Wednesday 27 February 2019

மகாதிர் நீண்ட நாள் வாழ வேண்டும்!

பிரதமர் மகாதிர்  நீண்ட நாள்  வாழ  வேண்டும் என்பதில் இப்போது துங்கு ரசாலியும் சேர்ந்து கொண்டிருக்கிறார். அதுவே நமது பிரார்த்தனையும் கூட! 

இன்றைய அரசியல் சூழலில் அவர் இருப்பது நாட்டிற்கு நல்லது என்பது தான் அனைத்து மலேசியர்களின் எதிர்பார்ப்பும்! அவர் தான் நாட்டை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்பதை மக்களறிவர். அவர் சொல்லுகின்ற சொல்லுக்கு மலேசியர் அனவரும் கட்டுப்படுகின்றனர்,  அரசியல்வாதிகள் உட்பட!  அது போது அவர் மக்கள் ஆதரவைப் பெற்றவர் என்பது.

அரசியலில் இரு துருவங்களாக இருப்பவர்கள்  துங்கு ரசாலியும, டாக்டர் மகாதிரும். இருப்பினும்  துங்கு  ரசாலி,   டாக்டர்  மகாதிர் நாட்டின் நலனுக்காக நீண்ட நாள் வாழ  வேண்டும்  என  பிராத்திக்கிறார்.  நமக்கும் மகிழ்ச்சியே! 

ஆனால்  அம்னோவில்  உள்ள  பிற தலைவர்கள் இவர் சொல்லுவதை  ஏற்றுக் கொள்ளுவார்களா?  ஏற்றுக் கொள்ள  மாட்டார்கள் என்பதை  நாம்  அறிவோம்! ஏன்  முன்னாள்  பிரதமர்  நஜிப்  ஏற்றுக் கொள்ளுவாரா?  அம்னோ தலைவர்கள் யாருமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், அது தான் உண்மை!

இப்போது  நாட்டில் யாரால்  பிரச்சனைகள்  ஏற்படுகின்றன?  உண்மையைச்  சொன்னால் அம்னோவில்  உள்ள  அரசியல்வாதிகளால் தான் பிரச்சனைகள் ஏற்படுகின்றன!  புதிய அரசாங்கம் எதனைச்  செய்தாலும் அதனை எதிர்க்க வேண்டும்  என்பதாக நஜிப் உத்தரவு  பிறப்பித்திருக்கிறார்!    நாட்டில் ஏற்பட்ட  சமீபகால ஆர்ப்பாட்டங்கள்  அனைத்தும் தேவை இல்லாத  ஆர்ப்பாட்டங்களே! அனைத்தும்  அம்னோ தரப்பில்  இருந்து  ஊதி  ஊதி  பெரிதாக்கப் பட்டவை!

உண்மையைச் சொன்னால்  புதிய  அரசாங்கத்தைச்  செயல்பட விடாமல் இருப்பது  தான்  அவர்கள் நோக்கம். அதனைத் தான்  அவர்கள் வெற்றிகரமாகச் செய்து கொண்டிருக்கிறார்கள்!

ஆக, துங்கு ரசாலி,  டாக்டர் மகாதிர் நீண்ட நாள் வாழ வேண்டும்  என்பதில் யாருக்கும் பிரச்சனை இல்லை. ஆனால் நாட்டை கட்டுப்பாட்டில் வைத்திருக்க  வேண்டும் என்றால் துங்கு ரசாலி அம்னோ அரசியல்வாதிகளிடம் இதனைச் சொல்ல வேண்டும். அவர்கள் அமைதியாக இருந்தாலே நாட்டில் எந்தக் குழப்பமும் ஏற்படாது!

நாட்டில் அமைதி, முன்னேற்றம் இருந்தாலே டாக்டர் மகாதிர் நூறு ஆண்டுகள் பேர் போடுவார்.  சந்தேகமே வேண்டாம்!

காரணம் அவருக்கு வேண்டியது நாட்டின்  முன்னேற்றமே!

No comments:

Post a Comment