மூன்று ஆண்டு தடையை முறியடித்தார் டத்தோஸ்ரீ சரவணன். நெஞ்சாராப் பாராட்டுகிறோம்.
பள்ளிவாசல்களைத் தவிர, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு எந்த ஒரு வழிபாட்டுத் தளங்களுக்கும் பொருளாதார உதவி இல்லை என்று கைவிரித்தார் துணை அமைச்சர் ஒருவர். எந்தவொரு பி.கே.ஆர். நாடாளுமன்றத் தலைவர்களோ, ஜ.செ.கெ. தலைவர்களோ மூடிய வாயைத் திறக்கவில்லை! வாய்க்கு அணை போட்டுவிட்டனர்!
இந்த நேரத்தில் பொங்கி எழுந்தவர் தான் டத்தோஸ்ரீ சரவணன். கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தார். தொடர்ந்து பலர் எதிர்ப்புகளைத் தெரிவித்து வந்தனர், இந்த நிலையில் வீடமைப்பு அமைச்சர், ங்கா கோர் மிங் மானியங்கள் தொடர்ந்து கிடைக்கும், தடையேதுமில்லை என்கிற அறிவிப்பைச் செய்திருக்கிறார். வாழ்த்துகிறோம்.
வெளியே பார்ப்பதற்கு எல்லாம் வெகு விரைவில் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது என்று தோன்றலாம். ஒன்றை யோசித்துப் பாருங்கள். அரசியல்வாதிகள் கண்டு கொள்ளாத நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்விகள் எழுப்பாத நிலையில் இந்தப் பிரச்சனை என்ன ஆகியிருக்கக் கூடும் என்று யோசித்துப் பாருங்கள். அதுவும் இந்து கோவில்கள் மட்டும் தான் என்கிற நிலை இருந்திருந்தால்......? இந்நேரம் மூட்டையே கட்டியிருப்பார்கள்! எல்லா வழிபாட்டுத் தளங்கள் என்பதால் எதுவும் செய்ய முடியவில்லை.
ஆனாலும் இது ஓர் எச்சரிக்கை மணி என்பதாகத்தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். பிரதமர் அன்வாரின் பட்டியலில் இதுவும் ஒன்றாக இருக்கலாம். யார் கண்டார்?
நல்ல வேளை சரவணன் அவர்கள் எந்தப்பதவியுலும் இல்லை. அதனால் இந்தச் சமுதாயம் தப்பித்தது!
No comments:
Post a Comment