அனைத்து இந்து பெரு மக்களுக்கும் எனது அன்பான தீபாவளி நல் வாழ்த்துகள்!
தீபாவளி திருநாளை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகிறோம். தீமை அழிந்து நல்லது தழைக்க வேண்டும்.
நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதையும் பாருங்கள். நல்லவைகளை வாழ வைப்போம். தீமைகளை வேரோடு சாய்ப்போம்.
ஏழைகளை எண்ணிப் பார்ப்போம். இல்லாதவர்களுக்கு உதவுவோம்.
உணவுகளை வீணடிக்கக் கூடாது என உறுதி மொழி எடுப்போம். தேவையான உணவுகளை மட்டும் சமைப்போம். தேவை அல்லாதவற்றை புறந்ததள்ளுவோம்.
குடிகாரத் தீபாவளி என்பதை மறக்கடிப்போம். நாம் குடிகாரர்கள் என்னும் அடையாளத்தை துடைத்தொழிப்போம்.
பிறர் நம்மைப் பார்த்து 'குடிகாரக் கூட்டம்' என்று சொல்லாதவாறு எச்சரிக்கையாக இருப்போம்.
எத்தனையோ நல்ல அடையாளங்கள் நமக்குண்டு. அதை மட்டும் தக்க வைத்துக் கொள்ளுவோம். குடிகாரன் என்னும் அடையாளம் மட்டும் நமக்கு வேண்டாம்.
குடியால் அழிந்த குடும்பங்களைக் கண் முன் நிறுத்துங்கள். குடியை வெறுத்து ஒதுக்குங்கள்.
தீபாவளியைக் கொண்டாடுங்கள். குடி வகைகளைக் கொண்டாடாதீர்கள். குடிப்பதைப் பெருமையாக நினைக்காதீர்கள்.
பெருமையாக நினைப்பதற்கு எத்தனையோ பெருமைகள் நமக்கு உண்டு, அதற்கு கீழடியே ஓர் உதாரணம்.
நாம் பெருமை மிக்க ஓர் இனம். அந்த இனத்தின் பெருமையை கட்டிக் காப்பாற்றுங்கள்.
இந்தத் தீபாவளியில் பிள்ளைகளின் கல்வி பற்றி யோசியுங்கள். குடி தான் உங்களுக்குப் பெருமை என்பதாக பிள்ளைகளுக்கு உபதேசம் செய்யாதீர்கள்.
அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்!
No comments:
Post a Comment