Monday 7 November 2022

பத்து தொகுதியில் பத்துப்பேரா!

 

இந்த 15-வது நாடாளுமன்ற தேர்தலில் அதிகமான வேட்பாளர்களைக்  கொண்ட தொகுதி என்றால் அது பத்து நாடாளுமன்ற தொகுதி தான்.

ஆமாம்,  பத்து தொகுதிக்குப் பத்துப் பேர் போட்டியிடுகின்றனர்!

அந்தத் தொகுதியின் மீது ஏன் இந்த அளவுக்கு வேட்பாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்?  என்ன காரணமாக இருக்கும்? 

சென்ற தேர்தலில் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றவர் பக்காத்தான் கட்சியின் சார்பில் போட்டியிட்ட பி.பிரபாகரன். சுயேச்சையாக சுற்றிபார்க்க வந்தவருக்கு ஏதோ ஓர் அதிர்ஷ்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனவர்! அவருக்கு ஆதரவு காட்டியவர்கள் பக்கத்தான் ஹரப்பான் கட்சியினர், அதன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தியான் சுவா, டாக்டர் மகாதிர் போன்ற அனைவரும் வந்து பிரபாகரனுக்காக பிரச்சாரம் செய்தனர்.

அப்போது அவர் வெற்றி பெற்றதில் ஒரு நியாயம் உண்டு. இந்த முறை அது நடக்குமா?.ஆனால் சென்றமுறையைவிட இந்த முறை அவர் பக்காத்தான் ஹராப்பானின் அதிகாரபூர்வமான வேட்பாளர். இப்போது  அவர் அதிர்ஷ்டத்தை நம்பி அவர் போட்டியிடவில்லை. என்ன தான் பக்காத்தான் அவருக்காகப் பிராச்சாரம் செய்தாலும் அவர் கடந்த ஐந்த ஆண்டுகளாக அவருடைய சாதனை என்ன என்பது தான் இப்போது அவர் முன் நிற்கும் கேள்வி.  சாதனை இருந்தால் வெற்றி பெறுவதற்கான  வாய்ப்புக்கள் அதிகம் என்று சொல்லலாம்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தியான் சுவாவை நாம் குறைத்து மதிப்பிடவும் வழியில்லை. அவர் பத்து தொகுதியில் மக்களால் மிகவும் அறியபட்டவர். அவருடையபலவீனம் என்பது அவர் சுயேச்சையாக நிற்பதுதான். சுயேச்சை என்பதால் எந்த அளவுக்கு அவர் சீனர்களின் ஆதரவைப்  பெறுவார் என்று சொல்வதற்கில்லை. அதற்கு மாறாக அவர்கள் பக்காத்தான் பக்கமே சாய  வாய்ப்புண்டு. அது பக்காத்தான் தலைவர் அன்வார் எந்த அளவுக்குச் சீனர்களைக் கவரமுடியும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

சீனர்களைப் பொறுத்தவரைப் பக்காத்தான் பக்கமே சாய அதிக வாய்ப்புண்டு. இந்தியர்களின் ஆதரவையும், மலாய்க்காரர்களின் ஆதரவையும்  பக்காத்தான் பெறவும் வாய்ப்பு அதிகமுண்டு.

ஆனால் எதனையும் சொல்வதற்கில்லை. இது அரசியல். அரசியலில் ஒருவருடைய உழைப்பு மட்டுமே நிற்கும். பிரபாகரனும் தனது தொகுதியில் தனது உழைப்பைக் கொடுத்திருப்பார் என நம்பலாம். அவரது உழைப்பு அவருக்கு வெற்றியைத் தரும் என நம்புகிறோம்.

பத்துத் தலைகள் போட்டிப் போடுகின்றனர்! ஓர் ஆச்சரியம் என்னவென்றால் பக்காத்தான் வேட்பாளரை பலவீனமானவர் என்று பலர் நினைக்கின்றனர். அதனால் தான் இந்த அளவுக்கு அந்தத் தொகுதியில் போட்டி ஏற்பட்டிருக்கின்றது. ஆனாலும் பிரபாகரன் வெற்றி பெறுவார் என நம்புகிறோம்.

No comments:

Post a Comment