Saturday 16 March 2024

கடுமையான தண்டனை தேவை!

 


நாம் அடிக்கடி பத்திரிக்கைகளில் பார்க்கும்  செய்திதான்.  விபச்சாரத்தில்  ஈடுபடும் பெண்களில் பலர் காவல்துறையினர் கைது செய்வதை   நாம் படிக்கிறோம். 

ஆனால் செய்திகளெல்லாம் பெரும்பாலும்  வெளிநாட்டுப் பெண்கள் என்று தான்  கூறுகின்றன. காவல்துறையினர் கைது செய்கின்றனர், தண்டனை  அளிக்கப்படுகிறது. இப்படித்தான் நாம் அடிக்கடி செய்திகளைப் பார்க்கிறோம்.

இந்த முறை கொஞ்சம் வித்தியாசமான  செய்தி.  இந்தியாவிலிருந்து நான்கு பெண்கள் கடத்தி வரப்பட்டு  விபச்சாரத் தொழிலில் கட்டாயப்படுத்தப் பட்டார்கள்.   ஏற்றுக்கொள்ள முடியாத செய்தி.  பிழைப்பதற்கு வழியில்லாமல் இங்கு வந்தால் பிழைக்கலாம்  என்று பெண்கள் நினைத்துக் கூட பார்க்க முடியாது போல் தோன்றுகிறது.

வேறு ஒரு நாட்டிலிருந்து கடத்தப்படுவது என்பது எத்துணை  கொடூரமானது என்பது நமக்குப் புரிகிறது.  இதற்கு அசாத்திய துணிச்சல் வேண்டும். அந்நாட்டுடன் பலமான உறவு இருக்க வேண்டும்.

இது போன்ற குற்றங்களை இழைப்போருக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.  உண்மையைச் சொன்னால் நம் நாட்டில் தண்டனைகள் கடுமையாக இல்லையோ என்று தான் நினைக்க வேண்டியுள்ளது.  அப்படியிருக்க நியாயமில்லை. வேண்டுமானால் பல குற்றச்சாட்டுகள் போக வேண்டிய இடத்திற்குப் போகாமல்  தடுக்கப்படுகிறது  என்று சொல்லலாம். வல்லவன்  வகுத்ததே வாய்க்கால் அவ்வளவு தான் வாய் திறக்க வழியில்லை!

எது எப்படியிருந்தாலும் இது போன்ற குற்றங்களுக்குத் தண்டனைக் கடுமையானதாக இருக்க வேண்டும்.  அவர்களின் ஆயுள் முழுவதும் தண்டனையை அனுபவிக்க வேண்டும்.  இப்போழுது சரியான தண்டனை சரியான குற்றவாளிக்குப்  போய்ச் சேரவில்லை.  எத்தனை பெரிய பிரச்சனையாக இருந்தாலும் அதனை பிசுபிசுத்துப் போய்விட செய்துவிடுகின்றனர்.

ஆனால் சமீபத்திய இந்த - கடத்தல் + விபச்சாரம் - குற்றம் சம்பந்தப்பட்டவர்களுக்கு  எளிதாக தப்பிக்க முடியாது  என்றே நமக்குத் தோன்றுகிறது.

இது போன்ற குற்றங்கள் கடுமையானவை. கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டியவை.

No comments:

Post a Comment