Sunday 6 October 2019

பதவியில் தொடர்ந்து நீடிப்பார்!

பிரதமர் துறை, துணை அமைச்சர் பொன்.வெதமூர்த்தி தொடர்ந்து தனது பதவியில் நீடிப்பார் என்பதாக பிரதமர் மகாதிர் கூறியிருக்கிறார்.

இந்த அறிவிப்பினால் அதிர்ச்சியடையவோ.மகிழ்ச்சியடையவோ.  வேதனைப்படவோ ஒன்றுமில்லை! இப்போது அவர் பதவியில் இருக்கிறார்.  உடனடியாக அவரைப் பதவியில் இருந்து நீக்குவதற்கு எந்த முகாந்தரமும் இல்லை.

மேலும் அப்படி அவர் என்ன தவறு செய்து விட்டார்? சொல்லும்படியாக ஒன்றுமில்லை.

ஆனாலும் நம்மிடையே சில கேள்விகள் உண்டு. 

பதவிக்கு வருவதற்கு முன்பிருந்த பொன்.வேதமூர்த்தி வேறு. இப்போது அமைச்சராக இருக்கும் பொன்.வேதமூர்த்தி வேறு என்பதாக நாம் பிரித்துப் பார்க்க வேண்டிய தேவை வருமோ என்று நினைக்கத் தோன்றுகிறது!

பதவிக்கு வருவதற்கு முன் இந்தியர், இந்தியர் என்று சொல்லி போராட்டங்கள் எல்லாம் செய்து, தன்னை விட்டால் இந்திய சமூகத்திற்கு நாதி இல்லை என்கிற போக்கில் போய்க் கொண்டிருந்தார்! தன்னை இந்தியர்களின் பாதுகாவலன் என்று இறுமாந்து கிடந்தார்!

ஆனால் அந்த வீராப்பு எல்லாம் எங்கே போயிற்று என்று நாம் இப்போது அவரைக் கேள்வி கேட்க வேண்டியுள்ளது! 

இன்றைய அவரது போக்கைப் பார்க்கும் போது பிரதமர் மகாதிருக்கு ஏற்ற அமைச்சராக வலம் வருகிறார்!  பிரதமர் மகாதிரை எதிர்த்துப் பேச அமைச்சரவையில் இன்றைய நிலையில் யாரும் இல்லை. இவரும் அவர்களோடு சேர்ந்து கொண்டார். அவ்வளவு தான்!

அந்த வீரம், வீராப்பு எல்லாம் பறந்தோடி விட்டன.  அவர் பிரதமர் மகாதிரால் 'காய'டிக்கப்பட்டு விட்டாரோ என்று நினைப்பதில் தவறு ஏதும் இல்லை!

மற்ற அமைச்சர்கள் நிலை வேறு. இவரது பதவி என்பது இந்தியர்களின் நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு பதவி.  இந்தியர்களுக்கு அவரால் எந்தப் பயனுமில்லை  என்றால் அவர் தான் அது பற்றி சிந்திக்க வேண்டும். நமது நிலை வழக்கம் போல என்று நாமும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் இந்தியர்களின் பெயரால் பதவி வகிக்கும் போது கொஞ்சமாவது ஏதாவது செய்ய வேண்டும் என்கிற உந்துதல் அவருக்கே வர வேண்டும். ஏறகனவே மித்ரா மூலம் எந்தப் பயனும் இந்தியர்களுக்கு கிடைக்கவில்லை!  இனி மேலும் வரும் என்கிற உத்தரவாதமும் இல்லை!

பிரதமர் மகாதிருக்கு  பொன்.வேதமூர்த்தியால் எந்த பிரச்சனையும் இல்லை. இப்படி 'ஆமாஞ்சாமி'  பொட்டுக் கொண்டிருப்பவர்கள்  தான் அவருக்குத் தேவை!

ஏதோ நமது பெயரால் ஒருவர் பிழைத்துவிட்டு போகட்டும்!  ஏற்கனவே எத்தனையோ சாமிகளைப் பிழைக்க வைத்தோம் அதில் இவரும் ஒருவராக இருக்கட்டுமே!

No comments:

Post a Comment