"இது எனது நாடு" என்று யாரால் தைரியத்தோடு சொல்ல முடியும்?
நிச்சயமாக எந்த ஓர் ஆளும் அரசியல்வாதியால் சொல்ல முடியாது. ஆளும் அரசியல்வாதி என்றால் முன்னாள் தேசிய முண்ணனியே தான். இன்றும் நாட்டை அவர்கள் கட்டுப்பாட்டில் தானே வைத்திருக்கிறார்கள். அது மட்டும் அன்றி இன்றைய எதிர்கட்சியினரும் அவர்கள் தான். அதனால் எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம். இங்கு நாம் சொல்ல வருவது முன்னாள் தேசிய முண்ணனியினர் தான்.
என்று டாக்டர் மகாதிர் போன்ற துரோகிகள் நாட்டை ஆள வந்தார்களோ அன்றே நாட்டுக்குப் பிடித்தது ஏழரை சனியன். அவர்களிடம் நாட்டுப்பற்றோ, இனப்பற்றோ, நாட்டின் மீது விசுவாசாமோ எதுவுமே இல்லாத ஒரு கொள்ளைக்கூட்டம்! அவரது சொத்து மதிப்பு, பிள்ளைகளின் சொத்து மதிப்பு இதற்கெல்லாம் எல்லையே இல்லை! ஓர் அரசியல்வாதியால் இவ்வளவு சம்பாதிக்க முடியுமா? அவரது மகன்களால் - எனன தான் தொழிலசெபவர்களாக இருந்தாலும் - இந்த அளவு கோடிக்கணக்கில் பணம், சொத்துகள் வைத்திருக்க முடியுமா?
அவருக்குப் பின்னால் வந்தார்களே முகைதீன், சப்ரி போன்ற பிரதமர்கள் - இவர்களுக்கு மட்டும் நாட்டுப்பற்று ஊற்றுத்தண்ணீராய் ஓடுகிறதோ? இவர்களும் கொள்ளையர்கள் பட்டியலில் தானே வருகிறார்கள்! கொள்ளையடிப்பதற்கு ஓர் எல்லையே இல்லையா? இவர்களுடைய சொந்தங்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பதவிகளில் உள்ள அதிகாரிகள் - இப்படி யாரை எடுத்தாலும் யாரையாவது கைநீட்டி இவர் 'புனிதன்' என்று சொல்லுகிற அளவுக்கு யாரேனும் இருக்கிறார்களா? அப்படி சொல்லத்தான் முடியுமா?
அரசியல்வாதி என்றாலே புறங்கையால் தேனை நக்கத்தான் செய்வான். இது ஒன்றும் அதிசயமல்ல! ஆனால் தேன் கூடே எனக்குத்தான் என்று செயல்பட்டால் அதுவே அவனுக்கு எமனாகிவிடும்! அது தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. இலஞ்ச ஊழல் ஆணையம் சும்மாவா இருக்கும்? அதன் வேலையை அது செய்யத்தான் செய்யும். எல்லாகாலமும் தனக்குச் சாதகமாக இருக்கும் என்று அரசியல்வாதிகள் நினைக்கிறார்கள். அது தப்பு என்று இப்போது நிருபணமாகி வருகிறது.
கொள்ளையடிக்கும் கூட்டம் எல்லாம் 'நாட்டிற்கு விசுவாசம், இனப்பற்று, மொழிப்பற்று, சமயப்பற்று' என்று பேசாமல் இருந்தால் போதும். உங்களைப் பற்றி மக்களுக்கே தெரியும்
'இது எனது நாடு' என்று வாய் திறக்கும் முன்னர் கொஞ்ச மேலே சொன்னவைகளை நினைத்துப் பாருங்கள்!
No comments:
Post a Comment