதியின் தொடர்ச்சி! அவ்வளவு தான்!

ஆனால் ஜெயலலிதாவிடம் ஒரு மாற்றம் வரும் என எதிர்பார்க்கிறேன். இந்த முறை அவர் முதலைமைச்சர் ஆனது அவருக்கு ஒரு புதிய தெம்பைக் கொடுத்திருக்கிறது! தொடர்ந்து தான் பதவியில் இருக்க வேண்டும் என்பதற்காக ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என நினைக்கவே செய்வார்.
ஸ்டாலினை  முதலைமைச்சர் பதவிக்கு  நெருங்க விடமாட்டார் என்றே தோன்றுகிறது.

தமிழ் நாட்டில் கருணாநிதியோடு தி.மு.க. ஆட்சி ஒரு முடிவுக்கு வரும்! வர வேண்டும்!

தமிழ் நாட்டுக்கு ஜெயலலிதா மூலம் ஏதாவது நல்லது நடந்தால் வரவேற்போம். நல்லது செய்வார் என நம்புவோம். வேறு வழி இல்லை!




No comments:

Post a Comment