Monday 9 December 2019

எந்த வயதில் வரும்..?

துன் சாமிவேலு சுயநினைவை இழந்துவிட்டார் என்ற செய்தியைப் படித்த போது கொஞசம் தடுமாற்றம் ஏற்படத்தான் செய்தது! அவருக்கு வயது 82 என்பதை மறக்க வேண்டாம்.

ஆமாம், மனிதன் என்றால் ஏதோ ஒரு வகையில், ஏதாவது ஒரு வகையில் ஏதோ ஒரு வியாதியால் பீடிக்கப்படுவது என்பது ஒன்றும் புதிதல்ல. நம்மைச் சுற்றிப் பார்த்தாலே நமக்குத் தெரியும். நமது நண்பர்கள், நமது சுற்றங்கள் - பெரும்பாலானோர் எந்த வகையிலோ பாதிக்கப்பட்டிருப்பதை நாம் பார்க்கிறோம்.

இப்போது நமக்கு நினைவுக்கு வருபவர் நமது பிரதமர் டாக்டர் மகாதிர். அவருக்கு வயது 94. நமது இன்றைய அரசியலின் கதாநாயகன்!  இன்னும் அதே தெளிவு. இன்னும் அதே கிண்டல். இன்னும் அதே கடுமை.  ஆனாலும் தமது சுயநினைவை இன்னும் இழக்கவில்லை!  இன்றும் நாட்டை வழி நடத்திச் செல்வதில் தணியாத ஆர்வம  கரை புரண்டு ஓடிக்கொண்டு தான் இருக்கிறது!

அதனால் அவருக்கு ஒரு வியாதியும் இல்லை என்று சொல்ல முடியுமா? அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.  வியாதிக்கான மருந்துகளை எடுத்துக் கொண்டு அவரது வேலைகளை அவர் செய்து கொண்டு இருக்கிறார். சமீபத்தில் கூட ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவரது மூக்கில் இரத்தம் வழிந்ததே!  இன்றைய காலக் கட்டத்தில் பெரும்பாலான மனிதர்களின் நிலைமை இப்படித்தான்!  ஆச்சரியப்பட ஒன்றுமில்லை!

சுயநினைவு இழத்தல் என்கிற போது தமிழகத்தின் காலஞ்சென்ற முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஞாபகம் வருகிறது.  சொத்துப் பிரச்சனையின் போது அவர்  அடிக்கடி சுயநினைவை இழந்து போனார்! அதன் பின்னரும்  முதலமைச்சராக இருந்து, பின்னர் காலை இழந்து, இறந்த தேதியும் தெரியாமல் சமாதியானார்.  இறக்கும் போது அவருக்கு வயது 68.  அரசியல்வாதிகளுக்கு 68 என்பதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல.  ஆனாலும் அவருக்கு அப்படி ஒரு நிலைமை!

ஜெயலலிதாவின் சுயநினைவு இழத்தல் என்பதைப் பார்க்கும் போது துன் சாமிவேலுவுக்கும் அவருக்கும் ஓர் ஒற்றுமை தெரிகிறது. இங்கும் ஏதோ சொத்துப் பிரச்சனை!  ஆமாம் அதைத்தான் அவரது மகன் வேள்பாரி காரணம் காட்டியிருக்கிறார்!  

நல்ல வேளை டாக்டர் மகாதிருக்கு அப்படி ஒரு நிலை வரவில்லை. அதனால் அவரது வண்டி வலிமையாக ஓடிக் கொண்டிருக்கிறது!  சொத்து என்று வந்து விட்டாலே சுயநினைவும் போய்விடும் போலிருக்கிறது!

எது என்னவோ! அவருக்கு சுயநினைவு மட்டும் தான் முக்கிய பிரச்சனை.  மற்ற பிரச்சனைகள் எல்லாம் சராசரியாக மனிதர்களுக்கு உள்ள பிரச்சனைகள் தான்.  அவர் சுயநினைவு பெற பிரார்த்திப்போம்!

அவரது சிம்மக்குரலை மீண்டும் நாம் கேட்க வேண்டும்!

No comments:

Post a Comment