சமீபத்தில் நடந்தேறிய தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி மாபெரும் தோல்வியைத் தழுவியது!
இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. எல்லா கட்சிகளுமே வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்துத் தான் வெற்றி பெற முடியும் என்கிற நிலையில் தான் தமிழ் நாடு இருக்கிறது!
மக்கள் நீது மய்யம் ஆட்சியில் இருந்தால் ஒருவேளை வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து வெற்றியை உறுதி செய்யலாம்! அதற்கும் வழியில்லை! கமல்ஹாசன் ஆட்சியைப் பிடிப்பார் என்பதற்கான ஒரு சிறிய அறிகுறிகள் கூட எதுவும் இல்லை! அவருக்கு மூன்னாள் இருந்த கட்சிகளே ஆட்டம் கண்டு விட்டன! இவர் எம்மாத்திரம்!
பொதுவாகவே சினிமாவில் இருந்து வருபவர்கள், தங்களது சினிமா கவர்ச்சியின் மூலம், நாட்டைப் பிடித்து விடலாம் என்று கனவு காண்கிறார்கள். எம்.ஜி.ஆர். பிடித்தால் என்றால் அவர் சினிமா மூலம் தன்னை ஓர் அசைக்க முடியாத மனிதராக ஒவ்வொரு படத்திலும் அடையாளப்படுத்திக் கொண்டார்! அவர் அதைத் திட்டம் போட்டு செய்தார் என்று சொல்வதற்கில்லை. அவருக்கு நல்ல மனசு இருந்தது. அதனால் அதுவாகவே தானாக வந்து அவரிடம் ஓட்டிக் கொண்டது! அவர் ஓரு சகாப்தம். அவரோடு அது முடிந்துவிட்டது.
இனி அந்த இடத்தை நிரப்ப சினிமாவில் யாரும் இல்லை என்பது தான் உண்மை. அது தேவையும் இல்லை. கமலாலும் முடியாது!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தோல்வியைத் தாங்க முடியாத ம.நீ.ம. வேட்பாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார் என்கிற செய்தியைப் படித்த போது அழுவதா, சிரிப்பதா என்று புரியவில்லை! ஆளுங்கட்சியாக இருந்தால் செத்தால் பணம் கிடைக்கும்! கமல்ஹாசன் அப்படியெல்லாம் செய்ய வாய்ப்பில்லை! அவரே நொந்து போய் கிடக்கிறார்! அவருடைய வேட்பாளர்கள் அனைவருமே தோல்வியைத் தழுவி விட்டனர். பெயர் சொல்ல ஒருவருமில்லை! இதில் தற்கொலை வேறு!
தேர்தலில் நின்று அப்படியெல்லாம் ஒரே நாளில் ராஜாவாக முடியாது என்பதை வேட்பாளர்களுக்குக் கமல் புரிய வைத்திருக்க வேண்டும். இதெல்லாம் நீண்ட நாள் உழைப்பு, நீண்ட நாள் அர்ப்பணிப்பு, நீண்ட நாள் சேவை, இவைகளோடு சேர்ந்து பணம்! பணம் இல்லாமல் அணுவும் அசையாது! அது தான் தமிழ் நாட்டின் தேர்தல் நிலவரம்!
ஒரு வகையில் இந்த தற்கொலையும் நன்மைக்குத்தான் நடந்திருக்கிறது. ஒரு பொறுப்பற்ற மனிதர் தூக்குப் போட்டுக் கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டார். அவர் தனது குடும்பத்தைக் கூட சட்டை செய்யவில்லை! அவர் குடும்பத்தை விட ஒரு சினிமா நடிகரின் கட்சியை உயர்வாக நினைத்தவர். இருந்தும் அவர்புண்ணியம் இல்லை. இல்லாமலே போகட்டும்!
இது போன்ற வேலை வெட்டி இல்லாதவர்கள் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன! போய்ச் சேரட்டும்!
No comments:
Post a Comment