Thursday 12 December 2019

நஷ்டயீடு முடியாதா..?

சமீபத்தில் எழுபது வயதுக்கு மேர்பட்ட இருவருக்குக் குடியுரிமை கொடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின!

அதில் பெருமைப்பட ஒன்றுமில்லை. இந்தியர்களைப் பொறுத்தவரை எழுபது வயதக்கு மேற்பட்டவர்களுக்குத் தான் குடியுரிமை கொடுக்கப்பட்டு வருகின்றது.   முந்தைய பாரிசான் ஆட்சியிலும் அது தான் நடந்தது. அது தான் இப்போதும் தொடர்கிறது! அப்போதும் ஏதோ ஒரு ம.இ.கா. பிரமுகர் ஒருவர் குடியுரிமை பெற்ற மாவீரர்களுடன் புகைப்படத்தோடு புன்னைகைப்பார்! இப்போதும் அது தான் தொடர்கிறது!

குடியுரிமை என்பது அரசாங்கத்தில் பணிபுரியும் பணியாளர்களின் பொறுப்பு. எப்படி வேண்டுமானாலும் வளைந்து கொடுக்கும்! சமயங்களில் ஏழு வயதிலும் கிடைக்கும் கொஞ்சம் விரைத்துக் கொண்டால் எழுபது வயது வரை போகும்! அது பணியாளர்களின் மனநிலையைப் பொறுத்தது!

என்னிடம் ஒரு கேள்வி உண்டு. குடியுரிமை என்பது அரசாங்கத்தின் உரிமை. அதாவது பனியாளர்களின் உரிமை!  நமக்கு அது தெரியும். அந்தக் குடியுரிமை சம்பந்தப்பட்டவர்கள் விண்ணப்பம் செய்து நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு கிடைக்கிறது. இந்த நாற்பது ஆண்டுகள் என்ன நடந்தது? நாற்பது ஆண்டுகள் கழித்து குடியுரிமைக்கு விண்ணப்பித்தவர் எப்படி குடியுரிமைக்குத் தகுதி பெற்றார்? இந்த நாற்பது ஆண்டுகள் தகுதி பெறாதவர் எந்த அளவுகோளை வைத்து தகுதி பெற்றார்.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்னும் அவர் அதே தகுதியைத்தான் வைத்திருந்தார். நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னரும் அவர்  அதே தகுதியைத்தான் கொண்டிருக்கிறார்.  இந்த நாற்பது ஆண்டுகளில் அவர் என்ன தகுதியை இழந்திருந்தார்? அவர் ஏன் நாற்பது ஆண்டுகள் இழுக்கடிக்கப்பட்டார்? 

குடியுரிமை கிடைக்க எது அவருக்குத் தடையாக இருந்தது? மதமா? மொழியா? நடத்தையா?  ஆனால் கடந்து போன நாற்பது ஆண்டுகளாக  இவைகள் எல்லாம் தடையாக அவருக்கு இருந்தது இல்லையே! தடையாக இருந்திருந்தால் நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு குடியுரிமை கிடைக்க வழியில்லையே!

என்ன தான் அது அரசாங்கத்தின் உரிமை என்றாலும் ஒரு மனிதரை இந்த அளவுக்கு சிறுமைப்படுத்துவது என்பது வெட்கக்கேடானது!  இந்த நாற்பது ஆண்டுகள் அவர் இழந்த உரிமைகள் ஏராளம்.  

இது போன்ற இழுத்தடிப்புகளுக்கு ஒரு தீர்வு காண வேண்டும்.  நாற்பது ஆண்டுகள் அவர் இழந்த பொருளாதார இழப்புகளுக்கு அரசாங்கம் பொறுப்பு ஏற்க வேண்டும்.  அவர்களுக்குப் போதுமான பொருளாதார உதவிகள் செய்ய வேண்டும்.

எழுபது வயதுக்கு மேல் குடியுரிமை கிடைத்து "நான் இந்நாட்டுப் பிரஜை" என்கிற பெருமிதமா வரப்போகிறது! பொருமல் தான் வரும்!

No comments:

Post a Comment