உண்மையில் மித்ரா, இந்தியர்களின் தரத்தை உயர்த்த வேண்டும் என்னும் நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட மித்ரா இப்போது என்ன செய்கிறது என்று பார்த்தால், முன்பு போல, இதுவும் உருப்படியாக எதுவும் செய்யவில்லை என்றே தோன்றுகிறது!
ஆமாம் ஆளுங்கட்சியைச் சேர்ந்த நாடளுமன்ற உறுப்பினர், சிவகுமார் குறை கூறும் அளவுக்குத் தான் அதன் நிலைமை இருக்கிறது. அதில் உண்மையும் உண்டு என்பது தான் நமது அபிப்பிராயமும் கூட.!
முந்தைய அரசாங்கத்தில் என்ன நடந்ததோ அது தான் இப்போதும் நடக்கிறது என்பது தான் நமது நிலையும்!
முன்பு பெரிய பெரிய இயக்கங்களுக்குப் பணத்தை அள்ளிக் கொடுத்துவிட்டு அதன் பின்னர் அரசியல்வாதிகள் பங்குப் போட்டுக் கொண்ட கதைகள் எல்லாம் நமக்குண்டு. அதில் உண்மையும் இருந்தது. இப்போதும் அது தான் நடக்கிறதா என்பது உறுதியாகத் தெரியாவிட்டாலும் அது தான் நடக்கிறது என்று ஐயுற வேண்டியுள்ளது.
முந்தைய அரசாங்கத்தில் iஇந்தியர்களுக்காக கொடுக்கப்பட்ட அந்த மாநியங்களில் முன்னாள் பிரதமருக்கும் பங்கிருந்ததாக கூறப்பட்டது.
இப்போது இந்தியர்களின் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தில் பிரதமரின் பங்கு என்ன என்பது நமக்குத் தெரியவில்லை. இவருடைய அனுமதியோடு தான் பெயர் தெரியாத இயக்கங்களுக்கு எல்லாம் மாநியங்கள் கொடுக்கப்படுகின்றனவா என்று அவர்களது நடவடிக்கைகள் ஐயுற வைக்கின்றன.
ஆமாம்! இன்றைய நிலையில் பிரதமர் மகாதிர் தான் இந்தியத் தலைவர்களை ஆட்டி வைக்கிறார் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. அப்படி இருக்க வேதமூர்த்தி மட்டும் என்ன விதிவிலக்கா? அல்லும் பகலும் 'இந்தியர், இந்தியர்!' என்று கூக்குரலிட்ட வேதமூர்த்தியை ஒன்றும் இல்லாமல் செய்து விட்டாரே! அவரால் இந்தியர்களுக்கு எந்தப் பயனும் இல்லாமல் போய்விட்டதே!
நமது சந்தேகம் எல்லாம் மித்ரா வேதமூர்த்தியின் கையிலில்லை என்பது தான். பிரதமரே அவரது கையில் எடுத்துக் கொண்டதாகவே தெரிகிறது!
இப்போதைய நிலையில் பிரதமர் மகாதிர் இந்தியர்களின் பிரச்சனையை தனது வசம் வைத்திருப்பதாகவே தோன்றுகிறது! அது இந்தியர்களுக்கு நல்லது செய்ய அல்ல. கெடுதல் செய்வதற்காகவே!
பிரதமர் மகாதிர் பதவியிலிருக்கும் வரை மித்ராவால் இந்தியர்களுக்கு எதனையும் செய்ய இய்லாது!
No comments:
Post a Comment