Friday 13 December 2019

அடுத்த தேர்தல் வரை....!


ஆகக் கடைசி செய்தி பிரதமர்  டாக்டர் மகாதிர், தனது பதவியில், அடுத்த ஆண்டு நவம்பர் 2020 வரை நீடிப்பார் என்பது தான்!

அதற்கு அவர் கூறியிருக்கிற காரணம் அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நடைபெறும் ஆசிய-பசிபிக் பொருளாதார மாநாட்டில் தன்னுடைய பங்களிப்பு அவசியம் என்றும் அதனால் அத்ற்கு முன்னர் பதவி ஒப்படைப்பு எதுவும் நடக்கப் போவதில்லை என்றும் கூறியிருக்கிறார்.

அதோடு கூட, வழக்கம் போல, தான் உறுதியளித்தபடி தனது பதவியை அன்வாரிடம் ஒப்படைப்பேன் என்றும் கூறியிருக்கிறார்.

நமக்குத் தெரிந்தவரை டாக்டர் மகாதிர் அடுத்த தேர்தல் வரை தனது பிரதமர் பதவியில் நீடிப்பார் என்றே தோன்றுகிறது.  அவர் ஒவ்வொரு முறையும் பதவியில் தொடர்வதற்கான காரணங்களை வைத்திருக்கிறார்!

இப்போது அவரது நேரம்.   அவர் எதனைச் செய்தாலும் நாம் தலையாட்ட வேண்டியது தான்! அவரை ஆதரிப்பதற்கென்றே ஒரு கூட்டம் உள்ளது. அவரை எதிர்ப்பதற்கும் யாருக்கும் துணிவில்லை!  அப்படி துணிந்து யாரும் குரல் கொடுத்தால் இருக்கிற நிலைமையும் மோசமாகிவிடும்!

இப்போதைய அரசாங்கம் பதவி ஏற்றதிலிருந்து  மக்களுக்கு எந்த ஆதாயமும் இல்லை என்பதாகப் ப்ரவலாக பேசப்படுகின்றது என்பதில் உண்மை இல்லாமல் இல்லை. மீண்டும் முன்னாள் பிரதமர் நஜிப்பை தான் இன்றைய அரசாங்கமும் ஞாபகப்படுத்துகிறது! டாக்டர் மகாதிரோ முந்தைய அம்னோ காலத்து அரசியலையே அவர் பின்பற்றுகிறார் என்று தான் பேசப்படுகிறது! எந்த மாற்றமும் இல்லை. 

அதுவும் இந்தியர்களைப் பழி வாங்குவதில் டாக்டர் மகாதிர் முன்னணியில் நிற்கிறார்.  மக்களுக்கு வாக்களிக்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை! டாகடர் மகாதிர் தெரிந்து செய்கின்ற தவறுகள் பக்காத்தான் தலைவர்களைத் தடுமாற வைக்கிறது!

பிரதமர் மகாதிர் தொடர்ந்து பதவியில் நீடிப்பார் என்பதில் எந்த ஐயமுமில்லை. ஆனால் அவர் தொடர்ந்தாற் போல அன்வார் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களைக் கொண்டு வருகிறார் என்பது தான் இப்போதைய பிரச்சனை.  அவர் பதவியில் இருக்கும் வரை இன்னும் எத்தனை பாலியல் குற்றச்சாட்டுக்களை அன்வார் மீது கொண்டு வருவார் என்பது தான் தெரியவில்லை.  மக்கள் அன்வாரை வெறுக்க வேண்டும் என்று திட்டமிட்டே அவர் செயல்படுகின்றார்  அதனால் தான் டாக்டர் மகாதிர் "மக்கள் அன்வாரை ஏற்றுக் கொள்ளாவிட்டால்"  என்கிற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துகிறார்!

"குரங்கு கையில் பூமாலை" என்கிற பழமொழி தான் ஞாபகத்திற்கு வருகிறது!

No comments:

Post a Comment