Monday 28 November 2022

வேண்டாம் இந்த விளையாட்டு!

 

இப்போது நாட்டின் புதிய பிரதமராக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பதவியேற்று ஒரு சில தினங்களே ஆகின்றன.

ஒரு சில நடப்புகளைப் பார்க்கும் போது 'ஏன் இந்த அவசரம்? என்று  சிலரைப் பார்த்துக் கேடகத்தோன்றுகிறது.

அமைச்சரவை அமைவதற்கு குறைந்தபட்சம் ஓரிரு வாரங்கள் பிடிக்கும். அதற்குள்ளாகவே 'அவருக்கு அந்தப் பதவி கொடுங்கள்! இவருக்கு இந்தப் பதவி கொடுங்கள்!' என்கிற கோரிக்கைகள் எழ ஆரம்பித்துவிட்டன.  ஊடகங்களும் அந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன.

நாம் நமது பிரதமரை நம்புகிறோம். இது தேசிய முன்னணியின் அரசாங்கம் அல்ல. அவர்கள் இந்தியர்களை முற்றாகப் புறக்கணித்தவர்கள். 

ஆனால் இது புதிய அரசாங்கம். நமக்கு என்ன தேவை என்பதைப் பிரதமர் அறிவார். அது மட்டும் அல்ல. இந்தியர்களும் கணிசமான அளவு நாடாளுமன்றத்தில் இருக்கின்றனர்.  இந்தியர்கள் பிரச்சனையை பிரதமரிடம் கொண்டுச் செல்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடமை.

நாம் இன்னும் பழைய முறைப்படியே சிந்திக்க வேண்டிய அவசியமில்லை. நிச்சயமாக சரியான ஒருவர் பதவிக்கு வருவார் என எதிர்பார்க்கலாம்.

நம்மைப் பொறுத்தவரை அடுத்த ஐந்து ஆண்டு காலத்தில் இந்தியர் பொருளாதாரம் மூன்று விழுக்காடு அடைய வேண்டும் என்பது இலட்சியமாக, அரசாங்கத்தின் கொள்கை அமைய வேண்டும். நம்மிடையே  பொருளாதார நிபுணர்களுக்குப் பஞ்சமில்லை. கடந்த காலங்களில் பல்வேறு அரசாங்க நிதியுதவிகள் மக்களைச் சென்று அடையவில்லை.   பொருளாதாரம் அறிந்தவர்களைக் கொண்டு இனி  செயல்பட வேண்டும்.

கடந்த காலங்களில் நாம் தேர்தெடுத்த மக்கள் பிரதிநிதிகள் தான் அரசாங்க நிதிகளைக் கையாண்டவர்கள். அவர்கள் பொருளாதார நிபுணர்கள் அல்ல. அதனால் பல முறைகேடுகள்! ஏன்? தானைத்தலைவர் கூட நமது பொருளாதாரத்தை ஒரு சிறிய அளவு கூட நகர்த்த முடியவில்லையே! இருந்ததையும் தகர்த்துவிட்டுத் தானே  போனார்!

முடிந்தால் இந்த முறை தக்க நிபுணர்களை வைத்து நமது தரத்தை உயர்த்த முயற்சி செய்ய வேண்டும். அரசியல்வாதிகள் ஏதோ நிபுணர்களைப் போல செயல்பட்டதெல்லாம் போதும்.

அதனால் 'அவரைப் போடு! இவரைப் போடு!' போன்ற பல்லவிகள் இனி வேண்டாம். நாம் யாரை சிபாரிசு செய்கிறோமோ அவர்களின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்பது தான் நமது அனுபவம். இந்த முறையாவது நல்லது நடக்கட்டும்!

No comments:

Post a Comment