Friday 20 December 2019

நிரபராதியா...?

கம்போங் ஜாமேக் பள்ளிவாசலில், வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின்னர், முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், தனது மனைவி, பிள்ளைகள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்களின் முன்னிலையில் தான் ஏற்கனவே சொன்னபடி தனக்கும் கொலை செய்யபட்ட மங்கோலிய  அழகி அல்தன்துன்யா ஷாரிபுவுக்கும், அந்த கொலைக்கும்.  எந்தவொரு தொடர்பும் இல்லை என்பதாக சத்தியம் செய்திருக்கிறார்.


 இப்படி ஒரு சத்தியம் செய்யச் சொல்லி எந்தவொரு கட்டாயமும் இல்லாத நிலையில் அவரே தனது சுய விருப்பத்தின் பேரில் இதனைச் செய்திருக்கிறார்.  இதன் மூலம் தான் கடவுள் பக்தி உள்ள மனிதன் என்றும், கடவுள் பக்தி உள்ள ஒரு மனிதனால் இப்படியெல்லாம் செய்ய முடியாது என்பதைச் சுட்டிக் காட்டியிருக்கிறார். அது உண்மையே!

சத்தியம் செய்வதை அவ்வளவு சாதாரண விஷயமாக நாம் எடுத்துக் கொள்ள முடியாது.  அதுவும் பள்ளிவாசலில்.

நமக்கும் ஒரு கேள்வி உண்டு.  சத்தியம் செய்வது என்பது தங்களது மதத்தின் புனித நூலின் மேல் சத்தியம் செய்வதை நாம் கேள்விப் பட்டிருக்கிறோம்.  கிறிஸ்துவர்கள் தங்களது புனித நூலான விவிலியம்,  இந்துக்கள் பகவத்கீதை, இஸ்லாமியர்கள் திருக்குரான் - என்று இப்படித்தான் தங்களது புனித நூலின் மேல் சத்தியம் செய்வார்கள். ஆனால் நஜிப் அப்படிச் செய்யவில்லை.  அது சரியா, தவறா என்பது எனக்குத் தெரியாது. ஒரு வேளை இப்படியும் செய்யலாம், நான் அறியவில்லை.

எனக்கு ஒரு நெருடல் உண்டு. நஜிப் சத்தியம்செய்யும் போது "நான் பொய் சொன்னால் அல்லாவின் சாபம் என் மீது இறங்கட்டும்" என்பதாக அவர் சொன்ன அந்த வார்த்தை.  சில ஆண்டுகளுக்கு முன்னர், நஜிப் பதவியில் இருந்த போது, இந்த பிரச்சனை தீவிரமாக பேசப்பட்ட காலத்தில் நஜிப்பின் மனைவி ரோஸ்மாவின் பெயர் வெகுவாக அடிப்பட்டது.  மங்கோலிய அழகியின் கொலைக்கு ரோஸ்மா தான் காரணம் என்பதாக பேச்சு அடிபட்டது. அது எந்த அளவுக்கு உண்மை என்பது நமக்குத் தெரியாது. 

நஜிப் சத்தியம் செய்த போது "என் மீது இறங்கட்டும்" என்று தான் சொல்லுகிறார். தனது குடும்பம், தன்னைப் போலவே, சம்பந்தப்படவில்லை என்று காட்டிக்கிறாரோ!  நமக்கு உண்மை தெரியாது!

எப்படியோ,  இப்படி சத்தியம் செய்ததன் மூலம் தன்னை நிரபராதி என்கிறார் நஜிப். நீதிமன்றம் என்ன சொல்லுமோ!

No comments:

Post a Comment