Friday 6 December 2019

நல்லதா? கெட்டதா?


பி.கே.ஆர். தலைவரும் அடுத்த பிரதமர் என்று அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும் அன்வார் இப்ராகிம் பற்றியான செய்திகள் அதுவும் எதிர்மறையான செய்திகள் ஏதோ ஒரு வகையில் வெளியாகிக் கொண்டு தான் இருக்கின்றன.

அதுவும் அவரை பற்றியான பாலியல் ரீதியான செய்திகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.  

ஏன், எதனால் என்றெல்லாம் நம்மால் யோசிக்க முடியவில்லை. தொடர்ந்தாற் போல வந்து கொண்டிருக்கிறது. அவருக்குத் தொடர்ந்து ஓர் அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்பதாக இது போன்ற செய்திகள் உருவாக்கப்பட்டு உள்நோக்கத்தோடு உலா வந்து கொண்டிருக்கிறது!

இப்படியெல்லாம் செய்திகளை உருவாக்கி, பணத்தை வாரி இறைத்து, இந்த செய்திகளின் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கிறார்களே இவர்களை நாம் ஒன்றும் செய்ய முடியாது என்கிற எண்ணம் அவர்களுக்கு உண்டு. ஒன்று இவர்கள் எப்படியோ சட்டத்தின் பிடியிலிருந்து  ஒவ்வொரு முறையும் தப்பி விடுகின்றனர்.  கடுமையான தண்டனை எதுவும் இதுவரை அவர்களுக்குக் கிடைக்கவில்லை.

சரி, இப்படியெல்லாம் செய்திகள் வருகின்றனவே அது அன்வாரை எந்த அளவுக்குப் பாதிக்கும்? 

ஓரளவும் பாதிக்காது என்பது தான் நமது கருத்து!  ஒரு மனிதரைப் பற்றி இது போன்ற செய்திகள் முதன் முறையாக வந்தால் நமக்கு அது ஆச்சரியத்தைக் கொடுக்கும்!  அதுவும் பிரபலமான மனிதர் என்றால் இன்னும் கொஞ்சம் அதிகமாகவே ஆச்சரியத்தைக் கொடுக்கும்! 

ஆனால் அன்வார் பற்றிய செய்திகள் என்பது அப்படியல்ல. இந்த ஒரே குற்றச்சாட்டு மீண்டும் மீண்டும் அதே குற்றச்சாட்டு என்பது சராசரியாக சிந்திக்கும் மனிதன் கூட விழுந்து விழுந்து சிரிப்பான்! ஒரு மனிதன் ஒரு முறை தவறு செய்யலாம். ஆனால் மீண்டும் மீண்டும் அதே தவறை ஒரு மனிதன் செய்கிறான் என்றால் யாராவது நம்புவார்களா? அப்படித்தான் அன்வார் கதையு ம்.  முதல் கதையையே நம்ப ஆளில்லை. ஆனால் தொடர்ந்து தொடர்ந்து அது போன்ற செய்திகளே வருகின்றன.  அப்படியென்றால் அன்வாரின் எதிரிகள் எந்த அளவுக்கு அவருக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு அவருக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்தி அவர் பிரதமர் பதவிக்கு வர முடியாதபடி செய்கின்றனர் என்பது தெளிவாகத் தெரிகிறது!

ஆனாலும் இப்போது நடப்பது என்ன? இப்போது மக்களே அன்வார் மீது ஓர் அனுதாபம் ஏற்படுகின்ற ஒரு சூழலை அவருக்கு எதிரான செய்திகள் ஏற்படுத்துகின்றன. அதுவும் குறிப்பாக இந்த பாலியல் அவதூறு செய்திகள் அவருக்கு இன்னும் மக்களின் ஆதரவைத் தேடித் தருகின்றன என்பது தான் உண்மை!

இது போன்ற கெட்ட செய்திகள் அன்வாருக்கு மக்களிடையே நல்ல செய்திகளாக மாறுகின்றன!  அவருக்கு மக்களின் செல்வாக்கு இன்னும் அதிகரிக்கிறது என்பது தான் உண்மை! 

வர வேற்போம்!

No comments:

Post a Comment