Thursday, 28 November 2024

பணிப்பெண்கள் என்ன கேவலமா?


வீட்டு வேலை செய்யும் பணிப்பெண் ஒருவரைத் துன்புறுத்தியதாக ஒரு தம்பதி கைது செய்யப்பட்டு இப்போது சிறை தண்டனையும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதில் ஆச்சரியம் என்னவேன்றால் குடும்பத்தலைவர் காவல்துறையில் உள்ளவர்.  அது தான் நம் மனதைச் சங்கடப்பட வைக்கிறது.  இப்படிக் காவல்துறையில் உள்ளவர்களே சட்டத்தை மீறினால்  யாரை நொந்துகொள்வது?

காவல்துறையில்  உள்ளவர்கள் சட்டத்தை  மீறும்போது  தண்டனை அதிகமாகத்தான் இருக்கும்; இருக்க வேண்டும். அதனால் தான் அதிகாரியான அவருக்குப் பன்னிரெண்டு ஆண்டுகளும் அவரது மனைவிக்குப் பத்து ஆண்டுகளும்  சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.

அதில் ஏதும் தவறு இருப்பதாகத் தோன்றவில்லை.  அதிகாரத்தில் உள்ளவர்களே  குற்றங்களைப் புரியும் போது  அவர்களுக்குக் கடும் தண்டனை அளிக்கப்படும்  என்பது அவர்களுக்குத் தெரியும்.  ஆனாலும் பலர் காலம்பூராவும் ஏமாற்றியே கல்லந்தள்ளிவிடுகின்றனர்.  அதுவே ஒரு சிலருக்கு முன்னுதாரணமாகப்  போய்விடுகிறது.  தவறான நுன்னுதாரணம்,  தவறான வழிகாட்டி அனைத்தும் தவறில் போய் முடியும்.

காவல்துறை இலஞ்சத்திற்குப் பேர் போனது.  அவர்களுடைய அடிதடியெல்லாம்  சிறைகளின் உள்ளே தான் இருக்க வேண்டும்.  வெளியே  வீட்டுப் பணிப்பெண்களிடம்  தங்களது வீரத்தைக் காட்டுவது  காட்டுமிராண்டித்தனம்.  ஒரு அப்பாவிப் பெண்ணை  அடித்து உதைத்து நாற்பதுக்கு  மேற்பட்ட  தையல்களைப் போட வைத்து - இறைவா இவர்களை என்ன செய்யலாம்?  ஓர் ஆண் தான் மிருகத்தனமாக நடந்து கொள்கிறான் என்றால் ஒரு பெண்ணுமா அப்படி?

நம்மால் இவர்களை ஒன்றும்  செய்யும் முடியாது.  நீதிமன்றம் கொடுத்த தண்டனை போதுமானதா  என்று நம்மால் முடிவுக்கு வரமுடியாது.  நீதியின் கண்களில் அது சரியாகத்தான் இருக்க முடியும்.

ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். பணிப்பெண்களைக் கேவலமாக நினைக்க வேண்டாம். அயோக்கியத்தனம் பண்ணாதவரை எந்த வேலையும் உயர்வானதுதான்.

No comments:

Post a Comment