Saturday 7 May 2022

பொருள் இல்லார்க்கு இவ்வுலகமில்லை!


 முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை!

நாம் வாய் கிழிய பேசலாம். "போகும் போது கொண்டா போகப்போகிறோம்!"  என்று பேசுபவர்கள் யார்? கையில் பணம் வைத்திருப்பவன் அப்படியெல்லாம் பேசுவதில்லை. ஓட்டாண்டியாக இருப்பவன் தான் அப்படியெல்லாம்  பேசுவான்! குடிகாரன் பேசுவான்! ஒன்றுமில்லாதவன் பேசுவான்!

ஆனால் உண்மை நிலவரம் என்ன? இந்த வீண் பேச்சுகளை யாரும் இலட்சியம் செய்வதில்லை. காரணம் இந்த உலகில் இருக்கும்வரை நமக்குப் பணம் தேவைப்படுகிறது.

இந்த உலகின் எந்தப் பகுதிக்குப் போக வேண்டுமானாலும் நீங்கள் போய் வரலாம். உங்களை யார் தடுக்கப் போகிறார்கள்? அது உங்கள்  பணம். உங்கள் பணத்தைக் கொண்டு நீங்கள் என்ன செய்ய வேண்டுமானாலும் செய்யலாம். 

இந்த நாட்டில் நாம் ஏன் மரியாதை இழந்து கிடக்கிறோம்? யோசித்திருக்கிறீர்களா? கையில் பணம் இல்லை, அவ்வளவு தான்!

சீன சமுதாயத்தை யாராவது சீண்டிப் பார்க்கிறார்களா?  அவர்கள் மீது ஏதோ  ஒரு  பயம் இருக்கிறது!  அவர்களிடம் பணம் இருக்கிறது. அந்தப் பணம் பாதாளம் மட்டும் பாயும் என்பது நமக்குத் தெரியும். அவர்களைச் சீண்டிப் பார்த்தால்  பணத்தாலேயே திருப்பி அடிப்பார்கள்! பணத்தை யாராலும் புறக்கணிக்க முடியுமா! அதிகாரத்தில் உள்ளவர்கள் பணந்திண்ணி பிணங்கள்! வாயை அகலமாகவே திறப்பார்கள்!

நம்மால் என்ன செய்ய முடியும்?  பணம் இல்லையென்பதால் நாம் பிச்சைக்கார சமூகமாக அடையாளப்படுத்தப்படுகிறோம். குற்றவாளி சமூகமாகப் பார்க்கப்படுகிறோம். 

விசாரணை என்று ஜெயில் பக்கம் ஒருவன் போனால் அடுத்த நாள் அவன் பிணமாகத் திரும்புகிறான்! அந்த அளவு தான் நமக்குள்ள மரியாதை!

போகும் போது கொண்டு போக முடியுமா என்கிற கேள்வியைவிட இருக்கும் போது  ஜெயில் வரை கொண்டு போகலாம். நீதிமன்றம் வரை கொண்டு போகலாம். ஏன்? கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டவன் நிரபராதியாக வெளியே வருவதில்லையா? 

பணத்தை எங்கெல்லாம் கொண்டு போக முடிகிறது என்பதைக் கவனித்தீர்களா? சொர்க்கத்துக்குக் கொண்டு போக முடியாது தான். ஆனால் நாம் வாழும் நரகத்துக்குப் பணம் அவசியம் தேவை! நரகத்தைச் சொர்க்கமாக்கிக் கொள்ள பணம் தேவை!

நண்பா! பணம் அலட்சியப்படுத்தப்பட வேண்டிய பொருள் அல்ல!  இருக்கிப் பிடிக்க வேண்டிய பொருள்

No comments:

Post a Comment