Saturday, 30 November 2024

அடித்துக் கொல்வதா?

நாய்களை அடித்துக் கொல்வது என்பது சாதாரண தினசரி வாழ்க்கையில்  ஓர் அங்கம்  என்கிற நிலைமைக்க்ப் போய்விட்டது.

மனித நேயம் இருந்தால் யாரும் இது போன்ற மிருகச் செயல்களைச்  செய்துவிட முடியாது. ஏதோ தப்பித் தவறி பள்ளியின் உள்ளே வந்துவிட்டது  என்பதற்காக இப்படி அடித்தே கொல்வது  எத்தகைய  மிருகத்தனம்?

நீங்கள் யாரும் நாய்களைக் கொஞ்சுங்கள்  என்று சொல்ல வரவில்லை.  உங்களின் அனுதாபத்தையாவது காட்டுங்கள் என்று தான் சொல்லுகிறோம். நாய்களைக் கொல்வதால்  அப்படி என்ன பெருமை உங்களுக்கு வந்துவிட்டது?

நாய்கள் அடக்கமான பிராணிகள்.  அடித்தால் வாங்கிக் கொள்ளும் அவ்வளவுதான். அதனை அடித்தே கொல்வதா?  நினைத்துக் கூட  பார்க்க முடியவில்லை.

நாய்கள், பூனைகள் நம்மைச் சுற்றி வாழ்பவை.  நம்மைச் சுற்றி வருபவை. அது ஒர் உயிருள்ள  ஜீவன் என்று நினைத்தால் போதும். அதனைத் தெரு நாய் என்கிறோம். தெருவில் தான் சுற்றித் திரிகின்றன.  அது எப்படியோ எதனையோ தின்று  வாழ்கிறது.  விரட்டினால் பயந்து ஓடிவிடுகிறது. யாருக்கு என்ன தீங்கை அது செய்கிறது?

மனிதனுக்கு யாரிடமும் எந்த அன்பும் இல்லை அக்கறையும் இல்லை. மனித நேயமும் இல்லை.  அன்பு இருந்தாலே போதும்.  எந்த மிருகத்தையும் கொல்லத் துணியாது.  மனித வக்கிரத்தோடு வாழ்பவன் எதனையும் செய்யத் துணிவான்.

அரசாங்கம் இது போன்ற செயல்களுக்குத் தக்க தண்டனை கொடுக்க வேண்டும்  என்பது தான் நமது கோரிக்கை.  அது நாயாக இருக்கலாம், பூனையாக இருக்கலாம்  அவைகளை சித்திரவதை செய்து  கொல்வதை யாராலும்  ஏற்றுக்கொள்ள முடியாது. சும்மா நூறு, இருநூறு தண்டனையெல்லாம் போதுமானது அல்ல என்பதை நாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.

இதை நிறுத்த கடுமையான தண்டனை தான் ஒரே வழி. வருங்காலங்கலில் கடுமையான தண்டனை வழி தான் இது போன்ற செயல்களைக் கட்டுப்படுத்த முடியும். 

அடித்துக் கொன்றவனை கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும். வேறு எதுவும்  மனதைத் தேற்றாது.

No comments:

Post a Comment