மித்ரா அமைப்பு செய்கின்ற நிதி ஒதுக்கிடுகளில் அதிக ஒதுக்கீடு தனியார் பயிற்சி மையங்களில் செய்கின்ற ஒதுக்கிடூ என்பதை அறியும் போது இதில் உள் நோக்கம் இருப்பதாகவே தோன்றுகிறது.
தனியார் கல்வி நிலையங்களைப் பற்றி நாம் நிறையவே அறிந்திருக்கிறோம். ஒரு காலக் கட்டத்தில் ம.இ.கா.வினர் நிறைய பயிற்சி நிலையங்களைத் திறந்து இலட்சக் கணக்கில் பணம் பார்த்தனர்! சரியான பயற்சி கொடுக்க மாணவர்களுக்கு ஆளில்லை. மாணவர்களுக்கு எந்தப் பயிற்சியும் கிடைக்கவில்லை. கடைசியில் அவர்கள் அரசாங்கத்திற்குக் கடன்காரர்கள் ஆனார்கள்! மாணவர்களுக்குப் பயிற்சியும் இல்லை. சான்றிதழ்களும் இல்லை. அரசாங்கத்திற்கு நிரந்தர கடன்காரர்கள்!
இது தான் தனியார் நிலையங்களில் நடக்கும் அவலங்கள்.
இப்போது செடிக் அதே தவறுகளை மித்ரா செய்வது ஏற்கத்தக்கது அல்ல. அப்படி செய்தால் தனியார் நிலையங்களில் அமைச்சருக்கும் ஏதோ பங்கு இருப்பது போன்ற தோற்றத்தையே ஏற்படுத்துகிறது!
இப்போதைய அரசியலில் எதனையும் உறுதிப்படுத்த முடியவில்லை.
பிரதமர் மகாதிரின் தலையீடு மித்ராவில் எந்த அளவுக்கு இருக்கிறது என்பது நமக்குத் தெரியவில்லை. ஆனால் இருக்கும், இருக்க வேண்டும் என்று தான் நமக்குத் தோன்றுகிறது! ஏற்கனவே நஜிப்பின் தலையீடு இருந்தது தானே!
மேலும் ஒரு காலக் கட்டத்தில் அனைத்தும் சாமிவேலுவிடம் கொடுத்துவிட்டு எனக்கு ஒன்றும் தெரியாது என்று சொன்னவர் தானே மகாதிர். அதனையே இப்போது மாற்றி வேதமூர்த்தியிடம் அனைத்தும் கொடுத்துவிட்டேன் எனக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்ல எவ்வளவு நேரம் பிடிக்கும்?
இப்போது மித்ராவை இயக்குபவர் யார் என்று முழுமையாகத் தெரியவில்லை. பொன்.வேதமூர்த்தி இந்தியர்களின் மேல் அக்கறை இல்லாதவர் என்று சொல்லிவிட முடியாது. சாமிவேலுவை ஒதுக்கியது போல ஒரேடியாக வேதாவை ஒதுக்கிவிட முடியாது.
இது தெரிந்து நடக்கிறதோ, தெரியாமல் நடக்கிறதோ அமைச்சர் வேதமூர்த்தி தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று சொல்ல வருகிறோம்.
தனியார் பயிற்சி நிலையங்கள் வேண்டாம். அரசாங்க பயிற்சி நிலையங்களே வேண்டும். இங்கு தரமான கல்வி உண்டு. சான்றிதழ்கள் உண்டு. அமைச்சர் உண்மையில் B40 இந்திய மாணவர்களுக்கு உதவ வேண்டும் என்கிற உண்மையான நோக்கம் இருந்தால் அரசாங்க பயிற்சி மையங்களையே தேர்ந்தெடுக்க வேண்டும்.
இல்லாவிட்டால் இங்கும் கமிஷன் தான் விளையாடுகிறது என்று எண்ணம் தான் நமக்கும் வரும்!
No comments:
Post a Comment