Tuesday 17 December 2019

என்ன தான் இரகசியமோ...!


ம.இ.கா.வுக்கு  தலைவர்கள் வருவார்கள் போவார்கள். தலைவர்கள்  வருவதும் போவதும் ஒன்றும் புதிதல்ல. எல்லாக் கட்சிகளிலும் அது தான் நடந்து கொண்டிருக்கிறது. 

ஆனால் ஒரு சில கட்சிகளில் தலைவர்கள் வருவார்கள், போகமாட்டார்கள்! அப்படி 'போகமாட்டார்கள்'  கட்சிகளில் ம.இ.கா.வும் ஒன்று. துன் சாமிவேலு தலைவர் பதவிலிருந்து அவராகப் போகவில்லை. அவரைப் போக வைப்பதில் ஏகப்பட்ட குளறுபடிகள்! அவ்ருக்கு ஒரு சில பொறுப்புக்கள் கொடுத்த பிறகு தான் அவர் 'மனசின்றி' கட்சியை விட்டு வெளியேறினார்! 

அவருக்குப் பிறகு வந்த தலைவர்கள் நிலைமை வேறு.  இவர்கள் சும்மா பொழுது போக்குத் தலைவர்கள்! 

இப்போது இருக்கும் தலைவர் விக்னேஸ்வரன் தான் ம.இ.கா. வின் மறைக்க முடியாத, மறுக்க முடியாத தலைவர்!  இவர் தான் சாமிவேலுவின் அரசியலை முன் நின்று நடத்துபுபவர். சாமிவேலுவைப் போன்று எல்லா வகைகளிலும் இந்தியர்களைப் பிரதிநிதிப்பவர்!

சான்றுக்கு ஒன்றைச் சொல்லலாம். இப்போது நம் கண் முன்னே உள்ள ஒரு பிரச்சனை.  ஹூடுட் சட்டம். இது தேவை இல்லாத ஒரு சட்டம் என்பதாகப் பலரும் கூறி வருகின்றனர். 

ஆனால் விக்னேஸ்வரன் இந்த கருத்தில் வேறு படுகிறார். இந்தியர்கள் பயப்பட  ஒன்றுமில்லை என்கிறார்! இஸ்லாமியர்கள் பயந்தால் போதும் இந்தியர்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை என்கிறார்! அவரை ஆதரித்து ஒரே ஒருவர் கை தூக்குகிறார்.  அடுத்த தேர்தலில் அவருக்கு சீட் வழங்கப்படும் என நம்பலாம்!

நாம் இங்கு சொல்ல வருவது எல்லாம் அதே சாமிவேலு பாணி அரசியல் என்பது தான்!  அவரென்ன ம.இ.கா. மாநாடு கூட்டி அவர்களது கருத்தைக் கேட்டாரா? ஒன்றுமில்லை.  அவர் சொன்னால் சரி தான். அதனை இந்தியர்கள் கேட்க வேண்டும், அவ்வளவு தான்!

இப்போது இவர் 'சரி' என்கிற ஹூடுட் சட்டம் யாருக்காக?  அவர் ம.இ.கா இந்தியர்களுக்காக பேசுகிறாரா அல்லது மொத்த இந்திய சமுகத்திற்காக பேசுகிறாரா> இந்திய சமூகத்திற்காக பேசுகின்ற சக்தியை எப்போதோ அவ்ர் இழந்து விட்டார். 

இவர் தலைவராக இருக்க வேண்டும் என்பதற்காகவும், பாஸ் கட்சியிடன் கூட்டு சேர்ந்து மீண்டும் பதவிக்கு வர வேண்டும் என்பதற்காகவும் இந்த ஹூடுட் சட்ட ஆதரவு இவருக்குத் தேவைப்படுகிறது! அது நமக்கும் புரிகிறது. என்ன செய்யலாம்?

இப்படி மனநலம் பாதிக்கப்படுபவர்கள் இந்தியர்களைப் பிரதிநிதிக்காமல் விடமாட்டோம் என்று கங்கணம் கட்டிக் கொண்டு வந்தால், நம்மால் என்ன செய்ய முடியும்! ஆண்டவன் தான் இவர்களைக் காப்பாற்ற வேண்டும்!

No comments:

Post a Comment