Sunday 15 December 2019

தேவையற்ற கேள்வி...!

டாக்டர் மகாதிரிடம் மீண்டும்  மீண்டும் ஒரே கேள்வியைக் கேட்டுக் கொண்டிருப்பது,   நமக்கும் மட்டும் அல்ல,   அவருக்கும் சங்கடத்தை ஏற்படுத்துகிறது என்பதை நமது ஊடகங்கள் தெரிந்திருக்க வேண்டும்.

எல்லாக் கேள்விகளுக்கும் ஒர் உள்நோக்கம் இருப்பது போல இங்கும் ஒர் உள்நோக்கம் இருப்பதாகவே நமக்குப் படுகிறது.  நல்லதைச் செய்கிறேன் என்று நினைத்து கெடுதலைச் செய்கிற வேலையில் நமது ஊடக நண்பர்கள் ஈடுபட்டிருப்பதாகவே தோன்றுகிறது! அல்லது அவர்கள் வேண்டுமென்றே இப்படி ஒரு கேள்வியைக் கேட்டு சம்பந்தப்பட்ட இருவரையும் சங்கடப்படுத்துகிறார்கள் என நம்பலாம்.

"எப்போது பிரதமர் பதவியை அன்வாரிடம் ஒப்படைப்பீர்கள்?" என்று மீண்டும் மீண்டும் அதே கேள்வியைக் கேட்கும் போது யாராக இருந்தாலும் அது எரிச்சலை உருவாக்கத்தான் செய்யும்!  அது தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது! 

மீண்டும் மீண்டும் அந்தக் கேள்வி எழுப்பபடும் போது மகாதிர் என்ன நினைக்கிறார்? ஆமாம் நாம் என்ன நினைப்போமோ அப்படித்தான் அவரும் நினைப்பார்!  முன்பே அவர் எப்பொழுது ஒப்படைப்பேன் எப்று கூறிவிட்ட பிறகு ஏன் மீண்டும் அந்த கேள்வி எழுப்பப்படுகிறது என்று அவர் சங்கடப்படத்தான் செய்வார்! அதனால் ஒவ்வொரு முறையும் அவர் வெவ்வேறான பதில்களைக் கொடுத்துக் கொண்டு வருகிறார்! இப்போது அது ஒரு தமாஷான  கேள்வியாக ஆகிவிட்டது! அவரும் தமாஷ் செய்வது போல பேசி வருகிறார்! இப்போது  நாம் அவரது பதிலை தமஷாகவும் எடுத்துக் கொள்ளலாம் தமாஷ் அல்லாத மாதிரியும் எடுத்துக் கொள்ளலாம்! இதில் அதிகம் சங்கடப்படுபவர் வருங்காலப் பிரதமர் என்று சொல்லப்படும் அன்வார் இப்ராகிம் தான்! அவர் அந்த கேள்வியைப் பிரதமரிடம் கேட்கவில்லை. கேட்பவர்கள் ஊடகவியலாளர்கள். இந்த கேள்வி வரும் போதெல்லாம் அவர் நேரத்திற்குத் தகுந்தாற் போல் பதிலளித்து வருகிறார்! இப்போது மக்கள் தான் கேனையனாகி விட்டார்கள

இந்த கேள்வியைத் தவிர்த்து விட்டு நாட்டு நன்மைக்காக கேள்விகள் கேளுங்கள் என்று தான் ஊடகங்களுக்கு நாம் ஆலோசனை சொல்ல முடியும்.  அதைத்தான் நமது தலைவர்களும் சொல்லி வருகிறார்கள். .  தேவையற்ற கேள்விகள் கேட்டு மக்களை குழப்ப வேண்டாம் என்று நாமும் இந்த நேரத்திலே ஊடகங்களைக் கேட்டுக் கொள்ளுகிறோம்.

பிரதமர் போகும் போது போகட்டும். அது வரை பொறுத்திருங்கள்! குழப்பத்தை ஏற்படுத்தும் கேள்விகளைக் கேட்க வேண்டாம். 

ஆளுங்கட்சியில் உள்ள சில்லறைகளையோ அல்லது எதிர்க்கட்சியில் உள்ள சில்லறைகளையோ நாம் கேட்டுக் கொள்ளுவதெல்லாம் நீங்கள் நாட்டுக்கு நல்லதை செய்ய வேண்டும் என்கிற நோக்கத்தில் தான் உங்கள் பதவிகளில்  இருக்கிறீர்கள்.  அதனைச் செய்தாலே போது. நாடு நலம் பெறும்.

இனி "பிரதமர் மாற்றம்" என்பது கேள்வியாகவே இருக்க வேண்டாம்!அது நடக்கும்! அது போதும

No comments:

Post a Comment