Wednesday 30 October 2019

அவரவர் வேலையை அவரவர் செய்ய வேண்டும்!

அவரவர் வேலையை அவரவர் செய்ய வேண்டும்!

அப்படித் தான் செய்ய வேண்டும் என்பதை தமிழ் நாடு, நடுக்காட்டுப்பட்டியில் நடந்த சம்பவம் மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

குழந்தை ஆழ்துளை கிணற்றில் தெரியாத் தனமாக வீழ்ந்துவிட்டது. அந்தக் கிராமத்து மக்கள் எடுக்க முடியாத நிலையில் உடனடியாக தீயணைப்பு நிலையத்தினரை வர வழைத்திருக்கின்றனர்.  

எல்லாமே சரியாகத்தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால் இந்த அரசியல்வாதிகள் எங்கிருந்து வந்து குதித்தனர் என்பது தான் தெரியவில்லை! குழந்தையின் பிரச்சனையை அவர்கள் கையில் எடுத்துக் கொண்டனர். 

அரசியல்வாதிகள் யாருக்கேனும் ஆழ்துளை கிணற்றில் வீழ்ந்த குழந்தையைக் காப்பாற்றிய அனுபவம் உண்டா என்பது தெரியவில்லை. அவர்களில் ஒருவரேனும் தீயணைப்பு படையில் சேர்ந்து ஏதேனும் பயிற்சி எடுத்திருக்கிறார்களா என்பதும் தெரியவில்லை. ஆனால் அவர்கள் முன்னின்று உத்தரவு கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள் என்பது தான் சோக்ம்.

அப்படி என்றால் காலங்காலமாக பயிற்சிகள் பெற்று இத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களையெல்லாம் ஓரங்கட்டிவிட்டு இவர்கள் தங்களை முன் நிறுத்தக் காரணம் என்ன?  தங்களை நாட்டு மக்களுக்கு முன் காட்டிக் கொள்ளுவதற்கு முந்தி நிற்கிறார்களா என்பதும் புரியவில்லை!

ஆனால் நாம் ஒன்றை புரிந்து வைத்திருக்கிறோம்.  அரசியல்வாதி உள்ளே புகுந்து விட்டால் அவன் கோடிகளைப் பார்க்காமல் போக மாட்டான்! அரசியல்வாதி எதைச் செய்தாலும் லாப நஷ்ட கணக்குப் பார்க்காமல் அவன் களத்தில் இறங்குவதில்லை!

அவர்கள் இத்தனை நாள்கள் இழுத்தடிப்பதற்குக் காரணங்கள் உண்டு.  பெரிய பெரிய இயந்திரங்களையெல்லா தூரத்திலிருந்து  வரவழைப்பதற்குக் காரணங்கள் உண்டு.  அந்தப் பிஞ்சுக் குழந்தையின் உடல் ஒரு நாள் கூட தாங்க முடியாது என்று தெரிந்தும் அவர்கள் இழுத்தடிப்பு செய்தார்கள். அரசியல்வாதிகள் வீட்டுக் குழந்தைகள் எல்லாம் இரும்பால் உருவான குழந்தைகள்!  அதனால் ஓர் ஏழை வீட்டுக் குழந்தையின் துயரம் அவர்களுக்குத் தெரியவில்லை.

இந்தத் துயர நிகழ்ச்சியின் மூலம் அரசியல்வாதிகள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். அவரவர் வேலையை அவரவர் தான் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் முட்டாள் என்று தான் பெயர் எடுக்க வேண்டி வரும்!

No comments:

Post a Comment