Thursday 5 December 2019

செல்வாக்கு மிக்க ஒரே மனிதர்..!

இன்று  நாட்டில் செல்வாக்கு மிக்க ஒரே மனிதர் என்றால் அவர் இஸ்லாமிய சமயப் போதகர் ஜாகிர் நாயக் மட்டும் தான்!

ஒரு காலத்தில் இங்கும் அங்கும், நாடு நாடாய்,  ஓடிக் கொண்டும் ஒளிந்து கொண்டும் இருந்த ஜாகிர் நாயக் இப்போது இந்நாட்டில் ஓர் அரசரக்குரிய மரியாதையோடு நாட்டில் வலம் வந்து கொண்டிருக்கிறார்!

அது மட்டும் அல்ல.  வருங்காலங்களில் இந்நாட்டின் அரசியலை தீர்மானிக்கக் கூடிய சக்தியும் அவரிடம் இருப்பதாகவே நமக்குத் தோன்றுகிறது!

பெர்லீஸ் மாநிலத்தின் முப்தி போன்றவர்கள் அவருக்குப் பக்க பலமாக இருப்பதும் அவருக்குக் கூடுதல் பலத்தைக் கொடுக்கிறது. அதே போல அம்னோவின் உள்ள சில தரப்பினர் அவரை ஆதரிப்பதும் இப்போது அவர்களுக்குத் தேவையாக இருக்கிறது!

இதில் ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். இந்நாட்டில் பிறந்தவர்கள் யாராக இருந்தாலும் - பூர்வீகமான மலாய்க்கார்களோ அல்லது இந்தியர்களோ, சீனர்களோ - இவர்கள் எல்லாக் காலங்களிலும் நாட்டின் சமாதானத்தையே, அமைதியையே விரும்புகின்றனர்.

கூர்ந்து கவனித்தால் நாட்டில் பிரச்சனைகளை ஏற்படுத்துபவர்கள் வெளி நாட்டினரே. இவர்கள் தான் தங்களை  "மலாய்க்காரர்களை விட நாங்கள் தான் மலாய்க்காரர்கள்"  என்பதும் "இஸ்லாமை காக்க வந்த காவலர்கள்" என்பதும்  "மலாய் மொழியைக் காக்க வந்த மன்னவர்கள்"  என்பதும் இவர்களது செயல்பாடே!

அப்படி என்றால் இத்தனை ஆண்டுகளாக மலாய் மொழி காக்கப்பட வில்லையா,  இஸ்லாம் காக்கப்பட வில்லையா மலாய்க்காரர்களின் மாண்பு காக்கப்பட வில்லையா என்பது நமக்குத் தெரியும். ஆனால் எங்கிருந்தோ வந்த இவர்களுக்குத் திடீரென்று இவர்கள் தான் நாட்டைக் காப்பாற்ற வந்தவர்கள் போல வீர வசனம் பேசுவதும் அதனை சிலர் நம்புவதும் எப்படியோ ஒரு வேடிக்கை நடந்து கொண்டிருக்கிறது!

இவர்களின் வழியில் வந்தவர்கள் தான் ஜாகிர் நாயக்,  முகமது அஸ்ரி ஜைனல் அபிடின் போன்றவர்கள்.  இவர்களில் ஜாகிர் நாயக் ஒரு படி மேல்.  தன்னை இஸ்லாமிய அறிஞர் என்று கூறிக் கொள்ளும் இவர் தீவிரவாதம் இல்லாமல் இஸ்லாம் இல்லை என்று பேசுபவர்.  இப்படி பேசுவதால் பல இஸ்லாமிய நாடுகள் இவரை ஏற்றுக்கொள்ளவில்லை!  

பல நாடுகள் இவரை ஆபத்தானவர் என்று சொன்னாலும் மலேசியா இவரை ஆபத்தற்றவர் என்று ஏற்றுக் கொண்டது இவரது நல்ல நேரம் என்று தான் சொல்ல வேண்டும்.

இப்போது இவர் மலேசியாவில் மிகவும் செல்வாக்கு மிக்க மனிதராக விளங்குகிறார்!  வருங்காலங்களில் அரசியலிலும் இவர் பேர் போடலாம்! மலேசிய அரசியலில் எதுவும் நடக்கலாம்!

No comments:

Post a Comment