நன்றி: வணக்கம் மலேசியா டாக்டர் செல்வமணி
டத்தோஸ்ரீ டாக்டர் என்.எஸ்.செல்வமணி அவர்களைப் பற்றி நான் எதனையும் அறியேன்.
இருந்தாலும் ஒரு தமிழரின் பெயர் ஒரு சாலைக்கு வைத்ததை நான் பெருமையாகவே கருதுகிறேன்.
இப்போது சாலைகளுக்குப் பெயர் வைப்பது எல்லாவற்றிலும் அரசியல் உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. நாட்டுக்குச் சேவை ஆற்றியவர்களின் பெயர்கள் தான் பெரும்பாலும் சாலைகளுக்கு வைக்கப்படுகின்றன. ஆனால் என்ன செய்வது? கட்சிகளுக்குச் சேவை செய்தவர்களின் பெயர்கள் தான் முக்கியத்துவம் பெறுகின்றது!
க்ட்சிகளில் சேவை என்பது வேறு, நாட்டுக்குச் சேவை என்பது வேறு. நாட்டுக்குச் சேவை செய்தவர்களின் பெயர்கள் தான் என்றென்றும் நினைவு கூரப்பட வேண்டும்.
டாக்டர் செல்வமணி அவர்கள் ஈப்போ மக்கள் நன்கறிந்த கல்வியாளர். கல்விக்காக அவரது குடும்பம் நிறைய தியாகங்களைச் செய்திருக்கின்றனர். அவரது பாட்டனார் குழைந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக தனது நிலத்தையே தானமாகக் கொடுத்தவர். ஏழைக்குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்பதில் டாக்டர் செல்வமணி அவர்கள் நிறைய அக்கறையைக் காட்டியிருக்கிறார்.
அவரின் கல்வி சேவைக்காக 1997-ம் ஆண்டு அவருக்கு "தோக்கோ குரு" விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.
ஈப்போ அண்டர்சன் இடைநிலைப்பள்ளியில் ஆசிரியராகவும் பின்னர் முதல்வராகவும் பணியாற்றியவர். கல்வி என்று வரும்போது அவர் இனம், மதம், நிறம் எதுவும் பார்ப்பதில்லை. அனைத்து இன மாணவர்களும் கல்வி பயிலுவது அவர்களது உரிமை என்பது தான் அவரது கொள்கை. கடைசிவரை அவரது கொள்கையிலிருந்து அவர் மாறவில்லை.
ஆசிரியர் செல்வமணி அவர்கள் 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் காலமானார். அப்போது அவருக்கு வயது 93. கல்விமான்களுக்கு இறப்பு என்பது இல்லை. அவர்கள் என்றென்றும் வாழ்ந்திருப்பர்.
அவரது நினைவாக சாலை ஒன்றுக்குப் பெயரிப்பட வேண்டும் என்னும் கோரிக்கையை ஈப்போ செயிண்ட் பிலோமினா தமிழ்ப்பள்ளி அறவாரியம் முன்வைத்து இப்போது அது நடப்புக்கு வந்திருக்கிறது.
கடந்த இரண்டு ஆண்டு கால முயற்சியின் காரணமாக இது நிறைவேறியிருக்கிறது. இந்த அங்கீகாரம் பெற முயற்சிகள் செய்த ஈப்போ மாநகரமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயகோபி மற்றும் ஈப்போ மேயர் டத்தோ ருமைசி பஹாரின் அவர்களுக்கும் நன்றி! நன்றி! கூறுகிறோம்.

No comments:
Post a Comment