Friday 4 October 2019

சிலம்பம் அரசன்


                                                                தர்ஷ்வின் செந்தில்   

ப்போதெல்லாம் குழந்தைகள் படுத்துகின்ற பாடு இருக்கிறதே நான் சொல்ல வேண்டியதில்லை. எல்லாருமே அறிந்திருக்கிறோம்.

ஆனால் அப்படி சேட்டை பண்ணுகின்ற குழந்தைகளை வெறுத்து ஒதுக்காமல் அவர்களை ஏதோ ஒரு துறையில்- குறிப்பாக விளையாட்டுத் துறையில் - ஈடுபடுத்தி அவர்களை சாதனையாளர்களாக மாற்ற வேண்டுமே தவிர அவர்களைத் திருத்துகிறோம் என்று சொல்லி  அடி அடி என்று அடிப்பதில் யாருக்கும் புண்ணியமில்லை; ஆகப் போவதும் ஒன்றுமில்லை!

கிருஷ்ணகிரி மாவட்டம், தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒரு பெற்றோர் அதைத்தான் செய்தனர். ஆசிரியர் செந்தில் அவரது மனைவி வித்யலட்சுமி  இவர்களது மகன் தர்ஷ்வின். தர்ஷ்வினுக்கு இப்போது நான்கு வயதாகிறது. 

வீட்டில் அவனது தொல்லை தாங்க முடியவில்லை. துரு துரு வென்று எப்போதும் இருப்பவன். அடக்க முடியவில்லை.  ஆனாலும் அவனிடம் பல திறமைகள் ஒளிந்திருப்பதை பெற்றோர்கள் கண்டனர்.

பெற்றோர்கள் பார்த்தார்கள். ஏதாவது செய்ய வேண்டுமே என்று நினைத்து அவனை சிலம்பம் கற்றுக் கொள்ள சிலம்பாட்ட பயிற்றுனரிடம் சேர்த்து விட்டனர். அவனை அங்கு சேர்க்கும் போது அவனுக்கு மூன்றரை வயது.


வ்வளவு தான்.  ஒரு சில மாதங்களிலேயே சிலம்பாட்டத்தை பிரமாதமாக கற்றுக் கொண்டான். சிறுவர் போட்டிகளில் பங்கு கொண்டான். முதலாவது போட்டி அவர்களது மாவட்டத்தில் நடைபெற்றது. முதல் பரிசு. அடுத்து ஈரோட்டில் நடைபெற்ற மாநில அளவு போட்டியில் முதல் பரிசு.  அடுத்து தேசிய ரீதியான போட்டி கோவாவில் நடைபெற்றது. அங்கும் முதல் பரிசு. 

அடுத்து சேலம் நகரில்  உலக அளவில் நடைபெற்ற போட்டியிலும் முதல் பரிசு. அத்தோடு தங்கத்தையும் வென்றான். இப்போது அவனது சாதனை  INDIAN BOOK OF RECORD என்கிற சாதனைப் புத்தகத்திலும் இடம் பெறுவதற்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

குழந்தைகளின் சேட்டைகளைக் கண்டு முணுமுணுப்பதை  விட அவர்களைச் சரியான வழியில் கொண்டு செல்வது தான் பெற்றோர்களின் கடமை. அதனைத் தான் தர்ஷ்வினின் பெற்றோர்கள் செய்திருக்கின்றனர்.

வருங்காலங்களில் தர்ஷ்வின் பல தங்கப்பதக்கங்களை வென்று சாதனை படைக்க வாழ்த்துவோம்!

No comments:

Post a Comment