Tuesday 31 December 2019

2019 ஸாகிர் நாயக்கிற்கு ஏற்றமிகு ஆண்டு!

மலேசியாவின் ஜாதகம் சென்ற ஆண்டு எப்படியாவது இருந்துவிட்டுப் போகட்டும்!

நாட்டுக்கு நல்லதோ கெட்டதோ அனைத்தும் பிரதமர் மகாதிர் உபயம்! 

நாட்டிற்குள் அடைக்கலம் புகுந்த இஸ்லாமிய சமயப் போதகர் - சமீபகாலத்தில் பெர்லிஸ்  பல்கலைக்கழகம் அவருக்கு அகில உலக இஸ்லாமிய மேதை என்பதாகப் பட்டம் சூட்டியிருக்கிறது - ஸாகிர் நாயக்கிற்கு சென்ற ஆண்டு மிக அற்புதமான ஆண்டு, மிகவும் ஏற்றமிகு ஆண்டு என்பதை  நாம் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது!

ஸாகிர் நாயக்கைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு கொடுக்க வேண்டியது  நமது கடமை. . அவர் ஓர் இஸ்லாமிய தீவிரவாதி என்பதாக அவரைப் பற்றிக் குறிப்பிடுகிறது இந்திய அரசு. அவர் இந்தியாவால் தேடப்படும் ஒரு குற்றவாளி. அவர் தீவிரவாதத்தை பரப்புகிறவர் என்கிறது இந்தியா. வங்காள தேசம் இன்னும் பல இஸ்லாமிய நாடுகள் அவரை தீவிரவாதி என்பதாகக் கூறி அந்த நாடுகள் அனைத்தும் அவரைப் புறக்கணித்து விட்டன. இந்த நிலையில் அவருக்கு அடைக்கலம் கொடுத்த ஒரே நாடு மலேசியா. இங்கு அவருக்கு நிரந்தர தங்கும் உரிமையை கொடுத்திருக்கிறது மலேசிய அரசு.

அவர் இங்கு காலடி எடுத்த வைத்த நேரம் அவருடைய ஜாதகம்  சற்று ஏறுமுகமாக ஏறிக் கொண்டிருக்கிறது.

இன்று அவர் மலேசியாவில் மிக முக்கியமான ஒரு மனிதராக நாட்டில் வலம் வந்து கொண்டிருக்கிறார்!  பொதுவாகவே இந்தியர்களைச் சீண்டுவது என்பது ஸாகிரின்  பொழுது போக்கு. அத்தோடு இந்து மதத்தைக் கேவலப்படுத்துவது அவருக்கு மிகவும் பிடித்தமான பொழுது போக்கு. இப்போது அவரே நேரடியாகச் செய்ய முடியாததால் சில இந்து இளைஞர்களை மதம் மாற்றி அவர்களை வைத்து இந்துக்களை, இந்தியர்களைக் கேவலப்படுத்தும் வேலையில் அவர் இறங்கியிருக்கிறார்! 

இவர் இந்துக்களைக் கேவலப்படுத்துவதை வைத்து அவருக்கு இஸ்லாமிய உலக மேதை என்பதாக பெர்லிஸ் பல்கலைக்கழகம் அவருக்கு பட்டம் சூட்டியிருக்கிறது.  இன்றைய நிலையில் இமாம்கள், சட்ட மேதைகள், முஃதிகள் அவரது உரையைக் கேட்க வரிசைப் பிடித்து நிற்கிறார்கள்! அவரிடம் பேச முன் பதிவு செய்கிறார்கள்! அந்த அளவுக்கு அவருடைய செல்வாக்கு ஓங்கி நிற்கிறது! வருங்காலங்களில் மலேசிய அரசியலை வழி நடத்துபவராகவும் அவர் தென்படுகிறார்!

வேலையோடு வேலையாக இங்குள்ள இந்து அரசில்வாதிகள் மேல் பல வழக்குகளையும் தொடர்ந்திருக்கிறார்! 

அவரின் பெயரில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளுக்கும் பிரதமரின் பின்னணி இருப்பதால் அவருடைய ஜாதகம் ஒங்கிய நிலையில் இருக்கிறது! 

இது 2019 - ம் ஆண்டு கணிப்பு.  இது 2020 லும் தொடருமா?

No comments:

Post a Comment