Sunday 24 March 2024

ஒற்றுமைத் துறையா? பிரதமர் துறையா?





பொது மக்களிடையே இல்லாத ஒரு குழப்பத்தை  இப்போது நமது இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள்  எதிர்நோக்குகின்றனர்.

மித்ரா அமைப்பை பிரதமர் அன்வார் பிரதமர் துறையிலிருந்து ஒற்றுமைத்துறைக்கு மாற்றினார்.  அவருக்கு அந்த அதிகாரம் இருந்தது அதனால் , என்ன காரணத்தினாலோ,   அதனை அவர் செய்தார்.

இப்போது ஒரு சிலர் சேர்ந்து கொண்டு  'மீண்டும் பிரதமர் துறைக்கே மாற்றுங்கள்' என்று கோஷம் போட்டுக் கொண்டிருக்கின்றனர்!   அப்போதும் அவர் தான் மாற்றினார்  இப்போதும் அவர் தான் மாற்றினார். அது பிரதமரின் உரிமை.  ஏன் மாற்றினார்? ஏதோ  கிசுகிசு  அவருடைய காதுகளுக்கு எட்டியிருக்கலாம்! 

சென்ற ஆண்டு அது முழுமையாக, பிரதமர் துறையில்,  டத்தோ ரமணன்  கீழ் இயங்கியது. அதன் பின்னர் தான்  ஒற்றுமைத்துறை  அமைச்சுக்கு மாற்றப்பட்டது. 

இந்த ஓர் ஆண்டில்  டத்தோ ரமணின் சாதனைகள் என்ன?  மித்ராவுக்கு ஒதுக்கப்பட்ட பணத்தை  முற்றிலுமாகப் பயன்படுத்தினார். அது அவரின் சாதனை.  ஏற்பட்ட வேதனைகள் என்ன?     தமிழ் பள்ளி மாணவர்களுக்குப்  பயன்படுத்தப்பட்ட கணினிகளைத்  தள்ளிவிட்டார்  என்கிற குற்றச்சாட்டு  இரண்டாவது,  நாடாளுமன்ற உறுப்பினர்களின் கைச்செலவுக்காக  ஒவ்வொருக்கும்  ஐந்து இலட்சம் அள்ளிவிட்டார் என்றும் சொல்லப்படுகிறது.

நாம் சொல்ல வருவதெல்லாம்  தமிழ் பள்ளி மாணவர்களின் மீது  உங்களுக்கு  ஏன் அந்த அளவுக்கு வெறுப்பு என்பது மட்டும் தான். நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின்  தொகுதி மேம்பாட்டுக்காக  அவர்களுக்கும் பணம் ஒதுக்கப்படுகிறது. மித்ராவுக்கும் அவர்களுக்கும்  என்ன சம்பந்தம்?

மித்ராவின் பணம் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்றால் கல்விக்காக இன்னும் செலவு செய்யலாம்.  நாம் குற்றம் சொல்ல மாட்டோம். ஆனால் பழைய கணினிகள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உதவித் தொகை - இவைகளை எல்லாம் எப்படி ஏற்றுக்கொள்வது?  

இது  ஊழலா என்பது நமக்குத் தெரியாது.  ஆனால் பிரதமர் என்ன நினைத்திருப்பார்?  மித்ரா,  பிரதமர் துறைக்கு மாற்றினால் ஊழல் தான் அதிகம் ஆகும் என்று அவர் நினைத்திருக்கலாம்.  ஏற்கனவே அது தான் நடந்தது. 'செடிக்' கிலிருந்து பார்த்தால் அப்படித்தான் வரலாறு கூறுகிறது!

அதனால் அவர் மீண்டும் ஒற்றுமைத்துறைக்கே  மாற்றி இருக்கலாம்.  மித்ராவுக்காக அவர் நியமித்த முதல் நபரே நம்பிக்கைக்குரியவராக இல்லையே  என்று மனம் நொந்து போயிருக்கலாம்.

இனி மேலும் வாய் சவடால் வேண்டாம்.  இந்த மாற்றத்தினால்  பொது மக்களுக்கு எந்த நட்டமும் இல்லை.  நம்முடைய தேவை எல்லாம் ஒற்றுமைத்துறை ஒட்டுமா என்பது மட்டும் தான்!  இல்லாவிட்டால் அவர்களையும்  ஓட்டத்தயார்!

No comments:

Post a Comment