Monday 14 October 2019

வெள்ளை அறிக்கை சரியே!

பயங்கரவாதம் என்பது தமிழர்களுக்கு மட்டும் உரியது என்கிற போன்ற ஒரு தோற்றத்தை சமீபகாலமாக ஏற்படுத்தப்பட்டு விட்டது! 

ஈழத்தில் நடந்தது என்பது தமிழர்களின் மாநில சுயாற்சி போராட்டம் என்பதே தவிர அது எந்த வகையிலும் பயங்கரவாதத்தோடு சம்பந்தப்பட்டது அல்ல. இருந்தாலும் அது பயங்கரவாதம் என்கிற போர்வையில் இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்களை ஆதிக்கசக்திகளால் கொன்ற குவித்த பின்னர் ஒரு முடிவுக்கு  வந்து விட்டதாக சிங்கள அரசு அறிவித்துவிட்டது.

யார் சரி, யார் தவறு என்பதை விட அது முடிவுக்கு வந்துவிட்ட ஓரு போர். ஆனால் காவல்துறை தனது கருத்தில் வேறு படுகிறது. 

இங்கு பேராசிரியர் இராமசாமி கூறும் கருத்தில் நாம் ஒன்று படுகிறோம்.

இப்போது நாட்டில் தீவிரவாதம் எங்கிருந்து வருகிறது என்பது மலேசியர்கள் அறிந்திருக்கிறார்கள். நிச்சயமாக தீவிரவாதமோ, பயங்கரவாதமோ விடுதலைப்புலிகளிடமிருந்து வரவில்லை என்பது ஒன்றும் இரசியமல்ல.

தீவிரவாதம் பேசும், இன நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் நாட்டில் தஞ்சம் புகுந்திருக்கும்  மத போதகர் ஜாகிர் நாயக்கை விட ஆபத்தானவர்கள் யாரும் இருக்க முடியாது. ஏற்கனவே இஸ்லாமிய நாடான வங்காள தேசமே அவரை பயங்கரவாதி என்று அறிவித்துவிட்டது. இவருடைய உரைகளினால் நமது இளைஞர்கள் பலர் ஈரக்கப்பட்டு வெளி நாடுகளில் தீவிரவாதத்தை மேற்கொண்டு விட்டனர். 

இந்த நிலையில் ஜாகிர் நாயக் மற்றும் ஐ எஸ் ஐ எஸ் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பவர்கள் மீதான வெள்ளை அறிக்கை தேவை என்பதை நாமும் ஆதரிக்கிறோம்.

அப்படியே புதைக்கப்பட்டு விட்ட விடுதலைப்புலிகளின் இயக்கம் உயிர் பெற்றாலும் அதனால் மலேசியாவுக்கு எந்த பாதகமும் இருக்கப் போவதில்லை. அவர்கள் தாயகத்திலும் தலை தூக்க வாய்ப்பில்லை. அங்கு மக்கள் இராணுவ கட்டப்பாட்டில் இருக்கின்றனர்!

ஆனால் ஜாகிர் நாயக் அல்லது ஐ எஸ் ஐ எஸ் நிலைமை அப்படியில்லை. உள் நாட்டிலும் அவர்கள் ஆபத்தானவர்களே. எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம்.

அதனால் பேராசிரியர் இராமசாமி அவர்கள் கேட்டுக் கொண்டிருப்பதை போல வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என்பதை நாமும் கேட்டுக் கொள்ளுகிறோம்.

பயங்கரவாதமோ தீவிரவாதமோ ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடில்லை. ஆனால் அதனை மறைக்க நினைப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல என்பதை நினைவுறுத்துகிறோம்.

வெள்ளை அறிக்கை தேவை என்பது சரியே!

No comments:

Post a Comment