Tuesday, 31 May 2022

இழி பிறவிகள்!

 

                                     Zuraida Kamaruddin - Housing and Local Govt.Ministe

பொதுவாக அரசியல்வாதிகள் யாராக இருந்தாலும் சரி நாட்டுக்கு  நல்லதைச் செய்ய வேண்டும் என்கிற நோக்கத்தோடு  தான் வருகிறார்கள். ஏதோ ஒரு சிலர் மட்டும் பணம் மட்டுமே நோக்கமாகக் கொண்டு வருகின்றனர். இப்போது, இந்த காலக் கட்டத்தில், பணம் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வருபவர்கள் அதிகரித்துக் கொண்டு வருகின்றனர் என்பது வருத்ததிற்கு உரிய செய்தி என்பதில் ஐயமில்லை.

ஆனால் சுரைடா கமாரூடின் மிகவும் வித்தியாசமான பெண்மணி. அமைதியாக நடந்து கொண்டிருந்த அரசாங்கத்தை  தடாலடியாக கவிழ்த்துவிட்டு வேறு கட்சிக்குத் தாவியவர். அதே பாணியை இப்போதும் பின்பற்றுகிறார்!  மீண்டும் கீழறுப்பு வேலையை ஆரம்பித்திருக்கிறார்! 

இந்த நடப்பு அரசாங்கத்திற்கு இருக்கும் காலம் என்னவோ இன்னும் ஓராண்டுகள் தான்!  இந்த அரசாங்கமும் எதிர்கட்சிகளிடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி இன்னும் கவிழாமல் பேர் போட்டுக் கொண்டிருக்கிறது! அதுவே பெரிய சாதனை!

இன்னும் ஓராண்டுகள் பொறுக்க முடியாமல் இந்த அரசாங்கத்தையும் கவிழ்க்கும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார்  அம்மணி! 

வேறு கட்சி தாவுவதற்கு அவர் சொல்லுகின்ற  காரணங்கள் சரியாக இருக்கலாம்.  கட்சி தாவுபவர்கள் எல்லாருமே சரியான காரணங்களைத் தான் வைத்திருக்கின்றனர்!  கட்சி சரியான கொள்கைகளைக் கொண்டிருக்கவில்லை என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள்!

ஆனால் மக்கள், கட்சி தாவுபவர்களைப் பற்றி, என்ன கருத்து வைத்திருக்கிறார்களோ அதைப் பற்றி மட்டும் அவர்கள் வாய் திறப்பதில்லை.  அரசியல்வாதிகள் கட்சி தாவும்போது அத்தோடு அவர்களோடு சேர்ந்து பல கோடிகளும் தாவுகின்றன என்பதை மட்டும் யாரும் பேசுவதில்லை!

ஆமாம்,   எந்த இலாபமும் இல்லாமல் ஏன் ஒருவர், அரசாங்கத்தையே கவிழ்த்துவிட்டு, வேறு ஒரு கட்சிக்கு மாற வேண்டும்? இது மக்களிடம் உள்ள கேள்வி. நியாயம் தானே? சும்மா விளையாட்டாக யாரும் இதனைச் செய்வார்களா?

சுரைடா போன்றவர்கள் இனி அரசியலில் சம்பாதிக்க வழியில்லை என்கிற கடைசி கட்டத்தில் இருக்கிறார்கள். அவர் தொகுதி மக்கள் எந்த அளவுக்கு அவர் மேல் மரியாதை வைத்திருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியவில்லை. இன்றைய நிலையில், கிடைத்தது போதும்,  என்கிற மன   நிலையில் தான் அவர் இருக்கிறார்! இரண்டு கட்சிகள் மாறி இருக்கிறார். இருபது கோடியாவது  பார்த்திருப்பார் என்பது தான் நமது கணக்கு!

வாழ்க வளமுடன்!

No comments:

Post a Comment