Sunday 20 October 2019

மாணவரின் பட்டம் ஒப்படைக்கப்படும்..!

மலாயாப் பல்கலைக்கழக நிர்வாகம் பொறியியல் துறை மாணவரான Wong Yan Ke வுக்கு அவர் படித்து முடித்ததற்கான துறை சான்றிதழை அவ்ரிடம் ஒப்படைப்பது என முடிவு செய்திருப்பதை வரவேற்கிறோம்.

ஏற்கனவே அந்த பொறியியல் துறை மாணவருக்கு  அந்தச் சான்றிதழை கொடுப்பதில்லை என்பதாக நிர்வாகம் முடிவு செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


எனினும் கொடுப்பதில்லை என்கிற முடிவுக்கு எதிராகவும், ஆதரவாகவும் பலர் தங்களது எண்ணங்களைப் பதிவு செய்தனர்.

அந்தப்  பல்கலைக்கழக மாணவர்  சமீபத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவின் போது மலாயாப் பல்கலைக்கழக துணை வேந்தர் பதவி விலக வேண்டும் என கூச்சலிட்டும் குழப்பத்தையும் ஏற்படுத்தி மற்ற மாணவர்களையும் ஆர்ப்பாட்டத்திற்குத் தூண்டியதாக குற்றம்  சாட்டப்பட்டார்.  மிகவும் கண்டிக்கத்தக்க முறையிலும் ஒழுங்கீனமான முறையிலும் அந்த மாணவர் நடவடிக்கை அமைந்ததால் அவருக்கு சான்றிதழ் வழங்குவதை பலகலைக்கழக நிர்வாகம் தற்காலிமாக அதனை நிறுத்தி வைப்பதாக அறிவித்திருந்தது.


அந்த மாணவர் பட்டமளிப்பு விழாவில் போது பல்கலைக்கழக துணை வேந்தர், அப்துல் ரகிம் ஹாஷிம், சமீபத்தில் நடந்த மலாய் அரசியல்வாதிகள் தன்மான மகாநாட்டில் பேசிய இனத் துவேஷ பேச்சைக் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.  மலேசியாவின் முதலாந்தர பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருப்பவர், இப்படி நாலாந்தர அரசியல்வாதிகளைப் போல பேசுவது பல இன சமுதாயத்தில் ஓர் அச்சத்தை ஏற்படுத்தாதா  என்ற ஒரு தனி மனிதராக போராட்டத்தில் ஈடுபட்டார். அவர் தனது துணை வேந்தர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதாக கோரிக்கை வைத்தார். அதற்காக அவர் பெற  வேண்டிய அவரது பட்டத்தை நிறுத்தி வைத்தது பல்கலைக்கழகம். மேடையில் கம்பிராக பிரமுகர்களின் முன் நிலையில் பெற வேண்டிய சான்றிதழ் பின்னர் நான்கு சுவருக்குள்ளே கொடுக்கப்பட்டது நமக்கும்  வருத்தம் தான். 

எனினும் அவரது சான்றிதழ் கொடுக்கப்பட்டதற்காக நன்றி கூறுகிறோம். 

ஒன்றை நான் நினைத்துப் பார்க்கிறேன். இதனையே  இந்திய மாணவர் ஒருவர் செய்திருந்தால் அவர் நிலை என்னவாகியிருக்கும்! 

பிரதமர் மகாதிர் இந்தியர்களை பழி வாங்கும் நோக்கம் கொண்டவர். இந்நேரம் சொஸ்மா சட்டத்தில் உள்ளே தள்ளியிருப்பார்! கேள்வி கேட்க யார் இருக்கிறார்கள்?

எது எப்படி இருப்பினும் இந்தப் பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்ததற்கு நன்றி! 

No comments:

Post a Comment