Friday 25 October 2019

பிரதமர் சொல்லுவது சரியா?

பிர்தமர் மகாதிர் தனது வலைத்தளத்தில் ஒரு குற்றச்சாட்டை முன் வைக்கிறார்.

சுதந்திரம் அடைந்த போது தகுதியற்றவர்களுக்கெல்லாம் குடியுரிமை வழங்கப்பட்டது என்கிறார்.எதன் அடிப்படையில் இப்படி ஒரு கருத்தை அவர் சொல்லுகிறார் என்பது நமக்குப் புரியவில்லை.

ஒரு மில்லியன் பேர் என்றால் அவர்கள் எங்கிருந்தோ வானத்திலிருந்து குதித்துவிடவில்லை என்பதை அவர் அறியாதவரா?

அவருடைய குடும்பமே தகுதி அற்றவர்களாக குடியேறி பின்னர் அவர்கள் தகுதியுள்ளவர்களாக மாறிக் கொண்டவர்கள் தாம்.  அப்படித்தான் மற்ற குடியேறிகளும் இந்நாட்டில் கொண்டு வரப்பட்டு அதன் பின்னர் தங்களைத் தகுதியுள்ளவர்களாக மாற்றிக் கொண்டவர்கள் என்பது தான் சரித்திரம்.

இதில் தகுதியற்றவர்கள் என்று சொல்லுவது அவருடைய தகுதிக்கு ஏற்றதல்ல  என்பதை நாம் வலியுறுத்துகிறோம்.

அது நடந்தது சுதந்திர காலத்தில். இப்போது என்ன நடக்கிறது? நேற்று வந்த வங்காளதேசி எந்த வகையில் தகுதியுள்ளவன் ஆனான்?  ஜாகிர் நாயக், இங்குள்ளவர்களை விட, அப்படி  என்ன தகுதியைக் கொண்டிருக்கிறார்?  அவரை விட தகுதியுள்ளவர்கள் இல்லையா? 

இப்படி தகுதியற்றவர்கள் எல்லாம் குடியுரிமை பெற்றவரகளாக இந்நாட்டில் வாழ்கின்ற போது  இருநூறு முந்நுறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நாட்டில் குடியேற்றப்பட்டவர்களை, பிரதமர் மகாதிர், தகுதி அற்றவர்கள் என்று கூறுவது  சரி என என்று நமக்குத் தோன்றவில்லை! அப்படி குடியேற்றப்பட்டவர்கள் உண்டு, கூடி களிக்க வரவில்லை.  அவர்கள் உழைப்பைக் கொடுத்தவர்கள்.  கூட்டம் கூட்டமாக இந்நாட்டிற்காக உயிரைக் கொடுத்தவர்கள். இதை விட வேறு என்ன தகுதிகள் அவர்களுக்கு வேண்டும்?

மலாய் தன்மான காங்கிரஸ் என்பது நீங்கள் பதவியில் தொடர வேண்டும் என்று கூட்டப்பட்ட ஒரு மாநாடு என்பது நாடே அறியும். அதில் முன்னாள் ஊழல் பேர்வழிகள் தான் அங்கம் வகிக்கிறார்கள் என்பதில் உண்மை இல்லாமல் இல்லை!  அதில் சொந்த மக்கள் என்று எடுத்துக் கொண்டாலும் அங்கும் பெரும்பாலும் சொந்த மக்கள் இல்லை என்பதும் அறிந்தது தான்! 

பிரதமர் மகாதிர் ஒன்றும் அறியாதவர் அல்லர். அவருக்குத் தெரியாதது எதுவும் இல்லை. சரித்திரம் அறிந்தவர். அப்படி இருந்தும் நச்சுக் கருத்துக்களை மக்களிடம் பரப்ப நினைக்கிறார்! அவர் தகுதிக்கு, அவர் வயதுக்கு அவருடைய இந்தப் போக்குச் சரியானதாகப் படவில்லை.

பதவியில் தொடர வேண்டும் என்பதற்காக  எதையும் செய்வேன் என்று இந்த வயதிலும் பிடிவாதம் பிடிப்பது நாட்டுக்கு நல்லது அல்ல என்பது அவருக்குத் தெரியும். 

அவர் பதவி தொடர விரும்புகிறார் என்பது நமக்கும் புரிகிறது. அதற்காக அனைவரையும் பகைத்துக் கொண்டு பதவி தொடர விரும்புவது அவரது கொள்கை என்றால் நாம் அதனை வரவேற்கவில்லை!

No comments:

Post a Comment